Showing posts with label குசால்பாவு. Show all posts
Showing posts with label குசால்பாவு. Show all posts

Tuesday, November 26, 2013

குசால்பாவு

விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை. 
இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், ஷீரடி சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் ஸித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.  இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள். 

      ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ''குதிரை வண்டியில் ராஹாதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.
 ''அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. 'பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்.
பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாவுவைச் சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தார். 
பாபாவின் செய்தியைக் கேட்ட குசால்பாவு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், நான் இப்பொழுதுதான் தூக்கத்தி­ருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார். மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாகப் படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார்.
அவர் என்னிடம் சொன்னார்,  'உடனே கிளம்பி ஷீரடிக்கு வாரும் என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே என் மகனிடம் இச் செய்தியைச் சொல்லியனுப்பினேன்.
 ''ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது. தீக்ஷிதர் கேலி­யாகச் சொன்னார், ''ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்.
 ''நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷீரடிக்கு வந்தார். 

 தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...