Showing posts with label சீரடி சாயி. Show all posts
Showing posts with label சீரடி சாயி. Show all posts

Monday, June 11, 2018

வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய்



என் அன்பு குழந்தையே, உன் மனமானது அன்னப் பறவையாய் இருக்கின்றது. அது தான் தண்ணீரையும் பாலையும் தனியே பிரித்துக் குடிக்கும். அதே போலவே தான் உன் வாழ்க்கையை நீ பார்க்கின்றாய் . துன்பத்தையும், இன்பத்தையும் பார்க்கின்றாய். ஆனால், உனக்கு தெரியுமோ, துன்பத்தில் உனக்கு நிச்சயமாக இன்பம், சிறிய அளவு பங்கு இருக்கும். அதே நேரத்தில் இன்பத்திலும் துன்பம் தோன்றும் இரண்டுமே பிரியாது. அவற்றை நீ புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை என்னும் கடலில் நீ சுலபமாக நீந்தி அதற்கான அர்த்தத்தை பெறலாம் அதற்கு பதிலாக நீ கடல் என்றே தெரியாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படி நெறிப்படும்? வாழ்க்கை என்பது நெறியுடன் வாழ்வது தான் அர்த்தமுள்ள உண்மையான வாழ்க்கை உனக்கு கிடைத்த இந்த அனுபவம் என்னும் பொக்கிஷ பெட்டகம் மிகப் பெரிய பரிசு. அதை உனக்கு நான் அளித்துள்ளேன்.  உன் வாழ்க்கை என்பது சமுத்திரம். அதனால் சமுத்திரத்தை உன் சாய்அப்பா உனக்காக உருவாக்கியுள்ளேன். அதில் நீ வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Thursday, May 24, 2018

பூரண சரணாகதி அடையுங்கள்



என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.

Monday, May 21, 2018

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்



எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது.

Monday, May 7, 2018

அனைத்தையும் நான் அறிவேன்



"அன்புக் குழந்தையே... ஏன் என்னை விட்டு தள்ளி நிற்கிறாய் உன் கஷ்டங்கள் அனைத்தையும் நான் அறிவேன் , என்னை உன் மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் நேசிக்கிறாய் நினைக்கிறாய் , அதே நேரத்தில் உன் துன்பங்களை நினைத்து உனக்குள் புலம்பி கொண்டு என்னை விட்டு ஒரு அடி தள்ளி நிற்கிறாய் , நீ உலகியில் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடு, ஆனால் நீ செய்கின்ற எல்லா விஷயங்களையும் நான் அறிவேன்,
சில நேரம் நீ ஏன் இப்படி பேசுகிறாய் நடக்கிறாய் என்பதையே கூட உன்னால் உணர முடியவில்லை, உன்னுள் தேவையில்லாத குப்பைகளை நீ தூக்கி கொண்டு நடக்கிறாய் , அதனால் தான் உன்னில் இருக்கும் விஷயங்களை கூட உன்னால் உணர முடியவில்லை,  நீ செய்வதாக நினைக்கிற அனைத்தும் உன் சாய் அப்பாவான நான் தான் செய்கிறேன், நீ பேசுவதாக நினைக்கும் அனைத்துமே நான் தான் உன் இடத்தில் இருந்து பேசுகிறேன், ஏனென்றால் நீ வெறும் பொம்மலாட்த்தில் இசைகேற்ப ஆடும் பொம்மை தான் நீ ,உன் சாய் அப்பா தான் அதை ஆடி வைக்கும் கருவி ,அதனால் நீ பயப்பட தேவையில்லை உன்னை நல்ல வழியில் வழி நடத்தி செல்வேன் ,உன் அம்மாவாக அரவனைத்து, அப்பாவாக நல்லது கெட்டதை அறிவுறுத்தி, உன்னை என் கண்ணுக்குள்ளும், மனதிலும் வைத்து பாதுகாப்பேன்.."ஓம் ஸ்ரீ சாய் ராம்...

ஒரு கிண்ணம் மோர்



ஒருமுறை கூட்டத்திலிருந்த போது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார்.  அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார்.  அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது.  ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார்.  மிகவும் சுவையாக இருந்தது.  அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு.  இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார்.  அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார்.  பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார்.  ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.
இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும்.  அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார்.  ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார்.  பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.

Sunday, May 6, 2018

உனக்குப்பதிலாக நான் தாங்குவேன்!



என் அன்பு குழந்தையே உன் மனக்குமுறல், உன் அழுகை இவை அனைத்தும், என் காதில் எப்படி விழாமல் இருக்கும். அந்த நேரத்தில் உன் மனதில் தோன்றிய வலி, எனக்கு என் பிள்ளையான உன்னை நினைத்து பயம் ஏற்படுகிறது. என் பிள்ளையின் வாழ்க்கையை இப்படி வலி உள்ளதாய், மாயை ஆட்டி வைத்து, தற்க்காக சிரிக்கின்றோம், எதற்காக அழுகின்றோம் என்பதை கூட உணராமல், போகிற நேரத்தில், வாழும் கட்டாயத்தில் என்கின்ற உணர்வு, என் பிள்ளைக்கு இப்போதே தோன்றுகிறதே என்று என் மனம் அழுகிறது. வாழ்க்கையில் உள்ள உயிரோட்டத்தை என் பிள்ளை கடக்கும் தருவாயில் மனதில் கஷ்டங்ளை சுமந்து வ்வொரு நாளையும் இப்படி கடக்கின்றதை பார்த்து, என் கண்ணில் வேதனையால் கண்ணீர்  கொட்டுகிறது. உனக்கான பக்கபலமாய் நான் இருக்கிறேன், சில நேரங்கள் நான் உன் சாய் அப்பா மௌனம் காக்கின்றேன். அதற்குக்காரணம் என் மௌனம் உனக்கு சில விஷயங்களை புரிய வைக்கும். அது உன் தவறுகளைச் சரி செய்யவும் உதவும். மனித  வாழ்க்கையில் ஒரு சிறிய மௌனம், நிறைய விஷயங்களை உணர்த்தி வாழ்க்கைக்கு பக்குவத்தை ஏற்படுத்தும்  என்றுதானே உனக்குத்தெரியும்.  ஆனால் இன்று வலியால் நீ அழுகையில் நீ உன் மனதின் வேதனையையும் கஷ்டத்தையும் வெளியில் குமுறலாய் கொட்டித் தீர்த்தாய்.
அதைப் பார்த்து உன் சாய் அப்பா ஆகிய நான் அதிர்ந்து என் செய்வது என்று அறியாது திகைத்து உள்ளேன். என் பிள்ளையின் சந்தோஷம் தான் என் சிரிப்பு. என் பிள்ளையின் கஷ்டம் தான் எனக்கு ஏற்பட்ட வலி. அதை உனக்குப்பதிலாக நான் தாங்குவேன்.
என் குழந்தையே ரு போதும் உன் சாய் அப்பா உன்னை தனித்து விட மாட்டேன்.  உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை. என் குழந்தையின் வலி பனி போல் வாழ்க்கையில் இருந்து தூரப்படுத்தும் வெளிச்சத்தின் சூரியனாய் நான் உன் உயிரான சாய் இருப்பேன். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

பாபா காட்டிய மூன்று உலகங்கள்



சத்சரித்திரம் பதிவு செய்யாத பல அற்புத லீலைகள் உள்ளன. அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.
பாபாவின் முதன்மை பக்தர் என்று சொல்லிக்கொள்ளும் பெருமை சாமாவுக்கு உண்டு. கிருஷ்ணனுக்கு அர்ஜுனன் என்றால், பாபாவுக்கு சாமா. குழந்தைத்தனமாகவும், உரிமையோடும் பாபாவிடம் உறவு கொண்டாடுவார் சாமா.
சாமாவுக்கு சத்தியலோகம், வைகுந்தம், கைலாயம் போன்றவை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதைப் பற்றி பாபாவிடமே கேட்டார். பாபா “இருக்கிறது என்று சொன்னதும், ’ ஹரே தேவா! அதை ஏன் இன்னும் என்னிடம் காட்டவில்லை?’ என்றார் சாமா.
அவையெல்லாம் மேலான ஐஸ்வர்யம் உள்ள இடங்கள். அவற்றை நம்மால் காணக்கூட முடியாது என்றார் பாபா. அதை எப்படியேனும் நான் பார்த்தாக வேண்டும் என சாமா அடம்பிடித்தார். உடனே சாமாவை கண்களை மூடச் சொன்னார் பாபா. சாமா கண்களை மூடியதும் அவருக்கு ஞான திருஷ்டி உண்டாயிற்று.
முதலில் வைரம் போன்ற உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கும் ஒருவரையும் பார்த்தார் சாமா. அவரது இரு பக்கங்களிலும் வரிசையாக சிம்மாசனங்களும், அவற்றில் தேவர்கள் மற்றும் ரிஷிகள் பலரும் அமர்ந்திருந்தார்கள்.
சாமா உன் கண்களைத் திற என்றார் பாபா. கண்களைத் திறந்தபோது, மீண்டும் மூடிக்கொள் என்றார்.
இப்போது சாமா வைகுந்தத்தையும் அதில் நாராயணன் லட்சுமி தேவியையும் தரிசித்தார். இங்கும் பல அதிசயங்களைக் கண்டார்.
அடுத்து அவரை கண்களைத் திறந்து மூடுமாறு பாபா சொன்னபோது, சாமா கண்களைத் திறந்து மூடினார். இந்த முறை அவர் கைலாயத்தை தரிசித்தார். இவற்றையெல்லாம் தரிசித்த போது சாமாவுக்கு பயம் வந்துவிட்டது. திகிலோடு கண் திறந்தார். அவரைத் தட்டிக் கொடுத்த பாபா, 'சாமா, இவையெல்லாம் நமக்கு வேண்டாம். நமது வழி முறைகள் வழக்கத்திற்கு மாறானதுஎன்றார்.

Saturday, May 5, 2018

என்னை அணுகுவது எப்படி?



என் மீது நம்பிக்கை முழு அளவில் இருந்தால், நீங்கள் பொறுமை காக்கவேண்டும். என்னை ஏன் கைவிட்டீர்கள் எனக் கேட்டு, உன் அருகில் நான் இருக்கும்போதே, நீங்கள் தூர விலகிச் செல்லாதீர்கள்.
எந்த நேரத்திலும் முடியாது, கூடாது, நடக்காது, நடக்கவில்லை, நேரவில்லை, வாய்ப்பு இல்லை, முடியவில்லை, பொறுமையில்லை என இல்லை, இல்லை என்ற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்தும், மனதிலிருந்தும் முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.
நாளை தருவார், அடுத்த ஆண்டு தருவார், இனிமேல் செய்வார் என்று என் அற்புதத்தை நீங்கள் தள்ளிப்போடாதீர்கள். நான் எப்போது செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க விரும்பினால் இப்போதே செய் என உறுதியோடு கேளுங்கள்.  
ஓம்ஜெய்சாய்ராம்

எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்



"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை.  இப்போது உனக்குக் கவலையில்லை.  என்மீது முழு நம்பிக்கையையும் வை.  நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!"
"ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம்.  எனவே தங்கள் முன் வீழ்ந்து பணிகின்றோம்.  எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்.  பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன.  எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்"
                                                                                                                 சாயி சத்சரிதம் அத்தியாயம்-48

Friday, May 4, 2018

அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா எடுத்துரைத்தது



நீங்கள் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங் கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது   என்றார் மகான் சீரடி சாய்பாபா..
பசியோடிருக்கும் ஒருவனுக்கு வயிறு நிறை, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் போதும் என்று சொல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்கு மீண்டும் பசிக்கவே செய்யும். பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.
நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.. வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது. அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம். ஆதலால் நண்பர்களே நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணி யாற்றுவோம்.
ஓம் ஸ்ரீசாயிராம்.

ஆசியாவின் மிகப்பெரிய சமையற்கூடம்



சீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்தின் மூலம் நாள் தோறும் 40, 000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  11500 சதுர அடியில்  பக்தர்கள் அமர்ந்து  சாப்பிட இட வசதி செய்யப்பட்டுள்ளது. 73 பெரிய குழி ஆடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தின் மூலம்  நாள் ஒன்றுக்கு 1800 kg நீராவி உருவாக்கி 2000 kg அரிசி மற்றும் பருப்பு சமைக்கப்படுகிறது. மேலும் 2000 kg காய்கறிகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் மூலம் சமைக்கப்படும்  சமையல் கூடம் ஆசியாவிலே இதுதான் பெரியது என்ற பெருமைப்பெற்றது.

Thursday, May 3, 2018

இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.



(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கப்படுகிறேன். சிலருடைய தேவை செல்வம், சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்துப்போகிறேன்;  ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன். எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா? என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்: பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா: ஆஹா! உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது. நானும் நீயும் வேறல்ல: கர்மங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தர்க்கம் செய்யவேண்டாம்.
ஜீவர்களுக்கு நன்மை உண்டாக்கவே கர்மங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. யாருக்கு எது நலமோ அது முன்பாகவே தீர்மாணிக்கப்பட்டுள்ளது. நல்ல கர்மங்களை அனுசரிப்பதன் மூலமே கர்மா நிச்சயமாகக் கரைந்து போகிறது. வேதங்களாகட்டும், சாத்திரங்களாகட்டும் , அதிகமாக எதைப்பற்றி விவரமாகக் கூறியுள்ளதோ அவை நன்மையளிப்பவையே என்பதை மறக்க வேண்டாம். அப்படிப்பட்ட கர்மங்களை அனுசரிப்பதில் வெளிமுகமாக நீ கர்த்தா, கர்மா, கிரியா போல தென்பட்டாலும் அந்த திரிகரணங்கள் "நானே" என்பதை மறக்காதே. கர்த்தா, போக்தா, சம்ஹர்த்தா என்ற மூன்று காரியங்களும் நானாகவே இருந்தேன் என்ற விஷயம் உன் மனதில் இருக்கும்போது பலனுக்காக சகஜமாகவே நீ ஆசைப்படமாட்டாய். அந்த பலனும் கூட நானே. ஆகையால் எப்போதும் என்னையே நினைத்து தான் செய்யும் காரியங்களை எனக்கு அர்ப்பணம் செய்து, யார் காரியங்களை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு என் உதவி, கிருபை, ரட்சனை எப்போதும் இருக்கும். இக் காரணத்தால் என்னை ஒவ்வொரு கணமும் ஸ்மரித்து வந்தால், அவர்களுடைய கர்மங்கள் என் பாதங்களில் சரணடைகின்றன. நான் சாயி சொரூபமே என்ற பாவம் வளர்த்துக்கொள். நானும், நீயும் வேறல்ல நீ என்னுடைய பிரதிபிம்பமே. நீ காண்பதெல்லாம் என் சொரூபமே என்ற நம்பிக்கை இருந்தால் நான் உன்னுடையவனே

பூஜ்ய ஶ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் அனுபவம்....


ஸ்வாமிஜி ஓரிடத்தில் குறிப்பிடுகையில் பின்வருமாறு எழுதுகிறார்.  "நான் சீரடியில் பாபாவின் சமாதியின் முன்பு அமர்ந்துக் கொண்டு, பாபா என்னைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதினேன். பாபா உண்மையிலேயே என் குரு என்றால், அதற்கான அறிகுறிகளை அவர் எனக்குக் காட்டவேண்டும்  என்று தீவிரமாக நினைத்தேன். நேரிடையாக அல்லாவிட்டாலும்,  ஒருவேளை கனவில் கூறுவாரோ என்று எண்ணி, அந்த எண்ணத்தையும் தள்ளிவிட்டேன்.
"பாபா, உனக்காக அற்புதங்கள், உன்னிடம் செய்து காட்டவேண்டும் என்று நினைக்கிறாயா ?" என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அப்பொழுது சமாதி மந்திரில் ஒரு சிட்டுக் குருவி பறந்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். தான்தான் அந்த இடம் முழுவதற்கும் எஜமானர் என்ற எண்ணத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பாபாவின் சமாதியை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.
பாபா என்னைத் தன்னுடையவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அறிகுறியாக, அந்த சிட்டுக்குருவி என் தோள்கள் மீது வந்து அமரவேண்டும்  என்று நினைத்தேன் . என்ன அசட்டுத்தனமான எண்ணம்!!. அந்தச் சிட்டுக்குருவியின் மூலம் பாபா என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
இதோ! அந்தச் சிட்டுக்குருவி என் தோள்களின் மீது வந்து அமர்ந்தது. என் உடல் நடுங்கியது. அதன் பிறகு அது அருகில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பறந்து போய்விட்டது. நான் உணர்ச்சிப்பெருக்கால் திக்குமுக்காடிப் போனேன். நான் பெருமகிழ்ச்சி  பெற்று முழுமையான மனநிறைவைப் பெற்றேன். அந்த மாதிரித்தான் நான் என் குருவைக் கண்டேன் .பாபாவுக்கு இனணயானவர் "பாபாவே தான்".

Tuesday, June 27, 2017

உதி விதியை மாற்றும்


துகாராம் சீரடியில்  விவசாயம் செய்து வந்தார். 1912ம் ஆண்டு சீரடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு அங்கே வேலை கிடைக்கும் எனப் புறப்பட்டார்.
கோபர்கான் சாலையில் செல்லும்போது, பாபா அவரது கழுத்தில் தன் கையைப்போட்டு போகாதே என்றார். ஆனால் துகாராம்பாபாவின் வார்த்தையினை கண்டு கொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். 
வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் நிற்கவே இல்லை. தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது அவரே சொந்தக்காரர்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.
பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார். காய்ச்சல் நிற்கவில்லை. 45 நாட்கள் தொடர்ந்தது. உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்பச் சொன்னார். உதியை இட்டுக் கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...