Showing posts with label சீரடி சாயிபாபா. Show all posts
Showing posts with label சீரடி சாயிபாபா. Show all posts

Sunday, May 27, 2018

அப்பாவாக என்றும் துணை நிற்பேன்



என் அன்பு குழந்தையே, இன்று உன் கண்களில் சந்தோஷத்தின் கண்ணீரை கண்ட உன் சாய் அப்பாவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .சந்தோஷத்தில் உன் சாய் அப்பா ஆடிக் கொண்டு இருந்தேன். இன்றைய நாளுக்காக நீ கண்ட கனவு, என்னைப் பார்ப்பதற்கு நீ வந்ததில், எனக்கும் என் குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. இன்று குரு பூர்ணிமா. என் கடவுள் என் வாழ்க்கை என் உயிர் என் குரு சாய்தேவா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று என் துவாரகமாயீக்கு வந்து என் குழந்தை ஓவ்வொரு நிமிடம் சாய்அப்பா என்று அழகாக உள்ளத்தில் இருந்து உச்சரித்து அன்பு மழையில் உன் சாய்அப்பாவை திகைக்க வைத்து விட்டாய் 
உன் கனவில் என் உதி மூலமாக உன்னை ஆசிர்வதித்தேன் நேரில் இன்றும் என்றும் என் ஆசிர்வாதம் எப்போதும் என் குழந்தைக்கு உண்டு ; இன்று என்னிடம் நீ கேட்டது  சாய்அப்பா உங்கள் குழந்தையாய் மாணவர்களாய் இன்றைய நாள் முழுமை அடைய நான் விரும்புகிறேன்  என்ற உன் எண்ணத்தை உன்  மனதில் குடியிருக்கும் உன் சாய் அப்பாக்கு எப்படி தெரியாமல் இருக்கும் இன்று குரு தினம் குருவின் போதனையும் வார்த்தையும் குருவின் நேரடி ஆசிர்வாதத்திற்கு சமம் அதை நீ மனதோடு புரிந்து உணர்ந்து உன் கண்களில் தெரிந்த நிறைவிற்கும் ஆனந்ததிற்கும் அழவே இல்லை சந்தோஷத்தில் கண்ணீரும் சிரிப்புமாய் இன்று உன்னை பார்க்கையில் என் மனம் ஆனந்தத்தில் அலை மோதியது உன் மனதில் இருந்த குழப்பத்தை நான் அகற்றி விட்டேன் என் சாய்அப்பா தான் என் குரு அவர்கள் மீது வைத்த நம்பிக்கையும் பாசம்  அன்பு பக்தி வேறு இடத்தில் வைக்க இயலாது என் வாழ்க்கையின் அகண்டமாய் என் பரபிரம்மாய் இருப்பது என் சாய்அப்பா தான் என்று நீ சொல்லும் போது உன் அன்பின் கடல் எல்லையற்றது என்றே நான் உணர்ந்தேன் உன் சாய்அப்பா உனக்கான உபதேசத்தை உனக்கு கூறுவேன் யார் மூலமாகவோ என்று உனக்கு தெரியும் அதே போலவே  தான் இன்று நடந்து இருக்கிறது  உன் மனதில் எல்லா மனதிலும்  நான் உன் சாய்அப்பா இருப்பேன் என்பதை நீ அறிவாய் அதன் பொருட்டாய் இன்று உனக்கு அதை நிகழ்த்தினேன் அதை புரிந்து நீ உன் மனதில் அச்சிட்டு
கொண்டாய் உன் சாய்அப்பாவி்ன் மனதில் நீ குடியேறி விட்டாய் இன்று உனக்கு அதை பூவின் செய்கை மூலமாக இன்று உணர்த்தினேன் இனிமேல் நீ என்
பொறுப்பு நீ எதற்கும் பயப்படாதே எல்லாம் சுகமாக நடக்கும் உன் வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும் எல்லாருக்கும் நல்லதை நினை நல்லதை செய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் கருவிலும் என் நெஞ்சிலும் என் கண்களில் சுமந்து இந்த சம்சாரம் என்ற கடலை கடக்க உனக்கு நான் கடலில் செல்பவர்களுக்கு எந்த திசைக்கு செல்ல வேண்டும் என்று உதவுதற்கு நிற்கும் கலங்கரை விளக்கமாக உன் சாய்அப்பா அறனாய் துணை நின்று என்றும்  உன்னை காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Saturday, May 5, 2018

எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்



"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை.  இப்போது உனக்குக் கவலையில்லை.  என்மீது முழு நம்பிக்கையையும் வை.  நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!"
"ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம்.  எனவே தங்கள் முன் வீழ்ந்து பணிகின்றோம்.  எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்.  பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன.  எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்"
                                                                                                                 சாயி சத்சரிதம் அத்தியாயம்-48

Friday, November 24, 2017

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்!!!





      சிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுமானால், அதற்கு வ்வித அவசியமுமில்லை என்பதே பதில். 
         ராமனிடமிருந்தோ, அல்லது தனது வேறு எந்த இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க, தான் வணங்கும் அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. 
                 பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குலதெய்வம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. 
                      தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு, தனக்கு  வேண்டிய அளவு எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி, அவரை வேண்டினால், எதிர்பார்த்த பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார்.    
              பாபா அவரது விசுவாசங்களில்  குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பதும் சேருகிறது. அத்தகைய சேருகின்ற விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும்  மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.

Thursday, September 21, 2017

உன்னிடம் கடன் வாங்கியவர் தாமாக வந்து தருவார்

பாபாவின் பக்தர் ஜோக், அவுரங்காபாத்தில் வாழ்ந்தவர். ஒருவருக்கு 1400 ரூபாய் கடன் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் கடன் திரும்பவரவில்லை. கொடுத்த கடனை திரும்பக் கேட்டுச் செல்ல நினைத்தார். இதை அறிந்த சாயி பாபா, “கடனை வசூலிக்க நீ செல்லவேண்டாம்; கடன் வாங்கியவரே இங்கே தாமாக வருவார்என்றார்.
நேரில் போய்க்கேட்டும் தராதவன், தானாக எப்படி வந்து தருவான்?” என ஜோக் பாபாவிடம் கேட்டார்.
உன் பணம் எங்கே போய்விடும்? போய் வீட்டில் அமைதியாக இரு, தாமாகத் திரும்பவரும்என்றார் பாபா.
ஜோக் வருத்தத்துடன், “நான் மூவாயிரம் ரூபாயை இழக்கவேண்டும் என்கிறீர்களா?” என்று கூறிவிட்டு, பணமில்லாமல் நாளை முதல் நான் எப்படி வழிபாடு, ஆரத்தி, பூஜை போன்றவற்றை செய்வது? பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் நேரில் சென்றாலே தராதவன், தானாக எப்படி வருவான்? ஒரு வழக்குத் தொடுத்தாலன்றி அவன் வழிக்கு வரமாட்டான்என்றார்.
சரி, இப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிடுஎன்றார் பாபா. ஜோக் அதைப்பற்றி பேசவில்லை.
சில நாட்கள் சென்றதும், கடன் வாங்கியவர் வந்து ஜோக்கிடம் தான் முதலை மட்டும் தந்து விடுவதாகவும், வட்டியைத் தர இயலாது என்றும் கூறினார். வட்டியையும் சேர்த்துத் தந்தால்தான் வாங்குவேன் என்றார் ஜோக்.
அவசியம் இருந்தால் ஒழிய வட்டி வாங்கவேண்டாம். அதனால் அனைத்துப் பலன்களும் போய் விடும்என்றார் பாபா.
பிரார்த்தனைக்கு வருவோரில் பலர், “கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கிக் கொடுத்தேன். வாங்கியவர் ஏமாற்றி விட்டார்என்றோ, எனது மனைவிக்குத் தெரியாமல் கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்என்றோ, எங்களிடம் வாங்கியவர் ஏமாற்றிவிட்டார்என்றோ கூறுவார்கள்.
அவர்களிடம், “பொறுமையாக இருங்கள், பணத்தை அவர் ஏமாற்றவில்லை, பாபா வாங்கி வைத்திருக்கிறார். உரிய நேரத்தில் தந்துவிடுவார்  என்று கூறி அனுப்புவேன்.
எனக்கே இந்த மாதிரி இழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. பாபாவின் பணம் சுமார் பதினோறு லட்ச ரூபாய் இப்படி வெளியே இருக்கிறது. என்னை ஏமாற்றவேண்டும் என்றோ, என் மூலம் பிறரை ஏமாற்ற வேண்டும் என்றோ கணக்குப்போட்டு வேலை பார்த்தவர், கையிருப்புகளைத் தொலைத்துவிட்டு கடன்காரனாகச் சுற்றுவதை பாபா காட்டுவார்.
என்னிடம் சொல்வார்: உனக்கு கையிருப்பு, சேமிப்பு, எதிர்காலத் திட்டம் இவையெல்லாம் வேண்டா. கடந்த காலத்தில் ஏற்பட்டவைகளை நினைத்து என் மீது பாரத்தை வை. நானே உன் நிகழ்காலத்தை கவனிக்கிறேன், எதிர்காலத்தைபொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். வருவாய்இல்லாதது போலிருந்தாலும் பத்திரிகையைத்தொடர்ந்து நடத்த உதவுகிறேன். இதைத் தாண்டி உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்பார்.
அதேபோல, “உன்னிடம் பெற்றவர் திரும்பத்தராதவரையில் அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை வைத்துக்கொண்டே இருப்பேன்என்றும் கூறுவார். இதனால்தான் உண்டியல்பணத்தை கூட கோயில் செலவு போக, மீதியை கீரப் பாக்கத்திற்காக செலவிட்டு வருகிறேன்.
என்னை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு அவதூறு பரப்பி, அதன் மூலம் ஒருசிலரை எனக்கு எதிராகச் செய்தவர்கள் கூட எந்த ஒரு பலனையும் அனுபவிக்க முடியாதபடி பாபா பார்த்துக்கொள்கிறார். எனக்குச் செய்த அதேபாபா உங்களுக்கும் செய்வார், பொறுமையோடுகாத்திருங்கள்.

உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது!



நான் பாபாவை எனக்கு தெரிந்த அளவில் நன்றாகத்தான் வணங்குகிறேன், ஆனால் அவர் எனக்கு மட்டும் சோதனையைத்தான் தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பாபாவினை வணங்கும் பல பக்தர்கள் தவிக்கிறார்கள்.  சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.
அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அந்த சாதனையை வெற்றியாக்க சோதனைகள் தரப்படும். சுகத்திற்குப் பிறகு துக்கம் வரும் என்பதை புரியாதவர்கள்தான் சுகம் வந்தபோது அதை இன்முகத்தோடு ஏற்று களிக்கிறார்கள். துக்கம் வந்ததும் தாளாமல் அழுகிறார்கள்.
துக்கத்திற்குப் பிறகு வருகிற சுகம் கடைசி வரை நிலைத்து நீடிக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளும் படிப்பினையைத் தருவதற்காக பாபா தன் பக்தனுக்குத் சோதனைகளைத் தருகிறார்.
நமக்கு வர வேண்டியவைகளை வரவேற்றாலும், அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதே சோதனையின் நோக்கம். சோதனைகள் நம்மை திடப்படுத்த வருகின்றன என்பதை உணர்ந்திட வேண்டும். உதாரணக் கதை ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்:
ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.
பையன் சொன்னான்: அப்பா நான் போய் திருடிவருகிறேன்என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென திருடன், திருடன் என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.
சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த உரிமையாளர், அந்தப் பெட்டியின் மீது  அமர்ந்து கொண்டான். இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்து போன நிலையில் பையன் பெட்டிக்குள்ளிருந்து எலி வருடுவதுபோல பெட்டியை வருடினான். பெட்டியின் உள்ளே எலி இருப்பதாக நினைத்து உரிமையாளன் பெட்டியைத் திறந்தபோது, அந்த பையன் சர்ரென எழுந்து பொருளோடு தப்பி ஓடினான். உரிமையாளர் திகைத்தான்.
நேராக வீட்டுக்கு வந்தான் பையன். அங்கே ஓய்வாக இருந்த அப்பாவிடம், “ஏம்பா என்னை காட்டிக்கொடுத்துட்டு ஓடி வந்துட்டே?” எனக்கேட்டான். அப்படி செஞ்சதாலதானே நீயா தப்பிக்கிற வழியைக் கண்டுபிடிச்சு தப்பிச்சு வந்தே -  இல்லேன்னா திருடத் தெரிந்த உனக்கு தப்பிக்கும் வழி தெரியாமல் போயிருக்குமே!என்று பதில் சொன்னான் அப்பா.
கதை புரிகிறதா?
ஒரு பிரச்சினையிலிருந்து நீயாகத் தப்பிக்கவே சோதனையை கடவுள் அனுமதிக்கிறார். சோதனை நேரத்தில் சாயி பற்றி சொல்லிக் கொண்டிருப்பவர்களின் சங்கத்தை நாடும்போது, அச்சம், தயக்கம் போன்றவை நீங்கி உபாயம் பிறக்கிறது. இதனால்தான் துன்பம் வரும்போது இறை அடியார்களின் சத்சங்கத்தை நாடுங்கள் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
சோதனை என்பது உனக்குக் குழந்தை இன்னும் பிறக்க வழியில்லாமல் கோயில் குளங்களைச் சுற்றுவதாக இருக்கலாம். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவமனைக்கு அலைந்து லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து இன்னும் பலன் கிடைக்காத நிலையாக இருக்கலாம். தைரியத்தை விடாதே! அவரைப் பற்றிக்கொள், நிச்சயம் பலன் கிடைக்கும்.
சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட கடனாக இருக்க லாம்; கடன் தந்தவர் கழுத்தை நெறிக்க என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி இருக்கலாம்; பயப்படாதே! அவர் உன்னோடு இருந்து அதை அடைப்பதற்கான வழியைக்காட்ட சோதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள். பணத்தை பெருக்க இன்னும் தீவிரமாக உழை.  கிடைத்ததை செலவழிக்காமல் சேமித்து வை.
வீடு கட்ட முடியாத நிலையாக இருக்கலாம். அதனால் என்ன? கடன் வாங்கி வீடு கட்டி பிறகு கஷ்டப்படுவதைவிட பொறுமையாக இருந்து கடனே இல்லாமல் வீட்டைக் கட்டி முடிக்க அவர் இந்த சோதனையைத் தருகிறார் என்பதை உணர்ந்து கொள், வாழ்க்கை இனிமையாகும்.
வேலையில் பிரச்சினை என்கிற வடிவில் இந்த சோதனை வருவதாக இருக்கலாம். இந்த வேலைக்காகவா படைக்கப்பட்டாய்? இல்லையே! இதை விட நல்ல வேலையைத் தேடுவதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். அல்லது இதுவே நல்ல வேலை என்றால், எதற்காக உனக்குப்பிரச்சினை தரப்படுகிறது என்பதை யோசித்து அதற்கு ஏற்ப சமயோசிதமாக நடந்து கொள். விட்டு ஓட வேண்டும் என நினைக்காதே!
ஜெயித்தே ஆகவேண்டும்...
அதற்காகத்தான் இந்த சோதனை. இதிலிருந்து எப்படி மீள்கிறாய் என்று பார்க்க சுவாமி இதை அனுமதித்து இருக்கிறார். நீச்சல் கற்றுத் தரும்போது இடுப்பில் துணியைக் கட்டி விட்டு குழந்தையை தண்ணீரில் இறக்கி விடுவதைப் போலத்தான் பாபா உன்னைப் பிடித்துக்கொண்டு சோதனையில் நடமாட விட்டிருக்கிறார். இதை புரிந்துகொண்டால் நீ ஜெயித்து விடுவாய்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...