Showing posts with label தீபாவளி வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label தீபாவளி வாழ்த்துக்கள். Show all posts

Saturday, November 2, 2013

தீபாவளி வாழ்த்துக்கள்!


        அன்பவர்கள்

 அனைவருக்கும்

 இனிய

 தீபாவளி 

நல்வாழ்த்துக்கள்!

என்றும் மறவாது சாயியை துதிப்போம்!

வாழ்வில் நல்வளம் பெறுவோம்!

ஜெய் சாய்ராம்!




Friday, November 1, 2013

Diwali Greetings



அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நன்றி:  srisaibabaofindia.com

தீபாவளி வாழ்த்துக்கள்



தீபாவளித்திருநாளன்று தீபச் சுடரொளியில் இறைவனை ஒளிமயமாகக் கண்டு, நம்முள் ஞானஒளி பிரகாசிக்க வேண்டி வழிபடுகிறோம்.
இறைவனை ஒளியாகச் சொல்வது மரபு; வேதமும் அதையே சொல்கிறது.

‘சொற்றுணை வேதியன், சோதிவானவன்’ என்கிறார் அப்பர்.

‘ஆதியாய நான்முகனும் மாலும் அறிவறியா சோதியனே’ என்கிறார் சம்பந்தர்.

’ஜோதியே, சுடரே, சூடாமணி விளக்கே’ என்கிறார் மாணிக்கவாசகர்.

‘அருள் விளக்கே, அருட் சுடரே, அருட் ஜோதி சிவமே’ என்கிறார் வள்ளலார்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்’ என்கிறார் திருமூலர்.

’மண்டிய பேரொளி, நீ வாழி! பராபரமே’ என்கிறார் தாயுமானவர்.

’ஞானசுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்க்கு’ என்கிறார் பூதத்தாழ்வார்.

கீதையில் பகவான் கூறுகிறார்: ‘நான் பக்தனின் அந்தக்கரணத்தில் வீற்றிருந்து, அருளால் இரங்கி மெய்ஞ்ஞானச்சுடர் விளக்கால் அஞ்ஞான இருளை அகற்றி விடுகிறேன்’.

இவைகளை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணங்கி தீபாவளியினை கொண்டாடுவோம்.


அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...