Showing posts with label வியாழக்கிழமை விரதம். Show all posts
Showing posts with label வியாழக்கிழமை விரதம். Show all posts

Wednesday, June 1, 2016

சாய்பாபா வியாழக்கிழமை விரத வழிமுறைகள்

சாய்பாபாவிடம் வேண்டுதல் வைத்து 9 வியாழக்கிழமைகள் விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். அந்த விரதம் இருக்கும் வழிமுறை வருமாறு:-
1. இந்த விரத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
2. இந்த விரத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம்.
3. இந்த விரதம் அற்புதப் பலன்களைத் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலும், சாய் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
5. காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும். 
6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
7. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.
8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
9. விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து, ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யவும்.

Thursday, September 12, 2013

வியாழக்கிழமை விரதம்



வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் சாயி பக்தர்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் விரத பூஜைகள் அனுசரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையினை மையத்தில் செய்து கொள்ளலாம். அன்னதானத்தினை இங்கேயே விநியோகமும் செய்யலாம். விரதமிருக்க விரும்பும் தாய்மார்கள், நமது பிரார்த்தனை மையத்தினை அணுகலாம்.



விபரங்களுக்கு:



ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்

கல்கி தெரு, புதுபெருங்களத்தூர்

சென்னை  600 063.

அலைபேசி எண்

9094033288

9841203311

Thursday, December 13, 2012

குரு வார மகிமை



குரு வார மகிமை

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம்.  இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  ஏழ்மையில் இருப்பவர்களும், திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள். நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

                                     -சாயி வீரமணி, சென்னை

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது



ஒன்பது வியாழக்கிழமை சாயி விரத விதிமுறைகள் 

பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்



Monday, November 26, 2012

வியாழக்கிழமை விரதம்



வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் சாயி பக்தர்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் விரத பூஜைகள் அனுசரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையினை மையத்தில் செய்து கொள்ளலாம். அன்னதானத்தினை இங்கேயே விநியோகமும் செய்யலாம். விரதமிருக்க விரும்பும் தாய்மார்கள், நமது பிரார்த்தனை மையத்தினை அணுகலாம்.

விபரங்களுக்கு:

ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்
கல்கி தெரு, புதுபெருங்களத்தூர்
சென்னை 600 063.
அலைபேசி எண்
9094033288
9841203311

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...