Showing posts with label சத்சரித்திரம். Show all posts
Showing posts with label சத்சரித்திரம். Show all posts

Sunday, June 12, 2016

நான் கடன் பட்டதாக உணர்கிறேன்

என்னை எவன் மிகவும் விரும்புகிறானோஅவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில்கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும்எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும்,  நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம்என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும்அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக!  நீங்கள் தொலை தூரமோஅல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வு நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக்காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சி செய்தால்சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.    

ஸ்ரீ சாயி பாபா

Thursday, June 9, 2016

பாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்!

பண்டரிபுரம்.  பாண்டுரங்கன் வாழும் திவ்ய ‌ஷேத்திரம். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. விட்டோபா ஆலயம் விசேஷ நாட்களில் சுமார் பத்து லட்சம் பேர் வரை தன் பக்கம் இழுத்து  விடும்.  புராண காலத்திலிருந்தே பிரசித்திப் பெற்ற ஸ்தலம் இது.

     13-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை தியானேஸ்வரியை (பகவத் கீதை) எழுதிய தியானேஸ்வர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம், புரந்தர தாசர், விஜயதாசர், கோபால தாசர், ஜெகன்னாத தாசர் போன்ற பக்தர்கள் பண்டரிபுர விட்டலை வழிபட்டு மேன்மை அடைந்தவர்கள்.


     இப்படிப்பட்ட புண்ணியத்தலத்தில் தாத்யா சாகேப் நூல்கர் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.  வேதங்கள், சாஸ்திரங்களில் நல்ல புலமை உள்ள இவர், தனக்கு குரு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.

     அதிகம் படித்தாலே அடக்கத்திற்க்கு பதில் அகங்காரம் வந்துவிடும். அறிவு கூட ஓரளவுக்கு மேல் வளரக்கூடாது போலிருக்கிறது.  ஏனெனில் அது எப்போதும் தர்க்கம் செய்து கொண்டே இருக்கும்.

     சத்சரித்திரம் எழுதிய தாபோல்கரும் சீரடியில் இருந்தபோது இப்படித்தான் குருவின் அவசியம் என்ன என்று கேட்டு பின் பாபாவேலேயே குரு அவசியந்தான் என உணர்த்தப்பட்டார். பாபாவையே குருவாக ஏற்றுக் கொண்டு என்றும் அழியாத சத்சரித்திரத்தை எழுதினார்.

     இந்த நூல்கர் ஒருமுறை ஜல்கான் என்ற ஊருக்குப் பயணம் செய்தார்.  அங்கே அவருக்குத் தாங்கமுடியாத கண் வலி ஏற்பட்டது.

     இவருடைய சகோதரர் ஒரு டாக்டர்.  அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நினைத்திருந்த போதிலும், இன்னும் சில நாட்களில் குரு பூர்ணிமா வருவதை நினைவு கூர்ந்து, சிகிச்சை பெறாமலேயே சீரடிக்குச் சென்றுவிட்டார்.

     பாபாவை தரிசிக்கும் முன், சாதேயின் வாதாவில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார்.  அவரது கண்வலி அதிகமாகிக்கொண்டே வந்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாபாவைத் தரிசிக்க துவாரகாமாயி வந்துவிட்டார்.

     பாபா எப்போதும் போல் சாமாவிடம், “ஷாமா!  என் கண்கள் ரொம்பவும் தொந்தரவு செய்கிறது.  வலி தாங்கமுடியவில்லை” என்றார்.

     இந்த வார்த்தையைச் சொன்னதுமே நூல்கரின் கண் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.  பாபா தனது நோயினை குறிப்பிட்டே தனக்கு அனுக்கிரகம் செய்தார் என்பதைப் புரிந்துக்கொண்டார் நூல்கர்.

     தனது பணிக்காலம் முடிந்த பிறகு சீரடிக்கு வந்து, தனது இறுதிக்காலம் வரை சீரடியில் பாபாவுடனேயே தங்கிவிட்டார்.  அவர் காலமான அன்று அவருக்கு உதியும் தீர்த்தமும் அனுப்பி, அவரது ஆன்மா சாந்தியடைய அனுக்கிரகம் செய்தார் பாபா.
-    கு ராமச்சந்திரன்

Thursday, June 11, 2015

உடைந்த சிலை!


”ஒரு பெண்மணி உடைந்துபோன சிலையை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாமா?”  என பாபாவிடம் கேட்டாள். உடனே பாபா, ”உன்னுடைய பிள்ளைக்கு கையோ காலோ முறிந்துபோனால் உடனடியாகத்
தூக்கி எறிந்துவிடுவாயா?”’  எனக் கேட்டார்.

அவள்,  “அதெப்படி முடியும்?”  என்றபோது,  ”அப்படியே உடைந்த விக்கிரகத்தை வைத்தும் வழிபாடு செய், கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்”
என்று பாபா ஆசீர்வதித்தார்.

நம்பிக்கை வை!

என் மீது நீ வைக்கிற நம்பிக்கையால், உனது உறுதியான பக்தியால் வேண்டிக்கொள்ளும் அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்பதை அறி. கிடைக்கத் தாமதமாகலாம், தப்பாது.
எப்போதெல்லாம் நம்பிக்கையை இழக்கிற நேரம் வருகிறதோ அப்போதெல்லாம் என்னை நினைத்துக்கொள்.. என்னால் இன்னும் நான் தீவிரமாக உன்னை நம்புவேன் எனச் சொல்லிக்கொண்டு முன்னிலும் முனைப்பாக பிரார்த்தனை செய்.. தீவிரமாகப்போராடு.. எப்படிப்பட்ட மோசமான நிலையையும் எதிர்கொள்ள தயாராக இரு.. என் மேல் பாரத்தைப்
போட்டு உனது இலக்கை அடைவதற்குப் புதியதாக செயலைத் துவங்கு.. உன் பக்கத்திலிருக்கிற நான் அதற்குமேல் ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்கிறேன்.

சத்சரித்திர சிந்தனைகள்!



என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது, யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால் வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன்.
இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒருபோதும் சத்தியம் இல்லாததைப் பேசமாட்டேன்.   

                                                                                        சத்சரித்திரம் அத்:17 - 78 - 79

சத்சரித்திர சிந்தனைகள்!

ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்காகவும் 
பாபா வேலை செய்கிறார். 
ஒவ்வொரு தனிப்பட்டவருடைய 
பிரார்த்தனையையும் அவர் கேட்கிறார். 
அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார். 
இதை உணர்ந்துகொண்டால் 
அனைவருக்கும் நன்மை நடப்பது நிச்சயம்.

ஓம் சாய்! ஸ்ரீ சாய்! ஜெய ஜெய சாய்!

Wednesday, September 17, 2014

வாழ்க்கையைக் கற்றுக்கொள்!

25129

அன்புள்ள குழந்தாய்!
பலமுறை உனக்கு புத்தி சொல்லியும் நீ கேட்க மறுக்கிறாய். உன் மகளுக்குத் தற்போதுதான் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். இதற்குள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட குறைகளை கூறுகிறாள்.
நீ, தவறு இழைத்துவிட்டதாக நினைத்து என்னிடம் முறையிடுகிறாய். நீ பார்த்து செய்த கல்யாணம்தானே பாபா, எதற்காக இப்படி என் குழந்தைக்கு நடக்கிறது? என என்னிடம் கேட்கிறாய்.
நீ கலங்குவதைப் பார்த்தால் மாப்பிள்ளை வீட்டார் கொடுமைக்காகவே பிறந்து வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. தவறு என் மீதும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் மீதும் இல்லை. உன் மகள் மீது இருக்கிறது.
கல்யாணம் ஆன இரண்டு மூன்று மாதங்களிலேயே நிறைய பெண்கள் செய்கிற தவறு, தனது கணவன் தனது தாயார் பேச்சை கேட்கிறார், தனது நாத்தனார் பேச்சை மட்டும் கேட்டு, அவர்கள் சொல்கிற படிதான் நடக்கிறார். என்னை கண்டுகொள்வதில்லை.. இதனால் மனம் உடைந்து போகிறேன். மன இறுக்கத்தோடு இருக்கிறேன். ஒரு சாதாரண விருந்தாளி போல அங்கு தங்கியிருக்கிறேன். எனக்கு இவனோடு வாழப்பிடிக்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கையை அவளது கணவன் குடும்பத்தார் கெடுக்கிறார்கள் என்று நினைத்து, மாப்பிள்ளையை அழைத்து பேசுவது, மகளிடம் கூறி பேசவைப்பது என செயல்படத் தொடங்கி பல பெண்களின் பெற்றோர், தங்கள் மகளின் வாழ்வை கெடுத்துவிடுகிறார்கள்.
ஒருவரைப் பற்றிய மதிப்பீடு மூன்று மாதங்களில் மட்டுமே என்ன தெரியவரும்? எடுத்தவுடனே மாமியார் வீட்டில் அரசாட்சி செய்யவேண்டும் என்று நினைப்பதும், கணவன் தான் சொன்னபடியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், வாங்குகிற சம்பளத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் இளம் பெண்ணின் எதிர்பார்ப்பு. இது தவறான எதிர்பார்ப்பு.
நேற்று வந்தவளுக்காக, தன்னை பெற்று வளர்த்தவர்களையும், கூடப் பிறந்தவர்களையும் எந்த ஆண் மகனும் இழந்துவிடத் தயாராக இருக்கமாட்டான். காலம் செல்லச் செல்லத்தான் பெற்றோரையும் தனது சுற்றத்தாரையும் மெல்ல மெல்ல தவிர்த்து மனைவிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிப்பான்.
ஒரு குழந்தை பிறந்த பிறகு அல்லது ஓரிரு ஆண்டுகள் கழிந்த பிறகு மனைவியின் மீது தனிக் கரிசனம் தோன்ற ஆரம்பிக்கும். இதுதான் இயல்பாக நடந்து வருகிற விக்ஷயம். அதுவரை பெண் பொறுமை காக்கவேண்டும்.
பெற்றோராகட்டும், அக்காள் தங்கை போன்ற உறவுகளாகட்டும், தனது மகன் அல்லது தம்பி தன் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விக்ஷயம். இதனால், அவர்கள் இவனிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று நினைப்பதும், தனது கணவனை அடிமையைப் போல வைத்திருக்கிறார்கள் என தானே ஒரு முடிவுக்கு வந்து அதற்காக அவனிடம் சண்டை போடுவதும், பிரச்சினையை வளர்ப்பதும் புதிய மனைவியாக ஒரு வீட்டுக்குப் போன உனது பெண் தன்னுடைய வாழ்வுக்கு தானே வைத்துக்கொள்ளும் உலை ஆகும்.
அக்காவோ, மாமாவோ, அண்ணனோ அல்லது அம்மாவோ யாராக இருந்தாலும் அந்த வீட்டுக்கு உன் மகளை விட முன்னே வந்தவர்கள். அவர்கள் பேச்சை அவன் இன்றுதான் புதிதாகக் கேட்கிறான் என்றில்லை.. ஏற்கனவே கேட்டுக்கொண்டுதான் வந்திருக்கிறான்.. இன்னும் கேட்பான்.. அப்படி கேட்டு நடப்பதுதான் அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் மனைவி பேச்சைக் கேட்டு, வீணாகிப்போய்விட்டான் என்ற பேச்சுக்கு அவன் ஆளாவதோடு, புதிய மனைவியின் கஷ்டத்திற்கும் அவன் காரணமாகிவிடுவான்.
நீ உனது மகளுக்காகப் புலம்புவதைப் போலவே உனது மருமகனின் தாயார் தனது மகளுக்காகப் புலம்பக்கூடாதா? அவளை வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்கக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கப்போகிறது? அவர்கள் இருப்பதால் உன் மகளுக்கு என்ன குறைவு வந்துவிட்டது? எதற்காக அவள் அவர்களை வெறுக்கவேண்டும்..
புதிதாக திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்குப்போகிற மருமகள், அந்தக் குடும்பத்தில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
தனது வீட்டுச் சூழல் வேறு, புதிதாகப் புகுந்து உள்ள வீட்டின் சூழல் வேறு என்பதைப் புரிந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. அப்படி செய்யாமல் தனக்கு ஏற்ப அனைவரும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பதும், திருமணமாகி வந்தவுடனே, தான்தான் புகுந்த வீட்டுக்கு உரிமைக்காரி, மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் போக வேண்டும் என நினைப்பதும் மிகவும் தவறுதலான விக்ஷயமாகும்.
திருமணமான புதிதில் கணவன் மனைவியிடம் நீ யாரையாவது விரும்பியிருக்கிறாயா எனக் கேட்பான். உடனே மனைவி, ஆமாம்.. நாலு பேரை விரும்பினேன்.. தப்பெல்லாம் செய்யவில்லை.. என்னை நாலு பேர் பார்த்தார்கள்.. நான்தான் பார்க்கவில்லை என்பதுபோல எதையேனும் சொல்லி வைத்தால், அது கணவனின் உள்மனதை பாதித்து, மனைவி மீது ஒரு சந்தேகத்தை வளர்க்கக் காரணமாக அமைந்துவிடும்.
பிற்காலத்தில் தன் மனைவி யாரிடமாவது பேசினாலோ, பழகினாலோ கணவன் தவறாக அவளைப் புரிந்துகொண்டு நடத்துவான். வாழ்க்கை கசந்துபோகும். இப்படியே, மனைவி கணவனிடம், திருமணத்திற்கு முந்தையை வாழ்க்கையைப் பற்றி கேட்டுக் கொண்டு, அதை வைத்தே கணவனை குத்திக்காட்டிக்கொண்டிருப்பாள். இதுவும் அவனது மனதை பாதித்து நிறைய பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். ஆகவே, இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட இன்னும் சிரிப்பான விசயம் என்னவெனில், தன் கணவனுக்கு ஆண்மையே இல்லை என்பதுபோல சொல்லிக்கொண்டு சில புதிய பெண்கள், வாழ்க்கையைத் துறந்து தாய் வீடு வந்து விடுகிறார்கள்.
நாலு பேருக்குத் தெரியாமல் வைக்கிற இந்த விக்ஷயத்தை நாலு பேர் அறிய விவாதிக்க வேண்டுமா என நினைக்கலாம்! துவக்கத்தில் எல்லாருக்குமே இப்படித்தான் இருக்கும். அதை பழக்கத்தின் மூலமும், அனுசரணையின் மூலமும் தான் சரி செய்யவேண்டும் என்பதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்வதில்லை.
இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் என்ற உண்மை இளம் பெண்ணுக்குத் தெரியாமல் போவது இயல்பு. ஆனால், பெண்ணைப் பெற்று வளர்த்து இவ்வளவு காலமாகக் குடும்பம் நடத்திய உனக்கும் தெரியாமல் போவதுதான் வேடிக்கை.
நான் உன் மகளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிவிட்டேன், புரிகிற விதத்தில் பேசிப் பார்த்து விட்டேன்..நான் அவளோடு இருப்பதை அவள் உணர மறுக்கிறாள்.. வாழ்க்கையைக் கற்றுத் தருவதை அவள் புரிந்துகொள்ளவில்லை. இதனால் உனது மகளின் எதிர்காலம்தான் கெடப்போகிறது. அதை எச்சரித்துத் தடுக்கவே இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர், குழந்தை பெற்று அது பேசத்தொடங்கிய பிறகு, குழந்தைக்கு நல்ல குருவைத்தேடி அலைகிறார்கள். ஆனால், பிறந்த குழந்தையே பிறருக்கு குருவாக இருப்பதை பலர் அறிவது கிடையாது.
பிறந்த குழந்தையை யார் தூக்கினாலும் பேசாமல் அனைவரிடமும் செல்லும்.. எதையும் காதில் போட்டுக் கொள்ளாது.. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது.. சிறிது வளர்ந்த பிறகு, யார் முதன்மையானவர் என்பதை உணர்ந்து அவர்களிடம் அதிக நெருக்கம் காட்டும். பிழைக்கத் தெரிந்த பிள்ளை, சமயத்திற்கு ஏற்ப அனைவரிடமும் ஒட்டிக்கொள்ளும்...
அவர்கள் ரசிக்கத் தக்க விதத்திலும், ஏற்கத் தக்க விதத்திலும் நடந்துகொள்ள முயற்சிக்கும். ஒவ்வொரு நொடியையும் பிறர் ரசிக்குமாறும்,தனக்கு முக்கியத்துவம் தருமாறும் குழந்தை பார்த்துக்கொள்ளும்.
பிறந்து அறிவு முதிர்ச்சியே இல்லாத ஒரு குழந்தைக்கு இருக்கிற இயற்கை அறிவுகூட, வளர்ந்து திருணமாகி வாழ்க்கைப் பட்ட பல பெண்களுக்கு இருப்பதில்லை என்பது வருத்தமான விக்ஷயம்.. போன உடனேயே மாமியாரைத் தள்ளிவைப்பது, நாத்தனாரைக் கொடுமைக்காரி என்பது, கணவன் விட்டில் பூச்சி போல பெற்றவர்களையும், அவனுக்கு உரியவர்களையும் சுற்றிச் சுற்றி வருகிறான், தனக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது போன்று நடக்கிறார்கள். இது வாழ்க்கைக்கு உகந்தது கிடையாது.
அனைவரது நல்லெண்ணத்தையும் சம்பாதித்த பிறகு, அந்த வீட்டில் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை புதிய பெண் தெரிந்துகொள்ள வேண்டும். கணவனின் சம்பாத்தியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், தான் என்னென்ன சம்பாதிக்க வேண்டும் என்பதை பெண்தான் முன்னதாக முடிவு செய்யவேண்டும்.
தன் மீது நல்ல அபிப்பிராயத்தை கணவன் வீட்டிலிருந்து சம்பாதிக்க வேண்டும்.. பிறரது அன்பை சம்பாதிக்கவேண்டும்.. குடும்பத்தில் மரியாதையை சம்பாதிக்க வேண்டும்.. பிறந்த வீட்டுக்குப் பெருமையை சம்பாதிக்க வேண்டும்..
இப்படி தனது குணத்தாலும் நடத்தையாலும் முதலில் சம்பாத்தியம் செய்த பிறகு, கணவனின் சம்பாத்தியத்தின் மீது கண் வைத்தால் அது உருப்படியாக நம் கைக்கு வரும் என்பதை பெண் புரிந்துகொள்ள வேண்டும்.
மணமான பிறகு கணவன் வீட்டுக்கு வாழப் போகவேண்டும்.. தனது தாய் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக கணவனை வைத்துக்கொண்டு அவன் சம்பாத்தியத்தை முழுமையாக தன்னிடம் தந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.. இது அவனது தன்மானத்திற்கு இழுக்காக முடியும்..
இப்படி ஒவ்வொரு விக்ஷயமாக யோசித்து நடக்க உன் மகளுக்கு புத்தி சொல்லிக் கொடு.மற்றவர்கள் நடந்து கொள்கிற விதத்தைப் பார்த்து மன இறுக்கம் அடையாமல், எதையும் ரிலாக்ஸாக எடுத்துக்கொள்ள கற்றுக் கொடு..
வாழ்க்கை என்பது நீண்ட தூரம் போகவேண்டிய ஒரு பயணம். இதில் நாலும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டால்தான் வாழ்க்கை சுகமாகப் போகும்.
இந்த நாட்டில் மணமாகி வாழ்க்கைப்பட்டுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகிதப் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கையில் பல விக்ஷயங்களைத்தாங்கிக் கொண்டு குடும்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீயும் விதிவிலக்கு அல்லவே-
துன்பத்தில் இன்பம் என்பதுதான் அனைவருக்கும் தரப்பட்ட வாழ்க்கை நியதி.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு, இனி வாழப் போகிற வாழ்க்கை வேறு... புதிய வாழ்க்கைக்கு உன்னை தயார் படுத்திக்கொண்டு புதிய இல்லத்தில் வாழ்க்கைக்காகக் காத்திரு என்று அவளுக்குச் சொல்லிக்கொடு.. அமைதியாக, பொறுமையாக இருந்து அனைத்தையும் சகிப்பதற்கு கற்றுக் கொடு..
உனக்கு முன்னால் அந்த வீட்டுக்குச் சென்று உன் மகள் நன்றாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன். எல்லோரும் உன் மகளைப் போல நல்லவர்கள்தான்.. புரிய வை.
அன்புடன் அப்பா
சாயி பாபா

Tuesday, June 3, 2014

மாறாத நம்பிக்கை வை! முழுமையாக நம்பிக்கை வை!

20144



சத்சரித்திரம் 13 வது அத்தியாயத்தில், பாபா,  ‘நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!’  என்று எழுதப்பட்டிருக்கிறது.



அப்படியானால் பாபா  நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?



இந்த மூன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்கள்? இப்போது பார்க்கலாம்.



நன்றியுள்ளநினைப்பு



காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும், செய்யப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உலகத்தை விட பெரியது. அதனால், வேறு எந்த வித நன்றியை மறந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம், செய்நன்றியை மறந்தவர்களுக்கு கதி மோட்சமே கிடையாது என்கிறது திருக்குறள்.



பாபா நம்மிடம் நன்றியுள்ள நினைப்பை எதிர்பார்க்கிறார் என்றால், ஏற்கனவே ஏதாவது நமக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? எதையும் செய்யாமல் எப்படி நன்றியை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்க முடியும்?



பீமாஜி பாடீல் என்ற பக்தர் காசநோய் முற்றி, இரத்த வாந்தி எடுத்தார். அவரை, மருத்துவர்கள் கைவிட்டார்கள். மந்திர தந்திரங்கள் கைவிட்டன. குலதெய்வம், இஷ்டதெய்வம் உட்பட அவர் வணங்கிய தெய்வங்கள் அனைத்தும் கைவிட்டன. வேறு வழியின்றி மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.



உயிரை விடும் போது கூட, இன்னொரு நாள் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் நாம் அனைவருமே நினைப்போம். பீமாஜி பாடீலுக்கும் இந்த நினைப்பு இருந்தது. அதனால்தான் அவரும் எத்தனையோ வழிகளில் முயன்று கொண்டிருந்தார்.



யாரோ சொன்னார்கள்: ’சீரடியில் பாபாவிடம் சென்றால், உடனடியாக குணமடைந்து விடுவாய் என்று!’  உடனடியாக, பாபாவின் பக்தரான சாமா நினைவு வந்து, அவருக்குக் கடிதம் எழுதி, அவர் மூலமாகவே சாயிதரிசனம் செய்தார் பீமாஜி.



பாபாவின் தரிசனமும், அவரிடம் பீமாஜி வைத்த வேண்டுதலும் உடனே பலித்தன. மரணத்திலிருந்து விடுபெற்றார். நலமடைந்தார். பாபா செய்த இந்த நன்மையை நன்றியோடு நினைத்து, அடிக்கடி சீரடிக்கு வந்து சென்றார். அவர்தான் கொடி ஊர்வலம், சாயி சத்ய விரத பூஜை  போன்றவற்றை பாபாவுக்காகச் செய்தவர்.



பீமாஜிக்கு செய்தது போல நமக்கு ஏதாவது பாபா செய்திருந்தால், நாமும் நன்றியோடு பாபாவை நினைக்கலாம். அவர்தான் நமக்கு எதையும் செய்யவில்லையே!  பிறகு எப்படி நினைப்பது? என நீங்கள் நினைக்கலாம்.



உங்களுக்கு கஷ்டகாலம் முடிந்துவிட்டது, புண்ணியம் சேர்ந்திருக்கிறது, பாவம் விலக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் சாயி வழிபாட்டை செய்கிறீர்கள். இதைத் தெரிவிப்பதே நன்மையான விஷயம். கஷ்டகாலம் முடிந்த பிறகும் கஷ்டப்படுவானேன்? புண்ணியம் சேர்ந்த பிறகு அனைத்தும் நன்மையாகவே நடக்கப்போகிறது..நடக்கும் முன் வருத்தப்படுவானேன்..



நீங்கள் நினைக்கும் போது தரிசனம் தருகிறார்..கேட்டதை கொடுத்து, தான் உங்களோடு இருப்பதை உறுதி செய்கிறார்.. சீரடிக்குக் கூப்பிடுகிறார்..பக்கத்தில் அவர் எழுந்தருளியிருக்கிற கோயிலுக்கு அழைக்கிறார்.. இதனாலெல்லாம் அவரை நன்றியோடு நினைக்க வேண்டும். இதை அவர் எதிர்பார்க்கிறார்.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து கோரிக்கை நிறைவேறிச் சென்றவர்களை அதன் பின்னர் பல ஆண்டுகளாக  பார்க்க முடியாது.. அடுத்த கஷ்டம் வரும் போது தானாக வருவார்கள்.. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.. இப்படியிருக்கக்கூடாது..உனக்கு நன்மை நடந்த இடத்தை மறக்கலாமா? மறக்காமல் நினைக்க வேண்டும் என பாபா எதிர்பார்க்கிறார்.



மாறாதநம்பிக்கை



நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்கள் கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவர் நமக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறார்.



’பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.



இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார்..என்று, பக்தனுக்கு பாபா தன்னம்பிக்கை தருவார்.



பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சினைகள் அதிகமாகும்.



நம்பிக்கையே போய் விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத் தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்ப்பார்.



ஒரு முறை உன்னை காப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு மறுப்பதற்கு அவர் மனிதன் அல்ல, கடவுள். அவர் சொன்னால் நடக்கும்.. சொன்னதை மாற்றமாட்டார்.



பின்னர் ஏன் எனக்கு நடக்க மாட்டேன் என்கிறது? என்றால், இறுதி வரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பவனுக்குத்தான் வெற்றியைத் தருவார். நான் நம்புகிறேன் என்று நீ சொல்லலாம், ஆனால், கடைசி வரை நீ நம்பமாட்டாய் என்பது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நன்றாக அறிந்த பாபாவுக்குத் தெரியாதா?



கிணற்றில் போட்ட கல் மாதிரி.. அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, பாதத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டால் போதும்.. நாம் கேட்பதை அப்படியே செய்யாமல், நமக்கு எது நன்மையோ அதைச் செய்வார்.. இதைச் செய்யும் முன்பு நீ அவரை முழுமையாக நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறார்.



இதற்கு உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.. சோதனை வரும் போது வேதனைப்பட்டாலும், நம்பிக்கையை இழக்காமல் சகிக்கவேண்டும்.



முழுமையானபக்தி



நிறைய பேர், நான் பாபாவின் பக்தன் என்று சொல்லிக்கொள்வார்கள். பக்தனுக்கு உ ரிய இலக்கணம், அன்புடனும், ஆசையுடனும் அவரை நேசிக்க வேண்டும். இதுதான் பிரேமை எனப்படுகிறது. எல்லாவற்றையும் நேசிக்கிறேன்,



உன்னையும் நேசிக்கிறேன் என்றால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்.. நீ என்னை நேசி, நான் உனக்குள்ள அனைத்தையும் நேசிக்கிறேன் என்பார்.



baba



அன்பு என்பது எதையும் எதிர்பாராமல் வருவது, தன்னைத் தியாகம் செய்வது, தனக்குக் கிடைப்பதை ஒளிக்காமல் தருவது, எப்போதும் தன் அன்புக்குரியவர் நினைவாகவே இருப்பது.. அவரை நினைத்தவுடனே கண்களில் நீர் வைப்பது..சுயநலமில்லாமல் இருப்பது..இதெல்லாம் தான் அன்பு எனப்படுகிறது..



பாபா மீது இப்படியாஅன்பு செலுத்துகிறோம்?



பாபா எனக்கு அதைக் கொடு.. இதைக் கொடு எனக் கேட்டு, அதைப் பெறுவதற்காகஅவர் மீது நம்பிக்கை வைக்கிறோம்.. நம்பிக்கை வைத்து தனக்கு கிடைக்கும் எனக்காத்திருக்கிறவன் விசுவாசி.. அவன் பக்தன் கிடையாது. நாமெல்லோரும் விசுவாசியாக இருக்கிறோமே தவிர, பக்தராக இருப்பதில்லை.



ஆனால், நம்மை பக்தராக மாற்றுவதற்கு பாபா சொன்ன உபாயம், ”நீ எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக் கொண்டிரு. எனக்கு பல விதமான வழிபாடுகள் கூட வேண்டாம், முழுமையான பக்தி மட்டும் செய்.. நான் உன்னோடு இருந்து, உனது துன்பம் எத்தகையதாக இருந்தாலும் சரி..அதிலிருந்து உன்னை தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றுவேன்..”



இதுவரை விசுவாசியாக ! அவரை நம்புகிறவராக இருக்கிற நீங்கள், எல்லாம் அவரால் நடக்கிறது என்கிற போது, எனக்கும் அவரால் நல்லதாகவே எல்லாம் நடக்கும் என்பதைத் தெளிவாக அறிந்து, கவலைப்படாமல், தைரியமாக சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு பக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றத்தை நீங்கள் வெகு விரைவில் உணர்வீர்கள்.



 



ஜெய் சாய்ராம்…..சரணம் சாய்ராம்.

Friday, April 4, 2014

வணங்குகிறேன் பாபா!







 மனோஹரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத 

உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத 

லீலைகளைப் புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை 

வைத்து வணங்குகிறேன். 



தெய்வ அநுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் ஸாதுக்களையும் 

ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு 

மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் 

தெரியாமற்போய்விடுவார். 





ஜெய் சாய்ராம்!

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...