Showing posts with label ஸ்ரீ சாய் சத்சரித்திரம். Show all posts
Showing posts with label ஸ்ரீ சாய் சத்சரித்திரம். Show all posts

Thursday, June 29, 2017

ஸ்ரீ சாய் சத்சரித்திரம்


ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். 
ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

Tuesday, June 28, 2016

மந்திரவாதிகளை நாடிப் போக வேண்டாம்!

அகமத் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்த மீரஜ் காம் என்ற இடத்தில் வசித்து வந்த குசபாவ் இளவயதிலேயே மந்திர வித்தையை கற்றுத் தேர்ந்தவர்.
இவரது குரு இமய மலைக்குப் போகிற போது, எனது மூத்த சகோதரர் சீரடியில் இருக்கிறார், அவரை சந்தித்து அவர் சொல்படி நடந்துகொள் என புத்தி கூறினார்.
குசபாவ் சீரடிக்கு வந்து, 1908ம் ஆண்டு வரை தன்னை நெருங்க பாபா அனுமதிக்க வில்லை. பாபாவை நெருங்க முயன்றபோதெல்லாம்,  முதலில் உன் மாய வித்தைகளை நிறுத்து, அதன் பின் இங்கே வா!”  என்று கூறி விடுவார் பாபா.
பல தீய ஆவிகளை பாபா விரட்டினார். ஒரு முறை பர்வானி என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவன் மந்திர வித்தைக்கு இலக்காகியிருந்தான். அவனுக்கு உணவு முடிகளைப் போல தெரிந்தது, சாணி போல நாற்றம் அடித்தது. அடிக்கடி அவனது உடைகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பூஜைகள் செய்து பார்த்தான், மந்திர வாதிகளை நாடினான். எதுவுமே பலனளிக்கவில்லை.
பாபாவிடம் ஓடிவந்தான். பாபா ஆசீர்வதித்தார். உடனே மந்திரக்கட்டு விலகியது. பாபாவிடம் மந்திரவாதிகள் செல்லமுடியாது. அவர்களை தன் முன்னிலையில் அனுமதிக்கவே மாட்டார். மந்திரவாதிகளை நாடுவோரையும் அவர் அனுமதிக்க மாட்டார். தீவிரமாக சாயியை உபாசித்து, அவரது நாமத்தை உச்சரிக்கும் செயலை மட்டும் செய்யுங்கள். வேறு எந்த விக்ஷயத்திலும் நாட்டம் செலுத்தாமல் பாபாவின் பாதங்களின் மேலே கண்களை வைத்திருங்கள்.
இப்படி இருந்தால் உங்களுக்கு மாயவித்தைகள், மந்திர தந்திரங்கள், அருள் வாக்குகள் போன்ற எதுவும் தேவைப்படாமல் நினைத்தது நடக்கும்.

Friday, June 3, 2016

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரிதத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும். 
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது.
(ஆதாரம் : திரு சி.பி.சபாபதி அவர்கள் எழுதிய “சீரடி சாய்பாபா அண்ட் அதர் பர்பெக்ட் மாஸ்டர்ஸ் எனும் புத்தகம்)
(Source: 'Shirdi Sai Baba and other Perfect Masters' written by Respected Guruji Shri C.B.Satpathy,)

Thursday, July 17, 2014

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்

5788d-shirdi-sai-baba-wallpaper-eye-sai

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபாவத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார் .அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...