Showing posts with label ஸ்ரீ சாயிசத்சரிதம். Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயிசத்சரிதம். Show all posts

Saturday, November 20, 2021

ஸ்ரீ சாயிசத்சரிதம் பயன்படுத்த சிறந்த ஒன்பது வழிகள்

 

சாயி பக்தர்கள் எப்படி ஸ்ரீ சாயி சத்சரிதத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:


1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தினை (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை),  ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் நாம் வழிபாட்டிற்கு என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) வைத்து மிகப் புனிதமாக கருதி வழிபட வேண்டும்.

2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்கச் செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் .ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசி சிந்தனையாக பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

3. ஏதேனும் நமக்கு ஏதும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும். முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மஹாசிவராத்திரி, நவராத்திரி, முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில், ஒருஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்..

4. ஏதாவது ஒரு கோயிலில்தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் .மற்ற மக்கள் இருந்தால்குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .

5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.

7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும். எனவே, ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க சில பிரதிகளை கூடுதலாக வாங்கி கொண்டு வர வேண்டும்

8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்லமிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும், அவருக்கு பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.

9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ, அதே போன்று சாயிசத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின் தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...