Saturday, August 31, 2013

சத்சங்கம் கேள்!

சில இடங்களில் போட்டோவிலிருந்து விபூதியும் தேனும் வழிகின்றன. பக்தர்கள் பக்திப்பரவசத்தோடு பார்த்துவிட்டுச்செல்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் சாயி பக்தர்களின் வீடுகளில் நடப்பதைப் பற்றி சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதலாமே!
                                    (காயத்ரி தேவி, கும்பகோணம்)
யோகிகளின் யோக சக்திகளால் இது போன்ற விஷயங்கள் விளைவது சகஜம்.  இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது பலன் தருவதில்லை. வேண்டுமானால் போட்டோக்களில் இருந்தும் காசும், பணமும் கொட்டட்டும், அதைப் பற்றி நாம் எழுதலாம், பிரமிக்கலாம். அவ்வாறு கொட்டினால் அதைப் பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள். ஏனெனில் அரசாங்கம் அவர்களைப் பிடித்து விசாரணை செய்யும்.

ஒன்றுக்கும் உதவாத விஷயத்தில் கவனம் செலுத்துவதைவிட சத்சங்கம் கேளுங்கள். அதிலிருந்து நிறைய கொட்டும்! அது உலக சுகத்தையும், ஆன்ம மேன்மையையும் தரும்.

Friday, August 30, 2013

சீரடிக்கு உன்னால் போக முடியுமா?


ஒருவர் நினைக்கலாம், நான் சீரடிக்குப் போய் என் விருப்பம் போல் தங்கப்போகிறேன் என்று. ஆனால் அது அவருடைய கைகளில் இல்லை. ஏனெனில் அவர் முழுக்க வேறு ஒருவருடைய (பாபாவுடைய) சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.
நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்த அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர். மற்றவர்களுடைய அகந்தை அவர் முன் செல்லுபடியாகாது.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.
சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன? அவர் முன் செல்லுபடியாகாது. நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும் வரை பாபா நம்மைப்பற்றி நினைக்கமாட்டார். அவருடைய மகிமையும் நமது காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டும் என்ற அருள் வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேச முடியும்?
ஸமர்த்த சாயியை தரிசனம் செய்யப் போக வேண்டும் என்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயி தேக வியோகம் அடையும் வரை அந்த நல் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மற்றும் சிலர் சீரடிக்குப் போவதை காலங் காலமாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர். போகலாம் போகலாம் என்று நாளை நீட்டிக்கொண்டே போகும் குணமே அவர்களைப் போக முடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மகா சமாதி அடைந்து விட்டார்.
நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டி காணும் நல் வாய்ப்பை இழந்தனர். இவ்விதமாக பச்சாதாபமே மிஞ்சியது. கடைசியில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும். சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன?

           அதற்கு பாபா அல்லவோ அனுமதி கொடுக்க வேண்டும். சுய 

முயற்சிகளால் மட்டும் எவரும் சீரடிக்குப் போகமுடியவில்லை. எவ்வளவு 

ஆழமான ஆவல் இருந்தாலும் விருப்பப்பட்ட நாள் வரை அங்கே 

தங்கமுடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, போய் என்று 

அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேர்ந்தது.

Thursday, August 29, 2013

பாவ புண்ணியம்



பாவ புண்ணியத்திற்கு சுருக்கமாக உதாரணம் சொல்லுங்கள், பார்க்கலாம்.?
                                          ( கீதாமணியன், திருப்பூர்)

மனம் உவந்து தருவதெல்லாம் புண்ணியம், மனம் வருந்தப் பெறுவதெல்லாம் பாவம். தான் நோக பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம், பிறர் நோக தான் சுகித்தல் பாவம்.

Wednesday, August 28, 2013

மனம் நிலைப்பட


என் மனம் ஒரு நிலைப் படுவதில்லை. இது ஏன்?
                                    (எஸ். முருகன், சென்னை - 45)

ஆசைகள் மூங்கில் புதரைப் போல வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதால்தான் மனம் நம் வசப்படுவதில்லை. புலன்களின் ஆசைகளைக் கட்டுப் படுத்தினால் மனமும் கட்டுக்குள் வந்துவிடும்.


Tuesday, August 27, 2013

உதி விதியினை மாற்றும்!


என் பெயர் சுமதி. கணவர் பெயர் பரணிகுமார். காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிகிறார். எங்களுக்கு தேவிகா, மனோ, திவ்யா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் சாயி பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள். எது நடந்தாலும் அது பாபாவின் விருப்பம் என்பார்கள்.
நானும் அப்படித்தான். என் பிள்ளைகள் வியாழன் தோறும் எங்கள் பகுதியில் உள்ள செங்குட்டை பாபா கோயிலுக்குச் செல்வது வழக்கம்.
எனக்கு சில வருடங்களாக வயிற்று வலி கடுமையாக இருந்தது. பரிசோதித்ததில் சிறுநீரகக்கற்கள் இருப்பதாகத் தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நோயின் தீவிரம் கடுமையாக ஆனது. நேராக நிமிரக்கூட முடியவில்லை. துவண்டு போய்விட்டேன், இப்போது அறுவை சிகிச்சைதான் தீர்வு, வேறு வழியில்லை. செலவு இருபத்தையாயிரத்தைத் தாண்டும் எனக் கூறினர்.
இதனால் துவண்டு போய்விட்டேன். மனக்குழப்பமும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இருந்தும் சாயியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன். சாயி ராம் யார் மூலமாகவோ, நேரடியாகவோ வருவார் என சாயி தரிசனம் இதழில் படித்திருக்கிறேன். அப்படித்தான் சாயி வரதராஜன் அவர்களிடம் இருந்து உதி பெற்றேன்.
என் வீட்டிற்கு அருகாமையில் வசிப்பவர் ஜே. சுஜாதா. என் வேதனையைக் கண்டு அவராக வந்து, சாயி வரதராஜனிடம் இருந்து உதி பெற்றுவந்தார். கூடவே, பாபா படம், சாயி தரிசனம் புத்தகம் கொடுத்தார். பின் எனக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
உதியை மருந்துடன் சேர்த்து சாப்பிடச்சொன்னார். எனக்குப் புதுப்பொலிவு வந்தது. பாபாவை நான் பேச்சிலும், மூச்சிலும் சுவாசிக்கச் செய்தேன். பதினைந்து நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, மருத்துவர்கள் சிறுநீரகக் கற்கள் கரைந்திருப்பதாகச்சொன்னார்கள். அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை என்றார்கள்.
சுஜாதா, உதி கொடுக்கும்போது, உன் பிரச்சினைகள் தீரும்போது, நம் பெருங்களத்தூர் பாபாவுக்கு நன்றி செலுத்தி, காணிக்கையாக ரூ 2500 ஐ இடம் வாங்கத் தருவதாக பிரார்த்திக்குமாறு கூறினார்.
அதன் பேரில் அவரிடமே எனது காணிக்கையை பாபாவிடம் சேர்ப்பிக்குமாறு கொடுத்தேன்.  என்னை அழைக்கும்போது நிச்சயம் புதுப்பெருங்களத்தூர் வருவேன். நானோ காட்பாடி.
புதுப் பெருங்களத்தூரில் குடியிருக்கும் பாபா என் கோரிக்கைக்கு செவி சாய்த்தார் என எண்ணும்போது, பாபா சர்வ வியாபி என்பதும், உதியே மருந்து என்பதும், உதி விதியை மாற்றும் என்பதும் உண்மையானது.

                                    பி. சுமதி, செங்குட்டை, காட்பாடி

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள் 

 

சாயி நாதர் திருவடியே! 
சங்கடம் தீர்க்கும் திருவடியே! 
நேயம் மிகுந்த திருவடியே! 
நினைத்தளிக்கும் திருவடியே! 
தெய்வ பாபா திருவடியே! 
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

                            "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"

Sunday, August 25, 2013

எல்லாமே பாபா!


என் பெயர் மோகனா ரவிக்குமார். வேளச்சேரியில் வசிக்கிறேன். எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறhர்கள். என் கணவர் ஒரு நாள் மைலாப்பூர் பாபா கோயிலில் இருந்து சாயி தரிசனம் புத்தகம் மற்றும் பல பாபா புத்தகங்களையும், மாத இதழ்களையும் வாங்கி வந்தார். மற்ற இதழ்களைவிட சாயி தரிசனம் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது.
அந்தப் புத்தகம் முழுவதும் படித்தேன். படித்தவுடனே அந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று கேட்டேன். அவரும் நானும் ஒரு வியாழக்கிழமை சாயி தரிசனம் புத்தகத்தில் போட்ட விலாசத்தைப் பார்த்து விசாரித்து அந்த கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கு பாபாவை தரிசித்துவிட்டு சாயி வரதராஜன் கைகளில் உதியை வாங்கிக் கொண்டு வந்தோம்.
என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அரையாண்டு தேர்வு எழுதும் நேரத்தில் திடீரென்று பயங்கரமான காய்ச்சல் வந்துவிட்டது. வைரஸ் காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருந்த நேரம் அது. நான் மிகவும் பயந்துவிட்டேன். டாக்டரிடம் சென்றேhம். ஊசியைப் போட்டு விட்டு, ‘காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனே ரத்தப் பரிசோதனை பண்ண வேண்டும் என்று சொன்னார்.
சாயி தரிசனத்தில் படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. பாபாவிடம் சென்று நம்பிக்கையுடன் வரத ராஜன் கொடுத்த உதியை எடுத்து என் மகனின் நெற்றியில், கையில் மார்பில் பூசிவிட்டு தண்ணீரில் கலந்து குடிக்கத் தந்தேன். இரண்டு மணி நேரம் கழித்து உடல் சூடு தணிந்தது.
காய்ச்சல் இல்லை. சுறு சுறுப்பாக எழுந்து படிக்கத் தொடங்கினான். இரண்டு மாதம் கழித்து என் மகன் முகத்தில் கன்னத்தில் பெரிய கட்டி ஒன்று வந்தது. ஒரு வாரம் அவன் பள்ளிக்குப் போக வில்லை. வீட்டு வைத்தியம் செய்து பார்த்தேன். கட்டி கரையவில்லை. டாக்டரிடம் சென்றேன், ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்படியும் கட்டி கரைந்தபாடில்லை.
தோல் நோய் மருத்துவரிடம் சென்றோம். அவர் வேறு ஒரு டாக்டரிடம் அனுப்பினார். அந்த டாக்டர்,  ‘மயக்க மருந்து கொடுத்து கட்டியை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெட்டி அகற்ற வேண்டும் என்று கூறினார்.
பெருங்களத்தூர் பாபா கோயிலில் தரப்பட்ட உதியை, பாபாவின் முன் வைத்து, ‘பாபா!, நீங்களே மருத்துவராக இருந்து கட்டியைக் கரைய வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, உதியை என் மகனின் கன்னத்தில் தடவினேன். தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தேன். மறுநாள் முதல் கட்டி சிறிது சிறிதாகக் கரையத் தொடங்கியது.
இரண்டு மூன்று நாட்களில் கட்டி இல்லாமல் போய்விட்டது. பாபாவுக்கு நன்றி சொன்னேன். என் மகள் பவித்ராவுக்கு திடீரென்று ஒரு நாள் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டார்கள். மாத்திரை கொடுத்தார். ஆனாலும் காய்ச்சல் நிற்கவேயில்லை. விட்டு விட்டு வந்தது. ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது.
மிகவும் சோர்வாக இருந்தாள். டாக்டர் இரத்தப்பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார். அப்போதும் உடனே பெருங்களத்தூர் பாபா கோயில் உதியை என் மகளின் உடலில் பூசினேன். நெற்றியில் பூசி, தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தேன்.
பாபாவிடம், இரத்தப் பரிசோதனை செய்யப்போகக் கூடாது, காய்ச்சல் வரக்கூடாது. அப்படி குணமானால் சாயி தரிசனம் புத்தகத்தில் சாட்சியாக எழுதுகிறேன் என மனம் உருக வேண்டினேன்.
டாக்டரிடம் சென்றோம். காய்ச்சல் இப்போது இல்லை, இரத்தப் பரிசோதனையும் தேவை யில்லை என்று சொல்லிவிட்டார்.  அவள் முகம் தெளிவடைந்தது. மறுநாள் பள்ளிக்குக் கிளம்பினாள்.

சோதனை வரும்போது முதலில் மற்ற பரிகாரம் பற்றியே நினைவு வருகிறது. முடிவில்தான் கடவுள் நினைவு வந்து வேண்டிக்கொள்கிறோம். அந்த நிலையிலும் நம்மை மேலும் சோதிக்காமல் நாம் கேட்டவுடனே, வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் பாபா.

கவலைப்படாதே உனக்கு ஒன்றும் ஆகாது!



கடவுள் மிகவும் கருணை உள்ளவர். பக்தர்களின் மீது இரக்கமும் உருக்கமும், நீடித்த பொறுமையும் உள்ளவர். நாம் துக்கப்பட்டால், துயரப்பட்டால் அவரால் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர் நம் மீது வைக்கிற பாசத்தால் மாயையில் சிக்கிக் கொண்டு நம்மைப் போலவே பலமற்ற மனம் கொண்டவராக மாறிவிடுகிறார். பெற்ற தாய் தந்தையர் எப்படி பிள்ளைகளைப்பற்றி இரவு பகலாக சிந்திக்கிறார்களோ அப்படியே சிந்திக்கிறார். சத் சரித்திரமும் பாபா இதைத்தான் சொன்னதாகக் கூறுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவு விக்ஷயத்திற்கு பாபா முதல் இடம் தருகிறார். அன்னமே பிரம்மம் என்பது அவர் கருத்து. பசியோடு இருக்கும் எந்த உயிருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதை விதிமுறையாகவே தனது பக்தர்களுக்கு அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
பட்டினியால் வாடிய ஓர் அம்மாவுக்கு எப்படி உதவினார் என்பதையும், பட்டினி இருக்க விரும்பிய ஓர் அம்மாவை எப்படி அதிலிருந்து மீட்டார் என்பதையும் பற்றி கூறுகிறேன், தெரிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் ஓர் அம்மாவை சந்திக்க நேர்ந்தது. கடந்த காலங்களில் அந்தத் தாயார் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் பேசியதில் ஒரு விக்ஷயத்தைச் சொன்னார்.  சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கஷ்ட காலம் எங்களைப் பிடித்துக்கொண்டது. இருந்ததையெல்லாம் இழந்தோம். வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நானும் என் கணவர் பிள்ளைகளும் வனவாசம் மேற்கொண்டோம்.
அந்தக் காலத்தில் எங்கள் சம்பாத்தியமாக மூவாயிரம் ரூபாயில் ஒரு நிலத்தை வாங்கியிருந்தோம். அதைப்பார்க்க, என் கணவருடன் சென்றுகொண்டிருந்தேன். பற்றாக் குறையால் தவித்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டில் உணவு இல்லை, நிறை மாத கர்ப்பிணியான எனக்கு சரியான பசி. வரும் வழியில் ஓர் அத்திமரம் இருந்தது. அதில் இரண்டு மூன்று பழங்களைப் பறித்து சாப்பிட்டுவிட்டு, வாய்க்கால் நீரை அள்ளிக் குடித்து பசியாறியபடி வயலுக்கு வந்தேன்.
வெயிலில் களைப்பு அதிகமாக இருந்ததால், வயலில் இருந்த வேப்ப மரத்தடியில் ஒரு வேர் மீது தலை வைத்துப்படுத்துக் கொண்டேன். என் கணவர் என்னருகில் அமர்ந்திருந்தார்.. படுத்த சிறிது நேரத்தில் நான் உறங்கிப் போனேன்.
அப்போது ஒரு கனவு. வயதான ஒரு பெரியவர் வந்து என் அருகே அமர்ந்தார். நீண்ட தாடியும், ஜடா முடியும் வைத்திருந்தார். கையில் பிரம்பு ஒன்றும் இருந்தது.

 எனது தலையை அவர் மடி மீது வைத்து வருடிக்கொடுத்தபடி,  ‘மகளே! களைப்பாக இருக்கிறாயா? அன்னம் பிரம்மம்! நீ போய் சாப்பிடுமகளே, கவலைப்படாதே! உனக்கு ஒன்றும் ஆகாது. அமைதியாக உறங்கு. இது என் இடம். இதில்தான் நான் வசிக்கிறேன்.
உச்சி வெயிலில் இந்த இடத்திற்கு யாரும் வருவதை அனுமதிக்க மாட்டேன், விரும்பவும் மாட்டேன். நீ பசியால் களைத்திருப்பதால் உன் மீது எனக்குக் கோபமில்லை! பரிதாபம்தான் வருகிறது. இன்று உன்னை உபசரித்து அனுப்புகிறேன்.. நாளை முதல் இந்த நேரத்தில் இங்கு வந்து படுக்காதே.. இதைப் பின்பற்றினால் உன்னை எப்பொழுதும் காத்து அருள்வேன் என்றார்.
தந்தையாரின் ஸ்பரிசத்தை விட மென்மையான ஸ்பரிசம் அது. அந்த ஸ்பரிசத்தை நான் நிஜமாக உணர்ந்ததால் அதை கனவு என்று சொல்ல முடியாது. திடுக்கிட்டு எழுந்தேன்..
கணவர் பதறியபடி, என்ன? என்ன?எனக் கேட்க, நடந்ததைச் சொன்னேன்.
கடவுள் வந்திருக்கிறார்’, என்றவர், உடனே கை கூப்பி அந்த மரத்தை வணங்கி,  ‘மனித உறவுகள் யாரும் எங்களுக்கு இல்லை.  நீயே கதி. வேறு வழி இல்லாத நிலையில் இருக்கிறோம். குற்றம் குறை பொறுத்து எங்கள் குல தெய்வமாக இருந்து எங்களைக் காப்பாற்று என வேண்டினார்.
எத்தனையோ பசி பட்டினியான காலங்களைக் கடந்து வாழ்ந்தோம்.. என் மக்களை அவர் வளர்த்தார். இன்று கடவுள் என்று கைதொழும் அளவில் என் பிள்ளைகளில் சிலர் உயர்ந்து நிற்கிறார்கள். அதைப் பார்க்கப் பார்க்கப் பூரிப்பாக இருக்கிறது. இந்தக் கடவுள் எங்களுக்காக எங்களுடனேயே தங்கிவிட்டார்..
பல காலங்களுக்குப் பிறகு, எனது குடும்பம் சாயி பக்தக் குடும்பமானது. இப்போதுதான் தெரிகிறது, அன்று வந்ததும் அரவணைத்ததும் அவரே என்பது. அநேக ரூபங்களில் உலவும் இறைவன் அவர். அவரது கருணையை நினைத்தால் இன்றும் என் உடலில் மயிர்க்கூச்செரிகிறது என்றார்.
எனக்கு உடனே பாபா சொன்ன இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச்செல்கிறேன்.. போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்து கொள்கிறேன்.. ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம் போல் கீழ் நோக்கிப் பாய்கிறது.
இந்த மாயையில் இருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும், தீனனாகவும் ஆக்கி விடுகிறது.. இரவு பகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது! - ( ஸ்ரீ பாபா. அத் - 32)
எவ்வளவு அற்புதமான கடவுள் பாபா! இவரை கடவுளாக அறிவதற்கு நாம் பல ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
பசியோடு இருந்த அம்மாவுக்கு வேறு ஒரு ரூபத்தில் குல தெய்வமாக அமர்ந்து, பல ஆண்டுகள் கழித்து தன்னை பாபா என வெளிப்படுத்தினார். பசியை தானாக வரவழைத்துக்கொண்ட ஒரு அம்மாவுக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். இதை சத்சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.
கேள்கர் என்ற பாபா பக்தருக்கு காசீபாயி கானிட்கர் என்ற உறவினர் இருந்தார். அவருக்கு வேண்டிய ஒரு பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. திருமதி கோகலே என்பார்கள். இந்த அம்மையாருக்கு பாபாவை தரிசனம் செய்து வைக்குமாறு கேள்கருக்கு அறிமுகக்கடிதம் கொடுத்தனுப்பினார் கானிட்கர்.
அறிமுகக் கடிதத்தோடு சீரடி வந்த அம்மையார், சாயி மகராஜின் பாதங்களில் மூன்று நாட்கள் உபவாசமாக உட்காருவது என்ற தீர்மானித்தார். எல்லாவற்றையும் அறிகிற இறைவனான சாயி, அந்தத் திட்டத்தை முறியடிக்க திருவுளம் கொண்டார். கேள்கரை அழைத்து, ஹோலிப்பண்டிகைப் போன்ற நன்னாளில் என் குழந்தைகள் பட்டினி கிடப்பதை நான் அனுமதிக்கமுடியாது.. அதைப்பார்த்துக் கொண்டு என்னால் இங்கு அமைதியாக உட்காரவும் முடியாது. என்று சொன்னார்.
பாபா பட்டினி கிடந்ததில்லை. பிறரையும் பட்டினி கிடக்க அனுமதித்தது இல்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது.. அவர் எப்படி ஆன்மீக சாதனைகளை ஏற்க முடியும்?
வெறும் வயிற்றுடன் கடவுளை அடைய முடியாது. யுக முடிவு வரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது.
ஆகவே முதலில் ஆத்மாவை திருப்தி செய்யுங்கள்.. பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப் படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக்கேட்கும்..என்றார்.
ஆன்மீக சாதனைகளை விரும்பு வோர் முதலில் ஒரு சோள ரொட்டித் துண்டையாவது சாப்பிட்டாக வேண்டும் என்பதே பாபாவின் விதிமுறை.
மறுநாள் திருமதி கோகலே சீரடிக்கு வந்தார். பாபாவை கண் குளிர தரிசனம் செய்துகொண்டு அமர்ந்திருந்தார். அப்போது பாபா, உணவு மகா விஷ்ணு ரூபம், உண்பவரும் மகாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத்தின்பது, பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது,  எதற்காக இந்த வீண் சிரமம்? என்றவர்,
நேரடி யாக அந்தப் பெண்மணியிடம், ‘ எதற்காகப் பட்டினி கிடக்கவேண்டும்? தாதா கேள்கரின் இல்லத்திற்குச் சென்று சந்தோக்ஷமாகப் பூரண போளிகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்! என்றார்.
அந்த அம்மையார் உணவு தயாரிப்பதற்கான சூழலையும் எப்படி ஏற்படுத்தினார் தெரியுமா?
கேள்கரின் மனைவி மாதவிலக்காகி வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் திருமதி கோகலே அந்த வீட்டில் தானே சமைக்கவும், தன் கையால் பிறருக்கு பரிமாறிவிட்டுத்தானே சாப்பிடவும் வேண்டியதாகிவிட்டது.
உபவாசம் என்ற பெயரில் பட்டினி கிடப்தை விட, பிறர் பசியாற்றும் உபகாரச் செயல்களை மேற்கொள்வது சிறந்தது என்கிறார் பாபா. அப்படியானால் விரதம் இருப்பது தவறானதா? என்ற கேள்வி பக்தர்கள் மனதில் எழும். தவறானது அல்ல.. ஆனால் சாயி பக்தர்களுக்கு இது தேவையில்லாதது என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் பாபாவே தன் பக்தர்கள் மீது எப்போதும் எண்ணம் உள்ளவராக இருக்கும்போது, விரதம் இருந்து எதை சாதிக்கப் போகிறீர்கள்?
விரதத்தால் கடவுள் இறங்கி வரமாட்டார்.

விரதம் என்ற பெயரில் மனத்தூய்மை அடையும் போது நீங்கள் கடவுளிடம் ஏறிச் செல்கிறீர்கள் என்பார்கள். மிதமாக சாப்பிட்டுவிட்டு, உணவு இல்லாதவருக்கு, பசித்தவருக்கு உணவு தரும் வேலையைச் செய்து வாருங்கள்.. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தானாக சரியாகும்..

விநாயகர் வழிபாட்டுத்தத்துவம்!

விநாயகர் வழிபாட்டைச் செய்தபிறகே மற்ற கடவுள்களுக்குப் பூசைகள் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
                                     (பி.வி. சுப்பிரமணியன், திருச்சி)

இதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. விநயம் என்றால் பணிவு, அடக்கம், விவேகம், நிதானம் என்று பொருள். இறை வழிபாடு செய்யும் முன் நமக்கு பணிவும், அடக்கமும், நிதானமும் தேவை.
யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடப்பது விநயம். அப்படி நடக்கத் தெரிந்தவர், இதற்கு உதாரண புருஷர் விநாயகர்.
இதனால்தான் விநாயகர் வழிபாடு வித்தைகளையும், செல்வ சுகத்தையும், முக்தியையும் தரும் என்றார்கள். பணிவு, அடக்கம், நிதானம் ஆகியவை நமக்கு எப்போதும் தேவை. யார் யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதையும் அறியவேண்டும்.
இதனால் நமக்கு தகுதி வந்துவிடும். இந்த தகுதியை யோக்கியதை என்றனர். யோக்கியமான ஒருவனை பிறர் மதிப்பார்கள். பிறர் மதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு கவுரவம் தருவார்கள், அவன் பொருள் மட்டுமல்ல, சொல்லும் விலை போகும். இதைத்தான் வித்தையும் பலிக்கும் என்றார்கள்.
இறைவனை வணங்கும் முன்பு முதலில் இதைக் கற்றுக்கொண்டால் எல்லாம் சித்திக்கும் என்றார்கள். இதை நாம் கற்றுக்கொள்ளாமல் இறைவனை வணங்கினால் பலன் கிடைக்காது என்பதே விநாயகர் வழிபாட்டின் உண்மையான பொருள்.
என்னைப் பொறுத்தவரை விநாயகர் என்றால் பணிவுடையவர், பணிவு உடையவர்களுக்கு எல்லாம் தலைவர் (மிகவும் பணிவு மிக்கவர்) என்றே பொருள் கொள்வேன். தாய் தந்தையே உலகம் என்ற பணிவு அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
மஞ்சளைப் பிடித்து வைத்தாலும், சாணியைப் பிடித்து வைத்தாலும், மண்ணைப் பிடித்து வைத்தாலும் அதையும் தன் உருவாக - கோயிலாக ஏற்பவர். குளக்கரை, மரத்தடி என எந்த எளிய இடத்திலும் எழுந்தருளி வரந்தருபவர் இவர். உயர்ந்தப் பிரணவமாக இருந்தும் எளியவர்களுக்காக எளிமையாக இறங்கிவந்துவிடுகிறவர் கடவுள் என்பதற்கு உதாரணம் விநாயகர்.
இவரைப் போல, நீ எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அதை உனக்கு உரியதாக எடுத்துக்கொண்டு, எப்போதும் பணிவாக இரு... உலகைப் படைத்த பிரணவமே பணிவுடன் இருக்கும்போது நாம் அகந்தை கொள்ளக்கூடாது என அடங்கியிரு என உணர்த்தவே முதலில் விநாயகர் வழிபாட்டைச் செய்யச் சொல்வதாக நினைக்கிறேன்.

அடக்கம் (விநயம்) அமரருள் உய்க்கும் என்பது இதன் பொருட்டே. அவிநயம் அதாவது அடங்காமை துன்பத்தைக் கொடுக்கும். அடக்கத்தோடு நடந்தால் விநாயகரைப் போல முதல் தெய்வமாக வணங்கப்படுவாய், இல்லாவிட்டால் துன்பப்படுவாய் எனவும் பொருள் கொள்ளலாம்.

Saturday, August 24, 2013

பாபாவும் அனுமனும்



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

பாபா தன் பக்தர்களிடம் தன்னைப் பற்றி சொல்லும்போது, நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்குக் கடன் பட்டவன். உங்கள் தரிசனத்திலேயே திருப்தியடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்கள் மலத்திலுள்ள ஒரு புழு. அங்கனமாகவே என்னை நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக்க் கருதுகிறேன்!என்று சொன்னார்.
பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர் போல தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ, அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.
அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.
பார்த்தார் எனினும் பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை. 
காம உணர்வுகளைப் பற்றி கருதுங்கால் அவர் அனுமனைப் போன்ற பூரண பிரம்மசாரியுமாவார்.
எதன் பாலும் பற்றற்றவராக இருந்தார்.
அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.
சுருக்கமாக அவர் அவாவற்றவர்.
கட்டற்றவர்.
முழு நிறைவானவர்.


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 10


Friday, August 23, 2013

கடுமையான பரீட்சை



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

நம்முடைய மனதில் என்ன 
நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ 
அதை பாபா நிறைவேற்றி விடுவார்.
சில சமயம் பாபா மனிதனை எல்லை
வரை இழுத்துவிடுகிறார். 
அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும்
கடுமையான பரீட்சை வைத்துவிடுகிறார். 
அதன் பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்.”


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 18 – 129-130

பாபா பயன்படுத்திய கிணறு

சீரடியில் பாபா பயன்படுத்திய கிணறு

சீரடி லெண்டித் தோட்டத்தில் பாபா பயன்படுத்திய கிணறு இன்றும் உள்ளது. சீரடியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்தக்கிணற்றை ஆழப்படுத்த சமீபத்தில் சீரடி சன்ஸ்தான் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கிணறு திறக்கப்பட்டு அதை தூர் வாரிய போது, அதில் ஏராளமான நாணயங்கள், நகைகள், மற்றும் பிறப் பொருட்கள் ஆகியவை கண்டு எடுக்கப்பட்டன. கிணற்றில் கிடந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போன்ற நாணயங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒண்ரரை லட்சம் என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பாபா பயன்படுத்தியக் கிணற்றின் மீதும் பக்தர்கள் செலுத்தும் பக்திக்கு சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
                                                        வி.நந்தினி,
                                                   சைதாப்பேட்டை,
                                                         சென்னை



Thursday, August 22, 2013

உன் உடம்பை கவனி



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது.  ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்.
இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள் காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்த வேண்டும்


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 6

Wednesday, August 21, 2013

எங்கும் எதிலும் நானே!


ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும்.  நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண், அசையும், அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.  இப்பிரபஞ்சமெனும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.  முக்குணங்களின் கூட்டுறவும் நானே.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்.  என்பால் கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது.  ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.  எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 3

Thursday, August 1, 2013

சாயி - ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-8





சாயி  - ஷிர்டி பாபாவின் புனித சரிதம் - குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 8  னை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...