Showing posts with label ஸ்ரீ சாயி தரிசனம்.. Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயி தரிசனம்.. Show all posts

Wednesday, May 30, 2018

ஆத்மார்த்தமாக அழை!



நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவதும் இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான்.
நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை. அதே போல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.
ஸ்ரீ சாயி தரிசனம்.

Monday, August 8, 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயம்

கீரப்பாக்கம் பாபா ஆலயம் நீங்கள் இதுவரை கண்ட பாபா ஆலயங்களில் இருந்து வித்தியாசமானது. அங்கே பூசாரிகள் யாரும் கிடையாது. நடை சார்த்த வேண்டும் சீக்கிரம் கிளம்புங்கள் எனக் கூறுவோர் கிடையாது. பாபாவை இப்படி வழிபடுங்கள் எனக் கூறுவோருமில்லை. பாபாவை தொடலாம், தொடக் கூடாது என்ற கட்டுப்பாடும் கிடையாது.
வடநாடுகளில் உள்ளது போன்ற வழிபாட்டு முறை இங்கே பின்பற்றப்படுகிறது. உங்களால் முடிந்தவரை பாபாவைத் தொட்டு வணங்கலாம், அவருக்கு நைவேத்தியம் படைக்கலாம். காலையில் சென்றால் அபிஷேகம் செய்யலாம். ஆடை உடுத்தலாம்.
இந்தக் கோயில் உங்கள் கைங்கர்யத்தால் உங்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். ஆத்மார்த்தமாக வந்து வேண்டிக் கொள்வோரும், தனியாக அமர்ந்து பாபாவிடம் பேச விரும்புவோரும் பலன் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோயில்.
கோயிலுக்கு அடுத்த கட்டிடத்தில் அரிசி போன்ற பொருட்கள் தயாராக உள்ளன. பசி எடுத்தால் நீங்களே சமைத்து சாப்பிடலாம்; இல்லாவிட்டால் கோயிலை நிர்வாகம் செய்கிற ரவி ரங்கர், முன்னாள் தாசில்தார் சம்பந்தம், அவருடைய மகள் பிரேமா ஆகியோர் அருகில் இருப்பார்கள். அவர்களிடம் கூறி உங்கள் தேவையைப் பூர்;த்தி செய்து கொள்ளலாம்.
இந்த ஆலயம் 2013 டிசம்பர் மாதம் உருவானது. முதலில் இருந்த ஷெட் அகற்றப்பட்டு தற்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைகள் உள்ளன.
ஓய்வு எடுக்க அன்னதானக் கூடத்தை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். சென்னை புதுப்பெருங்களத்தூரை தலைமையகமாகக் கொண்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ அறக்கட்டளை இதை உருவாக்கியுள்ளது.  விடுமுறை நாட்களிலும், சுற்றுலா போகும் போதும் இதை தரிசித்துச் செல்லலாம்.
சீரடி செல்வதற்கு முன்பு சாயி பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தில் வழிபட்டுச் செல்கிறார்கள். வேறு எந்த பாபா ஆலயத்திலும் தேங்காய் உடைக்க அனுமதி கிடையாது. இங்கே அதுவும் உண்டு என்பதால் பக் தர்கள் வந்து செல்கிறார்கள். இது தவிர, சபரி மலைச் செல்லும் சாயி பக்தர்களும் இங்கு வந்து சுவாமிக்கு விளக்குப் போட நெய்யை சமர்ப்பித்து தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.
ஆலயம் எப்போதுமே திறந்திருக்கிறது என்றாலும் மலைப்பகுதியில் தனிமையாக இருப்பதால் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போவது நல்லது.
தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வழியாக 55 டி என்ற பேருந்து செல்கிறது. இது தவிர கேளம்பாக்கம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டிகை வழியாகத்தான் செல்கின்றன. கண்டிகையில் இறங்கி பேருந்து மாறிக் கொள்ளலாம்.
பேருந்து நேரம்: தாம்பரத்திலிருந்து
காலை 5.15, 6,1,0 7,2,0 8.1,0 9.3,0 10.3,0 11.4,0 12.3,0 1.35, 2.4,0 3.2,0 4.45, 5.3,0 6.55, 7.4,0 8.45
கீரப்பாக்கத்திலிருந்து தாம்பரம் செல்ல
காலை 6.15, 7.1,0 8.25, 9.15, 10.35,11.25, மாலை 3.4,0 4.25, 5.5,0 6.05, 8.4,0 9.50.
இடைப்பட்ட நேரத்தில் கீரப்பாக்கத்திலிருந்து மினி பேருந்துகள் செல்கின்றன. ரவி சங்கரை தொடர்பு கொண்டாலும் ஏற்பாடுகள் செய்து தருவார்.
அவருடைய தொலைபேசி் 9710205032

Friday, August 5, 2016

விதுர நீதி சொல்வது…….

எவன் ஆபத்துக் காலங்களில் கலங்குவது கிடையாதோ, கவனத்துடன் செயல் புரிந்துகொண்டே இருக்கிறானோ, சமயம் நேரும்போது துக்கத்தையும் பொறுத்துக் கொள்கிறானோ அவனுடைய விரோதி அழிந்துவிடுகிறான்.
எவன் காரணம் இன்றி வெளிநாட்டுக்குச் செல்வது இல்லையோ, பாவிகளுடன் சேர்வது இல்லையோ, பிறன் மனைவியை ஏறெடுத்துப் பார்ப்பதில்லையோ, செருக்குக் கொள்வதில்லையோ, திருட்டு, கோள் சொல்லுதல், கள் குடித்தல் இவற்றை செய்யாமல் இருக்கிறானோ அவன் எப்போதும் சுகமாயிருக்கிறான்.
உறுதியான புத்தியுடன், செய்யத் தக்கது, செய்யத் தகாததை நிச்சயம் செய்து, சாமம் பேதம், தானம், தண்டம் இந்நான்கு உபாயங்களால் நண்பர், பகைவர், நட்பு பகை இரண்டும் அற்ற அயலார், ஆகிய எல்லோரையும் வசப்படுத்த வேண்டும்.
வித்தாலும் ஆயுதத்தாலும் ஒருவன் தான் கொல்லப்படுகிறான். கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது. பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணம் ஆகும். திறமை சாலிகளுக்கு அது ஓர் அணிகலன்.
எவனுடைய கையில் பொறுமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்த விதக் கெடுதலையும் செய்யமுடியாது.
தான் செய்த தீய செயல்களை பிறர் அறியாமல் போனாலும் கூட தனக்குத் தானே அது பற்றி வெட்கம் கொள்கிறானோ, அவன் கெட்ட கர்மங்கள் விலகி சென்று விடுகின்றன. அவனுக்கு அமைதி கிடைக்கிறது.
பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று நல்ல தகுதியுடையவர்கட்குக் கொடுக்காமல் இருத்தல்.
அன்புடையவன், பணிவிடை செய்பவன், நான் உன்னைச் சார்ந்தவன் என்று அடைக்கலம் புகுந்தவன் ஆகியோரை ஒரு போதும் கைவிடக்கூடாது.
நான்கு விக்ஷயங்கள் விரைவிலேயே பலன் தரும். அவை தேவதைகளை தியானிப்பதால் மனோரதம் பூர்த்தியாகும். அறிவாளியின் நுட்பமான அறிவினால் ரகஸ்யமான விவரங்கள் தெரியவரும். அறிர்களின் பணிவை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர்.
பாவத்தைத் துறப்பதால் மனதில் சாந்தி ஏற்படுகிறது.
அக்னி ஹோத்ரம், பேசா நோன்பு, வேதாத்யயனம், யாகம் இவை தற்பெருமைக்காகச் செய்யப்பட்டால் மாறான பலன்களைத் தரும்.
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர் இந்த ஐவரையும் தினமும் பூஜிப்பவன்
மிகுந்த மரியாதைக்கு உரியவன்.
காமம், கோபம், சோகம், மோகம், மதம், பெருமை என்கிற இவை ஆறும் எவனிடத்தில் கட்டுப்பட்டு உள்ளனவோ அவன் புலன்களை வென்றவன்.
எவர் பிறரது மேன்மையைக் காணப் பொறுப்ப தில்லையோ, மகிழ்ச்சி கொள்வதில்லையோ, சினம் கொள்கிறார்களோ, எவரிடத்திலும் நம்பிக்கை, எவர் பிறரை நம்பியே வாழ்கிறாரோ, எவர் பிறரை வெறுக்கிறார்களோ, அவர்கள் எப்பொழுதும் துயரம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அந்தணர்களை வெறுத்தல், அவர்களிடம் சண்டையிடுதல், செல்வத்தை பிடுங்கிக்கொள்ளுதல், கொல்ல விரும்புதல், அவர்களை இகழ்தல், அவர்களை மறந்துவிடுதல், அவர்கள் எதையாவது ஏற்க வரும் போது அவர்களுடைய குறைகளைக் கூறுதல், அவர்களைப் புகழ்ந்து பேசுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல் ஆகிய எட்டும் இனி நேரப் போகும் அழி வைக் குறிக்கின்றன.
குடியர்கள், புலன் இன்பத்தில் கருத்துடையோர், மனநோய் பிடித்தவர், களைத்துப் போனவர்;, சினம் மிக்கவர்;, பசியாக இருப்பவர்;, ஆவல் கொண்டவர்கள், பேராசைப் பிடித்தவர்;, கோழை, காமம் மிகுந்தவர் இவர்கள் அறத்தின் நுட்பத்தை அறிந்துகொள்ள இயலாதவர்கள். ஆகவே, இவர்களுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

Friday, July 15, 2016

விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும்



வீட்டுக்கு வரும் விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?
விமலா, திருநெல்வேலி
 
சாயி புத்ரன் பதில்கள்

நாம் எதிர்பாராமல் வந்து, நம்மிடம் உணவும் உபசாரமும் பெறும் விருந்தாளியானவர் நமக்கு அன்னதானம் செய்த பலனைத் தரக்கூடியவராவார். தேடி வந்து நமக்கு நன்மை செய்வதால் அவரையும் தெய்வத்துக்கு இணையாக பாவிக்க வேண்டும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...