Sunday, June 30, 2013

சீரடியை வளர்த்த ராம நவமித் திருவிழா




1897 - ம் ஆண்டு வாக்கிலிருந்துதான் சீரடிக்கு ஏராளமானன மக்கள் வர ஆரம்பித்தார்கள் என்று சொல்லலாம். அதற்கு முன்பெல்லாம் சீரடியில் பாபாவுக்காக வரும் பக்தர்கள் கூட்டம் சிறு நூறுகள் அல்லது சில ஆயிரங்களிலேயே இருந்தன. அதன் பிறகு அது ஏழாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் வரை உயர்ந்தது. பிறகு லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் சீரடியில் குவியத் தொடங்கியது.
இத்தகைய சிறப்பு மிக்க ராம நவமித் திருவிழா சீரடியில் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதே மக்கள் வெள்ளம் திரள ஆரம்பித்தது. இதற்கு வித்திட்டது ஒரு சர்வேயர். அவரது பெயர் கோபால் ராவ் குண்ட். அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லை. பாபாவை வேண்டிக் கொண்டு பிள்ளைப்பேறு கிடைத்ததும் அதற்கு நன்றிக்கடனாக ஏதாவது ஒரு விழாவை நடத்தவே அவர் தீர்மானித்திருந்தார்.
பாபா முஸ்லீம் என கருதப்பட்டதால், அவரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகவோ என்னவோ, அவர் முஸ்லீம் மகான்களின் நினைவு தினமான உரூஸ் பண்டிகையைக் கொண்டாட விரும்பி, தன் போன்ற பக்தர்களான தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், சாமா போன்றவர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் பாபாவிடம் வேண்டி அனுமதியைப் பெற்றபோதிலும், அந்த ஊர் கிராம முன்சீப் குல்கர்னி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அனுமதி தரக்கூடாது என்று எழுதி அனுப்பினார். ஆனால் பாபாவின் அனுக்கிரகம் இருந்ததால் விழாவுக்கு அரசு அனுமதி அளித்தது.  அதன் பிறகு, உரூஸ் கொண்டாடப் பட்டது. இந்த தினம் ராமநவமி தினமாக இருக்கக் கூடும் என பக்தர்கள் தீர்மானித்தனர். அதன் விளைவாகத்தான் இரண்டு விழாக்களையும் ஒன்றாக நடத்த முடிவு செய்தனர்.
இந்துக்களும், முஸ்லிம்களும் இதற்கு ஒப்புதல் தரவே, விழா களைகட்டத் தொடங்கியது. சீரடியில் இந்து முஸ்லீம் இணைப்புக்கு இது பாலமாக விளங்கியது. இதில் சந்தனக்கூடு ஊர்வலம் போன்றவையும் சேர்ந்து விழாவைப்புதுமையாக்கியது. இது 1912-ல் நடந்தது.
பாபாவின் முஸ்லீம் பக்தரான அமீர் சக்கர் அவர்களின் மேற்பார்வையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. மூன்று ஆண்டுக்குப் பிறகு அவரது மனைவி இதை மேற்பார்வை செய்தார்.
ராமநவமித் திருவிழா பெரிய அளவில் பேசப்படுவதற்கும், சீரடி ஒரு சமஸ்தானமாக மாறுவதற்கும் ராதா கிருஷ்ண மாயி என்ற அன்னை தான் காரணம். அவரது கடுமையான உழைப்பு காரணமாக செல்வந்தர்கள், பக்தர்கள் என சேர்ந்து ராமநவமித்திருவிழாவை பிரபல்யப் படுத்தினார்கள். இந்த விழா மிகப்பெரிய அளவு பிரபல்யமானது
1912 - ம் ஆண்டில்தான். கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மா என்ற பக்தர், காகா மகாஜனி ஆகியோர் கலந்து பேசிதான் உணுஸ் தினத்தில் ராம நவமி கொண்டாட பாபாவிடம் அனுமதி பெற்றனர்.
ராமர் பற்றிய பாடல்கள் அனைத்தையும் பீஷ்மா இயற்றிப் பாடினார். பகலில் ராமநவமித் திருவிழா, இரவில் சந்தனக் கூடு விழா என நடந்தது. 1913 - ல் இருந்து ராம நவமிக் கொண்டாட்டத்தில் நிகழ்ச்சிகள் அதிகமாக்கப் பட்டன.
சித்திரை முதல் தேதியிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள் ராதாகிருஷ்ணமாயி. பக்தர்கள் அனைவரும் முறை வைத்துக் கொண்டனர்.  சித்திரை ஒன்று முதல் பன்னிரண்டாம் தேதி வரை பக்தர்களின் கூட்டத்தால் சீரடி திணற ஆரம்பித்தது. மல்யுத்தப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்குப் பிறகுதான் தாஸ்கணு மகராஜ் பாபாவிடம் வந்து அங்கு கீர்த்தனை செய்தார். துவக்கத்தில் ஐந்து முதல் ஏழாயிரம் பேராக இருந்த மக்கள் கூட்டம், எழுபத்தைந்தாயிரமாக உயர்ந்தது. இந்தளவுக்கு சீரடியை ராமநவமித் திருவிழா உயர்த்தியது.
நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் இந்த விழா ராம நவமி அன்று மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. காலை முதல் பகல் பன்னிரண்டு மணி வரை ஹோமம், ஆரத்தி, அன்னதானம் என அமர்க்களப்படும். இடம் சிறியதாக இருப்பதாலும், பக்கத்தில் கிறித்தவ குடும்பத்தின் இடையூறாலும் இவ்விழா எளிமையாக நடைபெற்றாலும் பக்தர்கள் எறும்புகளைப் போல வருகிறார்கள். உண்மையாகவே வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புகளைப்போல, பக்தர்கள் வரிசையாக தெருவில் நின்று பாபாவை தரிசிக்க வருவது நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் காணக் கண்கொள்ளாக்காட்சியாகும். அனைவரும் வாருங்கள், அவன் அருளைப் பெறுங்கள்.

Saturday, June 29, 2013

சின்னதோ பெரியதோ உன் கோரிக்கைகளை பாபா கேட்பார்!




சாயி பாபா செய்த அற்புதம்

என் பெயர் பத்மாவதி. என் கணவர் பெயர் துரைராஜ். சென்னை நுங்கம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தோம். ஐந்து பிள்ளைகள். கஷ்டத்தோடுதான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என் கணவர் குடித்தே வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு, பாதி நாள் வாழ்க்கையோடு வாழ்வை முடித்துக்கொண்டார்.
அம்மனைத்தான் வணங்குவேன். பாபா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. போன ஜென்மத்துப்புண்ணியம் இருந்ததால் அவர் எங்களை காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போல இழுத்துக் கொண்டார். எப்பொழுதும் அவரது நாமத்தையே இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கும் நிலையைத் தந்தார் அவர்.
என் மகள் மற்றும் குடும்பத்தார் சாயி தரிசனம் பத்திரிகையை வாங்கிப்படிப்பார்கள். என்னை ஒரு நாள் ஆலந்தூரில் உள்ள எனது தங்கை சாவித்திரி என்னை சீரடிக்குப் போகலாம் என அழைத்தாள். நானும் அவளும் இரண்டு பேரும் மட்டும் சீரடிக்குப் போனோம். பாபாவின் இடங்களை தரிசித்து பரவசமடைந்தோம். அதன் பிறகு சென்னை வந்த நான் தீவிர சாயி பக்தையாகி. எல்லாவற்றுக்கும் அவரையே நம்ப ஆரம்பித்தேன்.
என் கணவருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உரிமையான இடம் பாகம் பிரிக்கப்படாமல் இருந்தது. அவர் போய் விட்ட நிலையில் அது பெரிய பிரச்சினையாக ரூபம் எடுத்தது. பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து வேண்டிக் கொண்டேன். ஒரு பிரச்சினையும் இல்லாமல் பாகம் பிரிக்கப்பட்டது.
என் மகனுக்குத் தலைவலி வருவதைத் தவிர்க்க எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பான். ஒரு முறை, மீஞ்சூர் போக ரயிலுக்கு நின்றிருந்தோம்.  இரவு நேரம் வேறு. கூட்ட நெரிசலில் கண்ணாடி தவறி கீழே விழுந்துவிட்டது. கூட்டம் கண்ணாடியை மிதித்திருககும் என நினைத்தோம். பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். வண்டி போன பிறகு செல்போன் வெளிச்சத்தில் தேடிப் பார்த்தால், சிறு கீறல் கூட இல்லாமல் இருந்தது.
என் கடைசி மருமகளுக்கு இரண்டாவது பிரசவம். சர்க்கரை வியாதி இருந்ததால் அனைவரும் பயந்து கொண்டிருந்தோம். பிரசவ நாளன்று பாபாவின் உதியை அவள் வயிற்றில் தடவி விட்டேன். சிறிது நேரத்தில் நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது. பிறகு சர்க்கரை வியாதியும் குறைந்த்து.

                                                பத்மாவதி, நுங்கம்பாக்கம்.

Friday, June 28, 2013

நில்! கவனி! சொல்!-3






நேற்றைய தொடர்ச்சி
சொல்
இன்றைக்கு வருகிற நிறைய பிரச்சினைகள், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதில்தான் ஆரம்பித்து பரவுகிறது. நின்று நிதானித்து பிறர் கூற வருவதை கவனித்து உணர்ந்துகொண்டால் நாம் எப்படி பதில் பேசலாம் என்பதையும் அறியலாம்.
நாம் சொல்லுகிற வார்த்தைக்கு பதில் சொல் சொல்ல முடியாதவாறு நிதானித்து வார்த்தைகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும்.
உன் போன்ற பெண்களோ, உன் பெண்ணோ கூட இன்றைக்கு தவறான பாதைக்குப் போவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் நிறைய நேரம் போன் மூலம் பேசிக்கொண்டிருப்பதுதான்.. இத்தகைய பேச்சுக்கள் மூலம் ஏமாந்து போவதும் உன் போன்ற பெண் பிள்ளைகள்தான். எனவே, தேவையற்ற விதத்தில் எதையேனும் சொல்வதற்காக அடிக்கடி போன் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிடு. கூடிய வரையில் தகவலை நேரில் சொல்லி அனுப்பு..அல்லது பிறர் மூலம் கூறு.
உன்னோடு அடத்திற்குப் பேசுபவர்கள், அதிக அளவில் நெருங்கி வர நினைத்துப் பேசுபவர்கள் ஆகியோரிடம் நறுக் என ஒரு வார்த்தையில் பதில் சொல்.. நானும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே என்று பேச ஆரம்பித்தால் சிக்கல் வந்துவிடும்.
இன்றைக்கு கோர்ட் படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பாரேன்.. அவர்களில் பலர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பு அவனோ, அவளோ பேசிய பேச்சில் மயங்கி, தனது பெற்றோர் சொற்களை மீறி திருமணம் செய்துகொண்டிருப்பர். கடைசியில் உண்மை சொரூபத்தை அறிய வரும் போது, அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் வாழ்க்கையையே இழந்துவிடுவார்கள்.
இந்த நாக்கு இருக்கிறதே அது நரகத்தையும் உருவாக்கும், சுவர்க்கத்தையும் உருவாக்கும். உனது நாக்கு உன் குடும்பத்தாருக்கு சொர்க்கத்தை உண்டாக்கினால் போதும். மற்ற நேரத்தில் அதில் இருந்து ஒரு வார்த்தையும் பிறக்காமல் பார்த்துக்கொள்வதுதான் நலம்.

மகளே! உன் வாயிலிருந்து புறப்படுகிற சொல் எப்போதும் குறைந்த ஸ்ருதியில் இருக்கவேண்டும். உச்சஸ்தாயியில் சொல்வது பிரச்சினையை உண்டாக்குவதால், சத்தத்தைக் குறைத்துப் பணிவோடும், கனிவோடும் பேசவேண்டும். நமது தகுதிக்கு சமமானவர்கள், நம் வயதுக்கும், தகுதிக்கும் கீழானவர், நம்மோடு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறவர்கள், அலப்புகிற புத்தியுள்ள மக்கள், குழந்தைகள் ஆகியோருடன் எதையும் சொல்வது உசிதமானது அல்ல. உனக்கு மேல் தகுதியுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ மிகைப்படுத்தி, அல்லது எதையேனும் சொல்லி வைப்பதும் ஆபத்து. அதாவது உன் வாயைத் திறந்து எதையும் நீ சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து.
ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தைகளை சொல். அதிலும் பிறர் நலம் சார்ந்த வார்த்தைகளைச்சொல்வது மிகவும் நல்லது. அதைத்தான் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்கப் பழம் என்பார்கள்.
உனது சொல் ஒன்றிரண்டாக இருக்கட்டும். அதற்கு மேல் வந்தால் அதில் பாவங்கள் சேர்ந்து விடும்.. பிரச்சினைக்கு வித்திடும்.
என்ன மகளே! அப்பா இந்தக் கடிதத்தில் எனக்கு தேவையில்லாத விஷயத்தைப் பற்றி சொல்லி வீணடித்துவிட்டார் என்று நினைக்கிறாயா?  என் வார்த்தைகளை நின்று நிதானித்து உணர்ந்து பார். நான் சொல்வதில்தான் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை அறிவாய்.
அடுத்த முறை சந்திக்கலாம் குழந்தாய்!
அன்புடன் அப்பா  சாயி பாபா
மகளே! உன் வாயிலிருந்து புறப்படுகிற சொல் எப்போதும் குறைந்த ஸ்ருதியில் இருக்கவேண்டும். உச்சஸ்தாயியில் சொல்வது பிரச்சினையை உண்டாக்குவதால், சத்தத்தைக் குறைத்துப் பணிவோடும், கனிவோடும் பேசவேண்டும். நமது தகுதிக்கு சமமானவர்கள், நம் வயதுக்கும், தகுதிக்கும் கீழானவர், நம்மோடு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறவர்கள், அலப்புகிற புத்தியுள்ள மக்கள், குழந்தைகள் ஆகியோருடன் எதையும் சொல்வது உசிதமானது அல்ல. உனக்கு மேல் தகுதியுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ மிகைப்படுத்தி, அல்லது எதையேனும் சொல்லி வைப்பதும் ஆபத்து. அதாவது உன் வாயைத் திறந்து எதையும் நீ சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து.

ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தைகளை சொல். அதிலும் பிறர் நலம் சார்ந்த வார்த்தைகளைச்சொல்வது மிகவும் நல்லது. அதைத்தான் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்கப் பழம் என்பார்கள்.
உனது சொல் ஒன்றிரண்டாக இருக்கட்டும். அதற்கு மேல் வந்தால் அதில் பாவங்கள் சேர்ந்து விடும்.. பிரச்சினைக்கு வித்திடும்.
என்ன மகளே! அப்பா இந்தக் கடிதத்தில் எனக்கு தேவையில்லாத விஷயத்தைப் பற்றி சொல்லி வீணடித்துவிட்டார் என்று நினைக்கிறாயா?  என் வார்த்தைகளை நின்று நிதானித்து உணர்ந்து பார். நான் சொல்வதில்தான் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை அறிவாய்.
அடுத்த முறை சந்திக்கலாம் குழந்தாய்!
அன்புடன் அப்பா  சாயி பாபா

சாயி - ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-3






சாயி  - ஷிர்டி பாபாவின் புனித சரிதம் - குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 3 னை படிக்க இங்கே கிளிக்செய்யவும்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...