Monday, December 31, 2012

உபயோகமான குறிப்புகள்


உபயோகமான குறிப்புகள்

பலவகை குளியல்கள்

பிரம்மசாரியாக இருப்பவன் காலையில் நீராடவேண்டும்

குடும்பஸ்தன் காலை, மதியம் இருவேளை நீராடவேண்டும்

துறவி மூன்று வேளையும் நீராடவேண்டும்


குளிக்க போகும் போது ஒரு சில கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள்:

எந்த நீரில் குளித்தாலும் அந்த நீர் பகவான் பாதத்தில் இருந்து வரும் கங்கையாக கருத வேண்டும்.

குளிக்க நீர் கிடைக்காத போது இறைவன் நாமத்தினை மனதிற்க்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.  இது மானசீகக் குளியலாகும்.

குருவினை தரிசித்து அவரது பாத நீரினை தலையில் தெளித்துக் கொள்வது தீர்த்தக் குளியலாகும்.

விரதம், சிரார்த்தம், விருக்தி சடங்கு, துக்க சடங்கு உள்ளபோது வெந்நீரில் குளிக்கக்கூடாது.

மங்களகரமான திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.

ஓடும் நதி நீரில் நீரோட்டத்தின் எதிரிலும், குளம் முதலியவைகளில் கிழக்கு நோக்கி நின்று நீராடவேண்டும்.

வருக 2013!



ஓம் சாயி நமோ நம!

ஸ்ரீ சாயி நமோ நம!

ஓம் சாயி நமோ நம!

ஸ்ரீ ஜய சாயி நமோ நம!

ஓம் சாயி நமோ நம!

ஸ்ரீ ஜய ஜய சாயி நமோ நம!


அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

சாயியின் பாதம் தொழுவோம்
சகல நன்மைகளையும் பெறுவோம்

Sunday, December 30, 2012

உபயோகமான குறிப்புகள்


உபயோகமான குறிப்புகள்

எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் நாட்களின் பலன்கள்

ஞாயிறு:    வியாதி

திங்கள்:     சக்தி இழப்பு

செவ்வாய்:  விரைவில் மரணம்

புதன்:       லட்சுமி கடாட்சம்

வியாழன்
மற்றும்      சந்தான நாசம், ஆபத்து
வெள்ளி: 

சனி:        சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
            சரீரத்திற்க்கு ஆரோக்கியம் கிடைக்கும்

எண்ணெய்க்குளியல் செய்த அன்று விபூதி தரிக்கக்கூடாது
மேற்காணும் பலன் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
குறிப்பினை படித்த பின்பாவது பாதகமான நாட்களையும்,
தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் தவிர்க்கலாமே!

Saturday, December 29, 2012

ஆன்மீக குறிப்புகள்


ஆன்மீக குறிப்புகள்

மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது



பெண்கள் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தபிறகு, தீபத்திடம்,
தீபஜோதியே,
 நீ சுபம் மற்றும் மங்களத்தினை தருகிறாய். 
ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தருகிறாய்.
எதிரிகளின் புத்திகளை நாசம் செய்கிறாய்.
இத்தகைய நன்மை செய்யும் உன்னை வணங்குகிறேன்
என்று கூறி வணங்குகிறேன். அதற்கான சுலோகம்.

“சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன ஸ்ம்பதா
 சத்ரு புத்திர் விநாசாய தீப ஜோதி நமோஸ்திதே

Friday, December 28, 2012

அன்னதானம் - 3


அன்னதானம் - 3

அன்னதானம் பகுதி இரண்டின் தொடர்ச்சி......

(பகுதி ஒன்றினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
(பகுதி இரண்டினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

அன்னதானத்தின் மகிமை பற்றி ஒரு கதை உண்டு. அதனை இப்போது காண்போம்.

Thursday, December 27, 2012

அன்னதானம் - 2


அன்னதானம் - 2

அன்னதானம் பகுதி ஒன்றின் தொடர்ச்சி......

(பகுதி ஒன்றினை படிக்காதவர்கள்
இங்கே கிளிக் செய்யவும்)


அன்னதானம் பாபாவிற்க்குப் பிடித்தமானது என்பதால் இதை சாயி பக்தர்களாகிய நாம் விரிவாகச் செய்கிறோம். நம்மால் முடியாதபோது, நம்மால் இயன்றதை கோயிலகளுக்குக் கொடையாக அளித்துவிட்டு வருகிறோம்.  ஏழைகளுக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என பழமொழி உண்டு. நம் கர்மாவை கடவுள் அதிதி வடிவிலோ, அன்னத்தை உண்பவர் வடிவிலோ எடுத்துக்கொண்டு நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கவே இந்த அன்னதானம் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

Tuesday, December 18, 2012

அன்னதானம்


அன்னதானம்


அன்னதானம் உலகிலுள்ள மற்ற தானங்களை விட மிகச் சிறந்தது. சகல சவுபாக்கியங்களையும் தரவல்லது.  பாவங்களைப் போக்கவல்லது. இதைப்பற்றி சத்சரித்திரம் 38-ம் அத்தியாயத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!



நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!

காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித்தது!.....சாயி எப்படி சொன்னாரோ, அப்படியே நடந்தது. சாயியின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ளமுடியாதவை, துல்லியமானவை, அவருடைய திருவாய் மொழியின் படி குழந்தைகள் பிறந்தன.
                                        (சத்சரிதம்  அத்: 25:-102-103)


     வயதாகிவிட்டது...கருப்பையில் சிக்கல்.......கணவனிடம் பிரச்சனை, ஜாதகக் கோளாறு...இப்படி நிறைய சிக்கல்கள் இருக்கும்போது எப்படி எனக்கு குழந்தை பிறக்கமுடியும்?
      இப்படியொரு கேள்வி பாதிக்கப்படவர்கள் மனதில் இருக்கத்தான் செய்யும்.  ‘மனிதரால் கூடாதது, தேவனால் கூடும்என்கிறது பைபிள். கடவுளின் வாக்குப் பொய்ப்பது கிடையாது.  “காலப்போக்கில் பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. அவருடைய ஆசிவாதம் பலனளித்தது.
      சாயி எப்படி சொன்னாரோ அப்படியே நடந்தது.  ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ள முடியாதவை. துல்லியமானவை, அவரது திருவாய்மொழியின்படி குழந்தைகள் பிறந்தன என சத்சரிதம் (அத்: 25:-102-103) கூறுகிற்து.
      தாமு அண்ணாவை சத்சரித்திரம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது முழுப்பெயர் தாமோதர் ஸாவல் ராசனே.  அகமது நகரைச் சேர்ந்த இவரை தாமு அண்ணா என்பார்கள்.
      பாபாவின் மீது ஆழ்ந்த பக்தியுள்ளவர்.  சீரடியில் நடக்கும் ராம நவமி ஊர்வலத்தில் இரு கொடிகள் எடுத்துச் செல்லப்படும்.  அதில் ஒன்றை ஆண்டு தோறும் சாயிக்கு அர்ப்பணம் செய்தவர் தாமு அண்ணா.  இதற்க்குக் காரணம், பிறக்கவே பிறக்காது என்று எல்லோரும் கைவிட்ட பின் குழந்தை பிறந்ததுதான். இச்சேவையினை நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தாமு அண்ணா செய்து வந்தார். இன்னொரு கொடி நிமோண்கருடையது.
      குழந்தைப் பிறப்பதற்க்கு முன்பு தாமு அண்ணா நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
      அவருக்கு இரண்டு மனைவிகள்.  ஒரே குறை பிள்ளை எதும் இல்லாதது. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டனர். அப்படியும் குழந்தைப் பேறு எட்டாக்கனியாகவே இருந்தது.
      சிறந்த ஜோதிடர்களை நாடி அவர்கள் சொன்னபடியெல்லாம் நவக்கிரக
பரிகாரம் முதல் அனைத்தும் செய்ததுதான் மிச்சம், பலன் ஏதுமில்லை. ஆனால் இன்று இவரும் பெரிய ஜோதிட நிபுணர் ஆகிவிட்டார். வாரிசுக்காக ஞானிகள், சாதுக்களை தேடித் தேடி வணங்கினார். எதனாலும் பலனில்லாத நிலையில் குழந்தைப் பற்றிய எண்ணத்தையே விட்டுவிட்டார்.
      இந்நிலையில் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, 1895ம் ஆண்டு வாக்கில் சீரடிக்கு வந்தார். இவர் வரும் வழியில் கோபர்காமில் இருக்கும் போதே, சீரடியில் இருந்த சாயி, அவர் வருவதை அறிந்தார். குழந்தை வரம் வேண்டி வரும் தாமுவுக்கு நான்கு மாம்பழங்களை எடுத்து வைக்க நானாவிடம் சாயி கூறினார்.
இந்த பழங்கள் நானாவின் பெயருக்கு ராலே என்ற சப் கலெக்டரால் அனுப்பப்பட்டவை.  இவற்றினை பாபாவின் பாதங்களில் பக்தியுடன் சமர்ப்பிக்க நானாவிடம் சப்கலெக்டர் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாபாவின் முன்னால் மாம்பழங்கள் பிரிக்கப்பட்ட போது அதில் சுமார் முன்னூறு பழங்கள் இருந்தன.  பாபா அனைத்தையும் நானாவிடம் ஒப்படைத்துவிட்டார்.  ஆனால் நானாவோ நான்கு பழங்களை எடுத்து கொலம்பா எனப்படும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுவிட்டு மீதியினை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவர் அதை பாத்திரத்தில் போடுல்போதே, ‘இவை தாமு அண்ணாவிற்க்குஎன்றார் பாபா.
இரண்டு மணி நேரம் முடிந்து பாபாவிற்க்கு பூஜை செய்ய நிறைய பூக்களுடன் வந்த தாமுவிற்க்கு மசூதியில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.  அவரிடம் பழத்தைக் கொடுத்த பாபா, “இவற்றை சாப்பிட்டு சாவாயாக! என்று கூறினார். இதைக் கேட்ட தாமு திகைத்துப்போனார்.  அருகிலிருந்த மகல்சாபதி, ‘பாபாவின் காலடியில் இறப்பதும் அனுக்கிரகமே!என்றார்.  இதனால் ஊக்கம் பெற்ற தாமு அண்ணா பழங்களை சாப்பிட முயன்றார்.
அவரைத் தடுத்த பாபா, “இவற்றை நீயே சாப்பிட்டு விடாதே. உன் இளைய மனைவிக்குக் கொடு. எட்டு குழந்தைகள் பிறப்பர்.  4 ஆண் 4 பெண்.  முதலில் இரண்டு ஆண்.  மூத்தவனுக்கு தவுலத் ஷா, இரண்டாமவனுக்கு தானாஷா என்று பெயரிடு!என்றார்.
அவர் ஏற்கனவே குழந்தை பிறக்காது என்று விட்ட எண்ணத்தை விட்டு குருவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை வைத்தார்.  சாயியின் உறுதிமொழியினையும், ஆசிர்வாதத்தினையும் கேட்டதும் அவருடைய மனதில் புது ஆசையும் நம்பிக்கையும் துளிர்விட்டன. வீட்டுக்கு வந்த தாகு, அவரது டைரியில் பாபா சொன்ன பெயர்களை குறித்து வைத்துக்கொண்டார்.  நாளடைவில் அதை மறந்துவிட்டார்.
       ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. ஆம், பாபா கூறியவாறே ஆண் குழந்தையும் பிறந்தது.  முதல் குழந்தையினை தூக்கிக்கொண்டு சீரடிக்கு வந்த தாமு அண்ணா, ‘குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? எனக்கேட்டார்.  
        ‘நான் முன் சொன்ன பெயரினை மறந்து விட்டாயா?  டைரியின் மூன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்திருக்குறாய்.  போய்ப் பார்!என்றார் பாபா. அதன்படியே பெயரிடப்பட்டது.
பாபா சொன்னார்: 
என்னுடைய வார்த்தைகளை பிரமாணமாக நம்புங்கள்.      
 நான்    இந்த பூதவுடலை நீத்த பிறகும்,  சமாதியிலிருந்து என்னுடைய எலும்புகளும் உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும்.
      நான் மாத்திரம் அல்லன், எனது சமாதியும் உங்களிடம்
பேசும்.
      எவர் எனது சமாதியை சரணடைகிறாரோ அவருடன் அது ஊஞ்சலாடும்.
      நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள்.  நீஙக்ள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதை நீஙக்ள் கேட்பீர்கள்.
     விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும், சுயனலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்

     பாபா தனது திருவாய் மொழியாகக்கூறிய இந்த வார்த்தைகளை முழுமையாக நம்புங்கள்.  அப்போது உங்களுக்கு சர்வ மங்களங்களும் விளையும்.
      எனக்குக் குழந்தைப்பேறுதான் இருக்கிறதே... எனக்கு இந்த தகவலால் என்ன பயன் என்று நினைக்காதீர்கள்.
      விசுவாசம் நிறைந்த இதயத்துடன் நீங்கள் கேட்பது நீங்கள் செய்கிற தொழிலில் லாபமாக இருக்கலாம்,  வாழ்வின் முன்னேற்றமாக இருக்கலாம்.  இப்போதுள்ள நிலையைவிட இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தரும் நிலையாகவும் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்து இதுவரை கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
      சமர்த்த (எல்லாவற்றையும் செய்யவல்ல) சாயியை சரணடைந்து காத்திருங்கள்.  பலன் நிச்சயம்!

-          சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்  வெளியான கட்டுரை.

Monday, December 17, 2012

ஷீரடி ஸாயிநாதர் கவசம்


                                                    ஷீரடி ஸாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை 
நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின்
எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் 
நேராவண்ணம் ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம்
 புரிவார் என்பது திண்ணம்.

ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு

1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க

2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க

3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க

4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீஸாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க

5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க

6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க

7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க

8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீஸாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீஸாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீஸாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீஸாயி உடனே காக்க

9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீஸாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீஸாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீஸாயி சித்தன் காக்க.

ஷீர்டி ஸாயிபாபாவின் மூல மந்திரம்

ஓம் ஸாயி ஸாயி ஜெய ஜெய ஸாயி


நன்றி:
http://tirunelveli-venkat.blogspot.in

Sunday, December 16, 2012

ஸாயிபாபா பாமாலை

ஸாயிபாபா பாமாலை





ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரே
உலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயே
சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்

தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?
பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்

எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்
கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்

மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்

ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்
மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,
பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயி

திருக்கரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்
அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் - உன்
திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்

அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே - உன்
அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதே
நீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்
ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்

பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு

உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
அளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமே
விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே

சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வே
மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே

உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
தாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயே

மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
உண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயே

ஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதே
உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே - உன்
திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனே

எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
இக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனே
இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே

உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே

உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே

என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
நிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயே
அணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்
எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்

என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையே
மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
அகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்
அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்

குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,
உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்

சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே

சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
சாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமே
சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,

சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,
துன்பம் களைவார், தருவார் ஆனந்தமே
சாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !
இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்

சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்

சாயிநாதருக்கே அர்ப்பணம்



நன்றி:
http://tirunelveli-venkat.blogspot.in

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...