Showing posts with label பாபாவின் அற்புதங்கள். Show all posts
Showing posts with label பாபாவின் அற்புதங்கள். Show all posts

Sunday, July 13, 2014

வந்தது நானே!

12



மகல்சாபதி (பாபாவின் நெருங்கிய பக்தர்) தமது பல்லக்குடன் ஜேஜுரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே பிளேக் நோய் பரவியிருந்தது. மகல்சாபதியும் அவருடன் வந்த சக பயணிகளும் பல்லக்கை கீழே வைத்தனர்; மிக்க மனவுளைச்சலுடன் மகல்சாபதி பல்லக்கின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் புறம் யாரோ இருப்பது போல் அவருக்கு தோன்றியது. பின்பக்கமாக அவர் திரும்பிய போது, அங்கே பாபாவைக் கண்டார்; ஆனால் அவர் உடனே மறைந்து விட்டார். சகாக்களிடம் பாபா அவர்களுடன் இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் எல்லோருக்கும் துணிவு வந்தது; மேலும் நான்கு தினங்கள் அங்கேயே தங்கினார்கள். ஒருவரையும் பிளேக் நோய் பற்றவில்லை. எல்லோரும் நலமாக திரும்பிச் சென்றனர்.அவர்கள் திரும்பி வந்தபோது,



பாபா: பகத், உமக்கு நல்லதோர் யாத்திரை, நீர் பல்லக்கின் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தீர். அந்த சமயம், நான் அங்கே வந்திருந்தேன்.



இவ்விதமாக தமது அதிசயத்தக்க சக்திகளால் தாம் வாஸ்தவமாகவே அன்று ஜேஜூரியில் இருந்ததை உறுதிப்படுத்தி மகல்சாபதி, பாபாவைக் கண்டது மனப்பிராந்தியோ, மாயையோ அல்ல என்பதையும் தெளிவாக்கினார்.

Friday, July 11, 2014

தாகத்துக்கு நீர் அளித்தீர் பாபா!

sai59

நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஓர் கோடை நாளில் ஹரிச்சந்திரா குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார்; அவரை தாகம் பீடித்தது.அவ்விடத்தில்  சுற்றுமுற்றும் எங்கும் நீர் இல்லை.நானா, "பாபா இங்கிருந்தால், எனக்கு நீர் அளித்திருப்பார்" என கூறிக் கொண்டார்.அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார்.

பாபா : (மசூதியில் அமர்ந்தவாறு) நானாவுக்கு தாகம்.கோடை வெய்யில் கடுமையாக இருக்கிறது.அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா?

அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா பேசுவது புரியாமல் புதிராக இருந்தது.ஆனால் குன்றின் மேலிருந்த நானா ஒரு வேடுவன் மேலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.

நானா : வேடுவ,எனக்கு தாகமாக உள்ளது.குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?

வேடுவன்: நீர் உட்கார்ந்திருக்கும் பாறையின் கீழேயே நீர் உள்ளது. 


இவ்வாறு கூறிவிட்டு வேடுவன் சென்றுவிட்டான்.  பாறையை நகர்த்தி விட்டு பார்த்ததில் ஒரு கைநிறைய குடிநீர் காணப்பட்டது.நானா அதைப் பருகினார். பல தினங்களுக்குப் பின் நானா சாந்தோர்க்கர் சீரடிக்குச் சென்றனர்.


பாபா:நானா,நீர் தாகத்துடன் இருந்தீர்.நான் உமக்கு நீர் அளித்தேன்.நீர் குடித்தீரல்லவா ?

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...