Monday, September 26, 2011

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம்



                      சாயி பாபா கோயில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத் தருவது போன்றவற்றைச் செய்கிறார் பாபா. சில சமயம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வை தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள்.

                    எல்லோருக்கும் இது வாய்ப்பில்லை. முதலில் அற்புதத்தால் தன்னிடம் ஈர்க்கும் பாபா, அடுத்து இவன் தன்னை மிகவும் நேசிக்கிறானா என்பதை சோதித்துப் பார்க்க கஷ்டத்தை தந்து பார்க்கிறார். எந்தளவுக்கு உனது நம்பிக்கை தாக்குப் பிடிக்கும் என்பதை வரையறுக்கும் விதத்தில் அந்த சோதனை இருக்கும். அதில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் ஓடிப் போய் விடுவார்கள். சிலர் என்னவானாலும் நீயே கதி என நிலைத்து நிற்பார்கள். நிலைத்து நிற்பவரின் துயரங்களை தானே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு  பரிசாக விடுதலையை அளித்து வாழ்த்துவார் பாபா. இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டைத் தேடி வேறு எங்கும் போகவேண்டாம். எனது வாழ்க்கையே சான்றாகும்.
                     ஒரு நாளிதழில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். சம்பளம் மிகக்குறைவு. கட்சி சார்ந்த பத்திரிகையாக இருந்ததால் எதிர் கட்சி ஆட்சிக்கு வந்த பத்தாண்டு வரை ஊதிய உயர்வு கிடையாது. இருபதாண்டு களுக்கு மேல் பணிபுரிந்த நான் பெற்ற கடைசி சம்பளம் ஐயாயிரத்து ஐநூறு. எனக்குக் கிடைத்த பி.எப். தொகை வெறும் ஒரு லட்ச ரூபாய்.
                    இந்த குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுத்து எப்படி என்னால் குடும்பத்தை நடத்த முடிந்தது, பிள்ளைகளை படிக்க வைக்க முடிந்தது, மற்றவர்களுக்கு உதவிட முடிந்தது, என்றெல்லாம் கேள்வி வருமல்லவா?
                    எதைச் செய்தாலும் பொறுப்பாகச் செய்யும் பழ‌க்கம் என்னிடம் சிறு வயது முதற்கொண்டே இருந்ததால், என்னிடம் ஒப்படைக்கப்படும் வேலைகளை சரியாகச் செய்து பெயரெடுப்பேன்.  பிறரிடம் பழ‌கும்போது உண்மையாகப் பழகுவேன்.  பொய்யாகப் பழகுவோரை தள்ளிவிட மாட்டேன். அவர்களையும் என் பக்கத்தில வைத்துக்கொள்வேன். இதனால் பலர் எனக்கு நண்பர்களானார்கள். எனக்கு யாராவது பணம் தரமுன்வரும் போது நட்பை பலப்படுத்திக் கொள்ளச் சொல்லி பணத்தை மறுத்துவிடுவேன். இதனால் நண்பர்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தது.
                  எழுத்துத்துறையை வளர்ப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தால் பல நண்பர்களுக்காக அவர்கள் பெயரில் கதை, கட்டுரை, கவிதை எழுதி பலரை எழுத்தாளராக மாற்றியிருக்கிறேன்.
                     துவக்கத்திலிருந்தே மற்றவர்களுக்காக அவர்கள் பெயரில் புத்தகம் எழுதிக்கொடுப்பது, அச்சிடுவது,  மார்கடிங் செய்வது என்றிருந்தேன். இப்படி நிறைய நண்பர்களுக்கு புத்தகம், கட்டுரைகள், கதைகள் எழுதித் தந்து அதில் வரும் பணத்தைக் கொண்டு நண்பர் முருகானந்தம் பெயரில் ஒரு பதிப்பகத்தை உருவாக்கி அதன் மூலம் 2000 ம் ஆண்டு பிறந்த அந்த நொடியில் ஒரு புத்தகம் வெளியிட்டு சாதனை செய்ததன் மூலம் வந்த பணத்தையும் இந்த பதிப்பகம் மூலம் வந்த பணத்தையும் குடும்பத்திற்குப் பயன் படுத்தினேன்.
இது தவிர அவ்வப்போது கடன் வாங்குவேன். இப்படித்தான் காலம் ஓடியது. எனக்குப் பொழுது போக்கு என்பது என் இரு பிள்ளைகளுடன் இரவு பத்து மணிக்கு மேல் அவர்களை எழுப்பி விளையாடு மற்றும் எப்போதாவது கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான். மற்றபடி எதையாவது எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பேன். ஓய்வு நாளென்று ஒரு நாளையும் நான் உருவாக்கிக் கொண்டதில்லை. இதனால் எனக்கு வருமானத்திற்கு இறைவன் குறை வைத்ததில்லை.
                           நான் பணிபுரிந்த பத்திரிகை இன்னொருவரிடம் கைமாறிய போது பழைய ஊழியர்கள்  அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர். புதிய ஆட்களுக்கு நிறைய சம்பளம், பழைய ஆட்களுக்கு அதே சம்பளம் என்ற நிலையிருந்தது. இதனால் நான் பணிபுரிந்த பத்திரிகையிலிருந்து விலக முடிவு செய்திருந்தேன்.
                          நண்பர் ஒருவர் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் வெளியிட நான்கு புத்தகங்க‌களை எழுதித் தருமாறு கேட்டார். ஒரே மாதத்தில் நான்கு புத்தகங்கள்கள் எழுதுவது சாத்தியமான விஷ‌யம் கிடையாது. பகலில் வேலைக்குப் போய்விட்டு,  இரவில் புத்தகம் எழுதி தட்டச்சு செய்வது முடியாத செயல் என்பதால் அதை மறுத்தேன். புத்தகத்தை முடிக்காவிட்டால் தனது மானம் போய்விடும் என்று அந்த நண்பர் சொன்னதால் வேறு வழியின்றி வேலையை விட்டுவிடத் தீர்மானித்தேன். (லீவு போட முடியாது). வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியெ வந்து நான்கு புத்தகங்களையும் எழுதித் தந்தேன்.
                             நண்பரிடம் ஒப்பந்தம் செய்து புத்தகங்க‌களை எழுதுவதில் ஈடுபட்டேன். பதிப்பகத்தை விரிவுபடுத்தியதோடு குளொபல் ஹெல்த் என்ற பத்திரி கையை ஆரம்பித்து நடத்தினேன். மார்கடிங் விஷ‌யத்தில் தலையிடாமல் பிறரை நம்பினேன். எனது புத்தகங்கள்கள் நல்ல முறையில் விற்பனையாயின. இரண்டாண்டுகளில் இடம் வாங்கி வீடு கட்டினேன். இன்னொரு இடம் வாங்கினேன்.  கார் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தேன். இந்த நிலையில் குளொபல் ஹெல்த் பத்திரிகை நட்டம் தர ஆரம்பித்தது. விற்பனைக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் விற்பனையாளர்களால் ஏமாற்றப்பட்டு லட்சக் கணக்கில் பணம் முடங்கிப் போனது. இன்றுவரை வரவில்லை. நானும் கேட்காமல் விட்டுவிட்டேன்.
                               நட்டம் தொடரவே கடனை அடைக்க வாங்கிய இடங்கள் போயின. அலுவலகம் தி.நகரிலிருந்து தாம்பரத்திற்கும்ஃ பிறகு பெருங்களத்தூருக்கும் வந்தது. ஒரு நண்பர் அசோக் நகரில் அலுவலகத்தை கொண்டு வாருங்கள் என்றார். கடைசியாக எண்பதாயிரம் ரூபாயை கடன் வாங்கி அலுவலகத்தை அங்கு எடுத்துச் சென்றேன். இந்த நிலையில்தான் அருண் சின்னையா பாபாவை அறிமுகம் செய்தார். அவரை நம்ப ஆரம்பித்தேன். (விவரம் தடையேதும் இல்லை புத்தகத்தில் உள்ளது).
பாபாவின் ஆலொசனைப்படி சாயி தரிசனம் புத்தகத்தை தொடங்கி குளொபல் ஹெல்த் பத்திரிகை யின் இலவசப் பிரதியாக வெளியிட்டேன். இதிலும் நட்டம் வரத் தொடங்கியது. சில சாயி அடியார்களின் உண்மையான முகங்களும் தெரியத் தொடங்கின.
                              2006 ல் பெய்த அடைமழையால் செம்பரம் பாக்கம் ஏரி உடைந்து அசோக்நகர் தண்ணீரால் சூழ‌ப் பட்டது. ஐந்து நாட்கள் கழித்து அலுவலகம் சென்றேன். மொத்தமும் அழிந்துபோய் இருந்தது. எனது கம்ப்யூட்டரில் நிறைய புத்தகங்களை எழுதி வைத்திருந்தேன். எல்லாம் போயிற்று. பழைய புத்தக நெகடிவ்கள் அழிந்தன. ஏசி,  கம்ப்யூட்டர்கள் எல்லாம் போனது. மிச்சமாக எதுவுமே இல்லை என்ற நிலை வந்து விட்டது. வீட்டை லீசுக்கு விட்டு சிறிது கடனை கொடுத்தேன். மற்றவற்றுக்கு வட்டி கட்டி வந்தேன்.
சாயியிடம் சரணடைந்து இனி என்ன நடந்தாலும் உன்னை விட்டு விலகமாட்டேன். உயிரே போனா லும் கண் முன்னே என் பிள்ளைகள் தொலைந்து போனாலும் உன்னை நம்புவதை கைவிடமாட்டேன்.  நான் சம்பாதித்தேன்,  இழந்தேன். இனி எனக்கென  எதுவும் வேண்டாம்.  உன் பாதம் மட்டும் போதும் என்று வேண்டுதல் செய்தேன்.
                              அந்தக் காலம்,  மிகக்கொடுமையான காலம். பசி, பட்டினி,  தொல்லைகள் என எல்லாவற்றையும் அனுபவித்தேன். உடனிருந்தவர்கள் பகைத்தார்கள்.  நண்பர்கள் துரோகம் செய்தார்கள்.  நம்பியவர்கள் ஏமாற்றினார்கள். ஆச்சரியமாக எல்லாவற்றையும் இரண்டு  ஆண்டுகள் தொடர்ந்து அனுபவித்து வந்தக் காலக்கட்டம்.
                             இதன் மூலம் நான் யாரையும் வெறுக்கவில்லை. மாறாக பாபா என்னை பக்குவப்படுத்துகிறார் என்பதை புரிந்துகொண்டேன். அவரது அடியார்கள் மூலம் எனக்கு ஆசிர்வாதம்  ஆலோசனைகளை அளித்து வந்தார்.
சாயி மாணிக்கம் திடீரென வருவார்.  இந்தப் பணம் பாபாவுக்கு.  இது உன் குடும்பத்திற்கு எனக் கொடுத்து விட்டுப் போவார். அருண் சின்னையா எந்த நிலையிலும் உடனிருந்தார். ஆச்சரியமாக மீண்டும் பத்திரிகை துளிர்த்தது. சாயி அடியார்களான அருண் சின்னையா, பாபா மாணிக்கம், வள்ளுவர், சாயி ராஜா போன்றவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள். நாகராஜ‌ பாபா தன் பங்குக்கு உதவி செய்தார். சாயி பக்தர்கள் தங்கள் வாழ்வை சாயி தரிசனம் பத்திரிகை மாற்றியதாகச் சொல்லி தாங்களே விற்பனை செய்து தரும் அளவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்படி பத்திரிகை வளர்ந்தது.
                                 எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குக் காரணம்,  சனி தோஷ‌ம் என்பதால் இப்படிப்பட்ட பிரச்சினையுள்ளவர்களின் நிவாரணத்திற்காக,  சனி தோஷ‌ நிவர்த்தி யாகத்தை ஆரம்பித்து நடத்தினேன். பல விமர்சனங்கள் வந்தன. ஆனால் ஒரே நாளில் என் பெயர் மாறிப்போனது.
யாகத்தின் போது என்னைத் தேடி பாபா விக்ரக வடிவில் என் வீட்டுக்கு வந்தார். நான் முயல் வளர்க்க கட்டியிருந்த இடத்தில்தான் பாபா வந்து அமர்ந்தார். இன்றைக்கு பிரார்த்தனை மையம் என்ன அளவோ அதே அளவில் மாடியில் உள்ள வீட்டில் அனலிலும்  குளிரிலும் எங்களோடு இருந்தார். எங்கள் வீட்டில் பாபாவை பார்க்க வருவோருக்கு உடனடியாக அற்புதங்களை நடத்திக் கொடுத்தார். பலரது பிரச்சினைகள் தீர்ந்தன. புகழ் பெற்ற அடியார்கள் பலர் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தார்கள்.
பாபா விக்ரக‌ம் வீட்டில் இருக்கக்கூடாது என்று சிலர் கூறியதை அடுத்து ஒன்னரை அடியிலிருந்த விக்ரக‌த்தை பிரதிஷ்டை செய்ய இடம் பார்த்த போது தான் தர்ம நாயக்கரிடம் மிகச்சிறிய இடம் இருப்பது தெரிந்தது. அவரிடம் கேட்டு அதில் பாபாவை பிரதிஷ்டை செய்ய நாலுக்கு ஆறு அளவில் சிறிய கடடிடம் கட்ட சீரடியிலிருந்து புனித மண் எடுத்து வந்து பூஜை செய்தேன்.
அந்த இடத்தில் பாபாவுக்கு ஆலயம் கட்டவும் பாபாவை பிரதிஷ்டை செய்யவும் எண்ணற்ற தடைகள் வந்தன. அவற்றை சரி செய்து பிரார்த்தனை மையமாக இதை உருவாக்க பாபா அருள் செய்தார்.
                               முதலில் இதை அலுவலகக் கட்டிடமாகக் கட்ட ஆரம்பித்தேன். அலுவலகக் கட்டிடம் என்பதால் நன்கொடை யாரிடமிருந்தும் பெறப்படவில்லை. நான் சம்பாதித்த அனைத்தையும் இதை உருவாக்கச் செலவு செய்தேன். கடன் பட்டேன்.  சில சமயம் தெரிந்த பக்தர்கள் தாராளமாக உதவி செய்தார்கள்.
                                இந்த நேரத்தில் மயிலாப்பூர் பாபா ஆலய நிர்வாகிகள் தந்த அன்பும் அரவணைப்பும்  ஆலொசனைகளும்  என்னை திடப்படுத்தி பாபாவுக்கு ஆலயம் உருவாக்குவதில் முனைப்போடு செயல்பட ஊக்குவித்தன.
பல நண்பர்கள் பாபா சிலையை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் பஜவனெரூ; என்ற சிறுவன் உடல் நலம் பெறவேண்டி அவரது பெற்றொர் திரு. சந்திர சேக‌ரன், சாந்தி அம்மையார் ஆகியோர் தாங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்.
                                   சாந்தி அம்மையாரின் தந்தையார் திரு. அவர்கள் தன்னிடம் பாபா தெரிவித்ததாகவஜம்ஃ தானே வாங்கித் தரப் போவதாகவும் தெரிவித்துவிட்டார். மிகுந்த சிரத்தையுடன் அதை அவர் வாங்கிவந்து மிகச் சாதாரணமாக இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டுப் போனார். அன்றிலிருந்து இன்றுவரை இங்கு வரும் பக்தர்களுக்கு பாபா செய்யும் அற்புதம் கொஞ்சம் நஞ்ச‌மல்ல.
                                பாபா மாஸ்டர் அருணாச்சலம் இந்த பாபாவுக்கு ஆத்ம சாயி என்று பெயரிட்டு வரதராச‌னின் ஆத்மாவோடு இணைந்து மக்களுக்கு சேவை சாதிக்கும் இந்த பகவானை இனி இப்படித்தான் அழைக்கவேண்டும் என்றுகூறினார். பாபா மாணிக்கம்  இந்த இடம் மிகப்பெரிய அளவில் வளரும் என்று ஆசி வழங்கினார். இந்த இடம் எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரார்த்தனை மையமாக உருவெடுக்கும் என பாபா அடிக்கடி கனவில் சொல்வார். அப்படியானால் இங்கு பிரார்த்தனை செய்தால் பலிக்குமல்லவா, என தைரியத்தோடு நடக்காத  நடக்க சாத்தியமில்லாத பிரச்சினைகளுக் காகவும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். பலவற்றை பாபா நிறைவெற்றினார்.
பக்தர்கள் பாபாவைத் தேடுவதை விட்டு என்னைத் தேட ஆரம்பித்தார்கள். நான் சொன்னால் சொன்னது உடனே நடந்து விடுகிறது என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உருவெடுத்த போது நான் கொஞ்ச‌ம் கொஞ்சமாக என்னை அவர்கள் மத்தியில் இருந்து மறைத்துக்கொண்டு பாபாவைப் பாருங்கள்  பாபா அற்புதம் செய்வார் என்று  கூறிவிடுவதை வழ‌க்கமாக வைத்திருந்தேன்.
பாபாவின் பாதங்களில் சேர்க்கப்படும் கோரிக்கை களை இரவிலும் பகலிலுமாக படித்து பிரார்த்தனை செய்வேன். என் விண்ணப்பங்களைக் கேட்ட பாபா அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார்.
                              ஆள் பலம்,  பண பலம்,  பக்க பலம் என எதுவுமில்லாது தனியொருவனாய் பாபாவின் துணையோடு பெருங்களத்தூர் பாபா பிரார்த்தனை மையம் வளர உள்ளத்தை உருக்கி அவரிடம் வேண்டுதல் வைத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதொடு இரவில் பிரார்த்தனை செய்த பிறகு மனதில் என்னென்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் சாயியின் குரல் என எழுதி சாயி தரிசனம் பத்திரிகையில் பிரசுரித்தேன்.
இதுதான் திருப்புமுனையாக அமைந்தது. பல சாயி பக்தர்களின் வாழ்க்கையை மாற்றியது. வரத ராச‌னை _ சாயி வரதராச‌ன் என உயர்த்தியது. என்னை தங்கள் பிள்ளை என்று ஒவ்வொரு சாயி பக்தரும் அடியார்களும் ஏற்றுக் கொண்டு நான் எழுதுவதைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். என்னைத் தேட ஆரம்பித்தார்கள்.
                                எனது இயல்பே மாறிப்போனது. உள்ளம் விசால மானது. சுயம் தனிப்பட்ட நிலையிலிருந்து தடம் புரண்டு உலகமே எனதென விரிவடைந்தது. உடம்பு என்பது ஒரு கருவி.  ஆன்மாதான் அனைவரின் உண்மையான சொரூபம் என்பதையும் அந்த ஆன்மா பகவானுடையது என்பதையும் அடுத்தவர் ஆன்மா நமது ஆன்மாவின் வுறு என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்ததால் யாராக இருந்தாலும் அவர்களுக்காக உண்மையுடன் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். இதனால் சாதி சமய  ஏற்றத் தாழ்வற்ற ஒரு பொதுமையான இயக்கம் உருவானது.
                                      எனது சாயி பக்தர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் எனது பிரச்சினைகளாகத் தெரிந்தன. வேண்டினேன்.   பிரச்சினைகளுக்கு இங்கே தீர்வு கிடைத்தது. என்னை தேடி பாபா ஆலயம் வருவோருக்கும் பாபாவிடம் தீர்வு கிடைத்தது. தினமும் கிடைத்து வருகிறது.
                                    ஒரு காலத்தில் வரதராச‌ன் என்றால் யாரென்றே தெரியாமலிருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் சாயி பக்தர்களுக்கு பாபா அடையாளம் காட்ழனார். என் மூலம் அற்புதங்களைச் செய்து எனக்கு பெருமை செய்தார். இந்த இடத்தைப் பரிகாரத் திருத்தலமாக மாற்றியமைத்து நம்பிக்கையோடு வருகிறவர் களுக்குத் தீர்வை தந்தார். முதலில் பெருங்க‌ளத்தூர் மக்களுக்கு அதிக அற்புதங்களைச் செய்து அவர்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு வெளியிலிருந்து வருவோருக்கு அற்புதங்களைச் செய்தார்.
                                             மந்திரமில்லை. மாயமில்லை. சரணாகதி ? திட நம்பிக்கை? பொறுமை? விடா முயற்சி. உள்ளம் உடைந்து உருகி பேசுவது.  பக்தர்களிடம் எப்போதும் ஆறுதலாகப் பேசுவது. இதை வைத்தே பாபா அற்புதம் செய்ய ஆரம்பித்தார். தீர்வு இங்கே நிச்சயமாகக் கிடைக்கிறது. சந்தேகமிருந்தால் வந்து சோதித்துக் கொள்ளுங்கள் என தைரியமாக கூற ஆரம்பித்தேன்.
                                          எனது இந்த வெற்றிக்குப் பின்னால் சாயி தரிசனம் பத்திரிகை மூலமாக பாபா இருந்தார். எனக்குத் தெரிந்த அனுபவங்களை வாசகர்களுக்கு நான் சொல்லிக் கொடுத்தேன். அதைப் பின்பற்றியவர்கள் வெற்றி பெற்றார்கள். ஒரு சிலர் உங்களைப் போய் மகான் என்று சொல்கிறார்கள்.  எங்க‌களுக்கு சிரிப்பாயிருக்கிறது என கேலி செய்தார்கள். நான் மகானோ இல்லையோ மனிதனாக இருந்து பிறருக்காக சேவை செய்ய சித்தமாயிருப்பதால் பாபா என்னை ஆசீர்வதிக்கிறார்.
                                   மற்றவர்கள் செய்யும் பிரார்த்தனைக்கும் எனது பிரார்த்தனைக்கும் வித்தியாசம் இருப்பது எனக்கே நன்றாகத் தெரியும். நான் தனித்து விடப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு வயதில் சாமுண்டீஸ்வரி மலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என் தாத்தாவைப் போல‌ எபழுந்திருக்கும போதும்  படுக்கும் போதும் ராம நாம ஜ‌பம் செய்து ஒவ்வொன்றையும் பெற்ற அனுபவம் கை கொடுத்தது.
தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக பிரார்த்தனை செய்யும் பழ‌க்கம் இருப்பதால் மணிக்கணக்கில் பாபாவின் பாதத்தில் உட்கார்ந்திருப்பேன். இதனால் பாபா அற்புதம் செய்து மிகச் சிறிய இடமான பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தையும் மிகச் சாதாரண பாமரனான அடியேனையும் தூக்கி எடுத்து விசாலத்தில் வைத்து அருள் பாவிக்கிறார்.
 இந்த இடத்தை மிகப் பெரிய பிரார்த்தனைத் தலமாக மாற்றுவேன் என அவர் பலமுறை எனக்கு கூறியிருக்கிறார். இந்த நம்பிக்கை எனக்குள் வேர் விட்டு இருப்பதால் நான் தைரியமாக அனைவரின் பிரச்சினைகள் தீரவும் பிரார்த்திக்கிறேன்.
                                   ஒரு காலத்தில் இது மிகப் பெரிய அளவில் வளரும்.  அன்றைக்கு நீங்களும் இதில் முக்கியமானவர்களாக இருப்பீர்கள். அற்புதங்களை அனுபவித்தவர்களாகவும் இருப்பீர்கள். பாபா என்னொடும்,  இந்த பிரார்த்தனை மையத்தோடும் இருப்பதைப் போல உங்களோடு இருந்து உங்களைக் காத்து ஆசீர்வதிக்கட்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...