Friday, August 1, 2014

பாவ மன்னிப்பு எப்படி கிடைக்கும். ?

pulaal

என்னுடைய நண்பர் நிறைய அன்னதானம் செய்வார். நிறைய கடவுள் பக்தி உள்ளவர், அதே நேரத்தில் கோழி , ஆடு போன்ற வாயில்லா உயிர்களை கொன்று அதன் இறைச்சியைக் கொண்டு விருந்து படைத்து தானும் உண்பார். அவரை ஊர் மக்கள் அனைவரும் அன்னதான பிரபு என்று அன்புடன் மதிக்கத் தக்கவராக இருந்தார் .
வாரம் தவறாமல் சர்ச்சு, மசூதி, கோவில் போன்ற இடங்களுக்கு சென்று இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு வழிபாடு செய்து வருவார்.
ஒருநாள் தொழில் சம்பத்தமாக அவருக்கும் அவர் நண்பருக்கும் சண்டை வந்து அவர் தன்னுடைய நண்பரைக் கொலை செய்து விட்டார் . அவரை காவல் துறை கைது செய்து நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள் .
அங்கே கொலைக் குற்றத்திற்கான வாதம் நடந்து கொண்டு இருந்தது. அவருடைய வக்கீல் சொன்னார் . ”ஐயா அவர் நிறைய அன்னதானம் செய்பவர் மக்களிடம் நிறைய மதிப்புள்ளவர். பாவ மன்னிப்புக்காக தினமும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டு உள்ளவர் ஆதலால் இந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து அவரை விடுதலை செய்து விடுங்கள்.” என்றார்
அதற்கு நீதிபதி , “நீங்கள் சொல்லியபடி அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை . அவர் செய்த கொலைக் குற்றத்திற்கு உண்டான தண்டனை, அவருக்கு தூக்கு தண்டனைதான்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நாம் தினமும் வாயில்லாத உயிர்களைக் கொன்று அதன் புலாலை உண்டு உடம்பை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுத்து விடுவாரா ?
ஊரில் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இறைவன் படைத்த உயிர்களை கொன்று தின்றுவிட்டு இறைவனிடம் சென்று பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுக்க மாட்டார் .
கொல்லான் புலாலை மறுத்தானை

எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்.

இது தெய்வத்திருமறை சிந்திக்கவும் .

 

நன்றி: முகநூல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...