Friday, July 11, 2014

தாகத்துக்கு நீர் அளித்தீர் பாபா!

sai59

நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஓர் கோடை நாளில் ஹரிச்சந்திரா குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார்; அவரை தாகம் பீடித்தது.அவ்விடத்தில்  சுற்றுமுற்றும் எங்கும் நீர் இல்லை.நானா, "பாபா இங்கிருந்தால், எனக்கு நீர் அளித்திருப்பார்" என கூறிக் கொண்டார்.அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார்.

பாபா : (மசூதியில் அமர்ந்தவாறு) நானாவுக்கு தாகம்.கோடை வெய்யில் கடுமையாக இருக்கிறது.அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா?

அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா பேசுவது புரியாமல் புதிராக இருந்தது.ஆனால் குன்றின் மேலிருந்த நானா ஒரு வேடுவன் மேலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.

நானா : வேடுவ,எனக்கு தாகமாக உள்ளது.குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?

வேடுவன்: நீர் உட்கார்ந்திருக்கும் பாறையின் கீழேயே நீர் உள்ளது. 


இவ்வாறு கூறிவிட்டு வேடுவன் சென்றுவிட்டான்.  பாறையை நகர்த்தி விட்டு பார்த்ததில் ஒரு கைநிறைய குடிநீர் காணப்பட்டது.நானா அதைப் பருகினார். பல தினங்களுக்குப் பின் நானா சாந்தோர்க்கர் சீரடிக்குச் சென்றனர்.


பாபா:நானா,நீர் தாகத்துடன் இருந்தீர்.நான் உமக்கு நீர் அளித்தேன்.நீர் குடித்தீரல்லவா ?

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...