Sunday, April 27, 2014

சாயி மந்திரம்

சாயி பக்தர்களாகிய நம்மைப் பொறுத்தவரை  தடை என்பதே நமக்குக் கிடையாது.  நாம் யாரை வணங்குகிறோம், அவருடைய சக்தி என்ன?  யார் நமக்குப் பின்னால் இருந்து உதவுவது என்பதையெல்லாம் நாம் தெளிவாக அறிந்திருக்கும் போது நாம்  எதற்காக வீணாக  பயப்பட வேண்டும்?

                                                                                                      மேலும் தொடர

செயலாற்றுபவன் துடிப்பு உள்ளவனாக இருக்கவேண்டும்!


நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை) உனக்கு வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக் கொண்டு நிற்கிறேன்.

                                                                                            மேலும் தொடர

Monday, April 21, 2014

ஓர் அறிவிப்பு

அன்பார்ந்த சாயி அன்பர்களே,

உங்களுக்கு ஒரு அறிவிப்பு

உங்கள் சாயி தரிசனம் (http://srisaidharisanam.blogspot.in/) கடந்த 19-04-2014 முதல் http://srisaidharisanam.com/  என்ற பெயரில் இயங்கத் துவங்கியுள்ளது. என்றும் போல் தங்கள் ஆதரவினை வேண்டுகிறேன்.

தொடர்ந்து சாயியின் அருளுரைகள், அன்பர்களின் அனுபவங்கள் வெளிவரும்.

அன்புடன்

சாயி வரதராஜன்

Friday, April 4, 2014

வணங்குகிறேன் பாபா!







 மனோஹரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத 

உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத 

லீலைகளைப் புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை 

வைத்து வணங்குகிறேன். 



தெய்வ அநுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் ஸாதுக்களையும் 

ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு 

மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் 

தெரியாமற்போய்விடுவார். 





ஜெய் சாய்ராம்!

கோவை காரமடையில் சீரடி சாயி தியானமையம்



ஜெய் சாய்ராம்!
    கோயம்புத்தூர், காரமடை, சிக்கராம்பாளையம், ராம்நகரில் 60க்கு 40 காலி இடத்தில்,  சீரடி சாயி பக்தரான இந்த இடத்தின் உரிமையாளர்  சீரடி சாயிபாபா தியானமையம் ஒன்றினை அமைக்க ஆர்வமுடன் உள்ளார். 

காரமடை, சிக்கராம்பாளையம் மற்றும் ராம்நகரில் உள்ள சாயிபக்தர்கள் தங்களது ஆலோசனைகளை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சாயியின் அருளால் இப்பணி விரைவில் துவங்கிடவும், தியான மையம் சிறப்பான முறையில் நடந்திடவும் , இங்கு வேறு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும்  சீரடி சாயி பக்தர்களின் அன்பு ஆலோசனைகளை வரவேற்கிறோம்

அலைபேசி எண்கள்
9708609152 மற்றும் 7200073415


குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...