நமது உயிர் மூச்சாக இருக்கும் நமது சாயி அப்பாவிற்கு பிடித்த
விஷயங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் விளக்கேற்றுதல் ஆகும். தண்ணீரால்
விளக்கேற்றி வித்தைகள் நிகழ்த்தியவர் நமது சாயி அப்பா. தீபங்களில் அவர்
வாழ்கிறார். தீபங்கள் நமது அக இருளை நீக்கி நமக்குள் வெளிச்சத்தைக்
கொணர்பவை. அதனால் தவறாது இல்லங்களில் தீபமேற்றுவோம். சாயியின் அருளைப்
பெறுவோம்.
நாளை வியாழன்.சாயி அப்பாவிற்கான நாள். ஒவ்வொரு நாளுமே அவரது நாள் தான். இருந்தாலும் அவருக்குறிய சிறப்பு தினம். பக்தர்களாகிய
உங்களை கை கூப்பி ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.
அனைத்து சகோதர சகோதரிகளும் சாயியின் அருகில்
விளக்குகள் ஏற்றுங்கள்.ஓம் சாய்ராம்.
No comments:
Post a Comment