"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என்மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை
எய்துவாய்!"
"ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன
கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம். எனவே தங்கள் முன் வீழ்ந்து பணிகின்றோம். எளிய
ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.
இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும். பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன.
எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்"
சாயி சத்சரிதம் அத்தியாயம்-48
No comments:
Post a Comment