குரு தேவரே!
எங்களை கைவிட்டு விடாதேயும்.
நாங்கள் மனிதரை நம்பி மோசம் போன
காயங்கள் போதும்.
நீங்கள் எங்களை தூக்கி எடுத்து தேற்றி
ஆறுதல் படுத்துங்கள்.
உமது கருணையால் எங்களை
தலை நிமிரச்செய்யுங்கள்.
Tuesday, April 16, 2013
Monday, April 15, 2013
ஸ்ரீ சாயி
பல விசயங்களில் பாபா அற்புதம் செய்தார், அவர் செய்த அற்புதங்களையும் அவரது லீலைகளையும் என்னால் விவரிக்க முடியவில்லை. மனதளவில் உணர முடிகிறது. - ஒரு சாயி பக்தையின் அனுபவம்
Sunday, April 14, 2013
Saturday, April 13, 2013
Thursday, April 4, 2013
ஸ்ரீ சாயி
நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால்
அதனை நீ பொறுமையாக அனுபவி.
பதற்றப்படாதே,
பயப்படாதே,
புலம்பாதே!
அனைத்தையும் பகவான் தீர்க்கமாக
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இது விரைவில் மாறும்
நீ வாழ்க்கையின் உச்சத்தை
தொட்டபின்தான் கண் மூடுவாய்.
அவரது புனிதமான பாதங்களின் மீது
பாரத்தைப் போட்டு நம்பிக்கையோடு
அந்த நல்ல நாளுக்காகக் காத்திரு.
அது விரைவில் மிகப்பெரிய
ஆசிர்வாதத்துடன் உன்னிடம் வரும்.
ஜெய் சாய் ராம்.
Thursday, March 7, 2013
டாக்டருக்கு படிச்சா போதுமா?
ராமகிருஷ்ணர்
தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணி புரிந்தார். அங்கு வந்த பக்தர்
ஒருவர் அவரிடம், ‘ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
‘ஓ!
பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்’.
‘நீங்கள்
சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,’ என்றார் பக்தர்.
ராமகிருஷ்ணர்
அவரிடம், ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘டாக்டர்’,
என்றார் வந்தவர்.
‘அப்படியானால்,
இப்போதே என்னை டாக்டராக்குங்கள்...பார்க்கலாம்,’ என்றார் ராமகிருஷ்ணர்.
‘அதெப்படி,
படித்தால் தானே டாக்டராக முடியும்,’ என்றார் வந்தவர்.
‘படித்தால்
தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் ‘பக்தி’ என்னும் படிப்பு
வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள், காளி கண்ணுக்குத் தெரிவாள்’ என்றார்
ராமகிருஷ்ணர்.
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...






