Thursday, March 7, 2013

டாக்டருக்கு படிச்சா போதுமா?




ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணி புரிந்தார். அங்கு வந்த பக்தர் ஒருவர் அவரிடம், ‘ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
‘ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்’.
‘நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,’ என்றார் பக்தர்.
ராமகிருஷ்ணர் அவரிடம், ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘டாக்டர்’, என்றார் வந்தவர்.
‘அப்படியானால், இப்போதே என்னை டாக்டராக்குங்கள்...பார்க்கலாம்,’ என்றார் ராமகிருஷ்ணர்.
‘அதெப்படி, படித்தால் தானே டாக்டராக முடியும்,’ என்றார் வந்தவர்.
‘படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் ‘பக்தி’ என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள், காளி கண்ணுக்குத் தெரிவாள்’ என்றார் ராமகிருஷ்ணர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...