Monday, August 8, 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயம்

கீரப்பாக்கம் பாபா ஆலயம் நீங்கள் இதுவரை கண்ட பாபா ஆலயங்களில் இருந்து வித்தியாசமானது. அங்கே பூசாரிகள் யாரும் கிடையாது. நடை சார்த்த வேண்டும் சீக்கிரம் கிளம்புங்கள் எனக் கூறுவோர் கிடையாது. பாபாவை இப்படி வழிபடுங்கள் எனக் கூறுவோருமில்லை. பாபாவை தொடலாம், தொடக் கூடாது என்ற கட்டுப்பாடும் கிடையாது.
வடநாடுகளில் உள்ளது போன்ற வழிபாட்டு முறை இங்கே பின்பற்றப்படுகிறது. உங்களால் முடிந்தவரை பாபாவைத் தொட்டு வணங்கலாம், அவருக்கு நைவேத்தியம் படைக்கலாம். காலையில் சென்றால் அபிஷேகம் செய்யலாம். ஆடை உடுத்தலாம்.
இந்தக் கோயில் உங்கள் கைங்கர்யத்தால் உங்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். ஆத்மார்த்தமாக வந்து வேண்டிக் கொள்வோரும், தனியாக அமர்ந்து பாபாவிடம் பேச விரும்புவோரும் பலன் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோயில்.
கோயிலுக்கு அடுத்த கட்டிடத்தில் அரிசி போன்ற பொருட்கள் தயாராக உள்ளன. பசி எடுத்தால் நீங்களே சமைத்து சாப்பிடலாம்; இல்லாவிட்டால் கோயிலை நிர்வாகம் செய்கிற ரவி ரங்கர், முன்னாள் தாசில்தார் சம்பந்தம், அவருடைய மகள் பிரேமா ஆகியோர் அருகில் இருப்பார்கள். அவர்களிடம் கூறி உங்கள் தேவையைப் பூர்;த்தி செய்து கொள்ளலாம்.
இந்த ஆலயம் 2013 டிசம்பர் மாதம் உருவானது. முதலில் இருந்த ஷெட் அகற்றப்பட்டு தற்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைகள் உள்ளன.
ஓய்வு எடுக்க அன்னதானக் கூடத்தை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். சென்னை புதுப்பெருங்களத்தூரை தலைமையகமாகக் கொண்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ அறக்கட்டளை இதை உருவாக்கியுள்ளது.  விடுமுறை நாட்களிலும், சுற்றுலா போகும் போதும் இதை தரிசித்துச் செல்லலாம்.
சீரடி செல்வதற்கு முன்பு சாயி பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தில் வழிபட்டுச் செல்கிறார்கள். வேறு எந்த பாபா ஆலயத்திலும் தேங்காய் உடைக்க அனுமதி கிடையாது. இங்கே அதுவும் உண்டு என்பதால் பக் தர்கள் வந்து செல்கிறார்கள். இது தவிர, சபரி மலைச் செல்லும் சாயி பக்தர்களும் இங்கு வந்து சுவாமிக்கு விளக்குப் போட நெய்யை சமர்ப்பித்து தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.
ஆலயம் எப்போதுமே திறந்திருக்கிறது என்றாலும் மலைப்பகுதியில் தனிமையாக இருப்பதால் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போவது நல்லது.
தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வழியாக 55 டி என்ற பேருந்து செல்கிறது. இது தவிர கேளம்பாக்கம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டிகை வழியாகத்தான் செல்கின்றன. கண்டிகையில் இறங்கி பேருந்து மாறிக் கொள்ளலாம்.
பேருந்து நேரம்: தாம்பரத்திலிருந்து
காலை 5.15, 6,1,0 7,2,0 8.1,0 9.3,0 10.3,0 11.4,0 12.3,0 1.35, 2.4,0 3.2,0 4.45, 5.3,0 6.55, 7.4,0 8.45
கீரப்பாக்கத்திலிருந்து தாம்பரம் செல்ல
காலை 6.15, 7.1,0 8.25, 9.15, 10.35,11.25, மாலை 3.4,0 4.25, 5.5,0 6.05, 8.4,0 9.50.
இடைப்பட்ட நேரத்தில் கீரப்பாக்கத்திலிருந்து மினி பேருந்துகள் செல்கின்றன. ரவி சங்கரை தொடர்பு கொண்டாலும் ஏற்பாடுகள் செய்து தருவார்.
அவருடைய தொலைபேசி் 9710205032

உதவ எனக்கு சித்தம் உண்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். என்னுடைய வீட்டிற்கு பாபா எப்போதோ வந்து விட்டார் என்றாலும் அவரை அடையாளம் தெரிந்துகொள்ள இயலாமல் விட்டுவிட்டேன். எனது மகளின் தீவிர வேண்டுதல் போன்ற நிகழ்வுகளால் அவரிடம் அடைக்கலமானோம்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவரால் நடக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர் எங்களோடு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலியால் பாதிக்கப் பட்டேன். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை.
பாபாவின் உதியை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் அறுவை சிகிச்சை தேவையில்லை, ஊசி போட்டால் போதும் என நினைத்து வலியை நீக்க ஊசி போட்டுக் கொண்டேன். இந்த நிகழ்வு பாபாவின் மீது அதிக பக்தியை ஏற்படுத்திவிட்டது. எப்படி என்கிறீர்களா? ஊசி போட்டு வலி போகும் என நினைத்தால், வலி போவதற்கு பதில் அதிகமாகிவிட்டது. குறையவே இல்லை. இரவு முழுவதும் உறங்காமல் தவித்தேன்.
மறுநாள் பாபாவின் உதியைத் தடவியபடி, பாபா தெரியாமல் தவறு செய்துவிட்டேன், இனி உன் உதியைத் தவிர எதையும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். நம்பவே முடியாதவகையில் வலியை நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு எப்போதாவது வலி வந்துபோகும். பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கு வரும் போதெல்லாம் சாயி வரதராஜனிடம் கூற நினைப்பேன். ஆனால் மறந்துவிடுவேன். ஒருமுறை அவரிடம் கூறிய போது, என்னைத் தொட்டுப் பிரார்த்தனை செய்தார். அடுத்த வினாடியே வலி போய்விட்டது. இன்றுவரை நன்றாக இருக்கிறேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது. எங்களுடைய வயலில் நெல் அறுவடை செய்ய ஆட்களுக்குக் கூறியிருந்தோம். திடீரென்று இரவு பதினோறு மணியளவில் வானம் இடி மின்னலுடன் தூறல் போட ஆரம்பித்தது.
இவ்வளவு நாட்களாக மழையில்லாமல் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் விளைச்சல் எல்லாம் வீணாகி விடுமே என பயந்தேன். உடனே பாபாவிடம், பாபா இந்த மழையை தூறலோடு நிறுத்தி எங்கள் வயலைக் காத்து அருள் செய்யுங்கள். நெல் மற்றும் வைக்கோலை பாதுகாப்பாக வைக்க உதவி செய்யுங்கள், மழை வராமல் காத்து அருளுங்கள் என வேண்டிக் கொண்டேன்.
இந்த நன்மையைச் செய்தால் நன்றிக்கடிதமாக சாயி தரிசனம் புத்தகத்தில் எழுதுவேன். ஒருவேளை அப்படி நடக்காமல் போனாலும் பரவாயில்லை, எது நடந்தாலும் உங்கள் பொறுப்பு. நான் தவறாக வேண்டுதல் செய்திருந் தால் மன்னித்து விடுங்கள் என வேண்டினேன். இந்த வேண்டுதலோடு படுத்தேன். நன்றாக அயந்து உறங்கி அதிகாலையில் எழுந்தேன். மழை தூறலோடு நின்று விட்டிருந்தது. நாங்கள் அறுவடை செய்து நெல், வைக்கோல் அனைத்தையும் மாலை மூன்றரை மணிக்கே வீட்டுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டோம். ஆட்களுக்கு ஊதியம் தந்து அனுப்பிய பிறகு சுமார் நான்கு மணியளவில் வானம் இருண்டது.
இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த மழையை வானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வந்த நாட்களிலும் விட்டுவிட்டு மழை வந்தது. ஆனால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவருடைய பொறுப்பில் விட்டதால் ஒரு நாள் மழையை நிறுத்தி எனது வேண்டுதலை நிறைவேற்றினார் பாபா.
எனக்கு இதைச் செய்யுங்கள் எனக் கேட்காமல், உங்கள் பொறுப்பில் விடுகிறோம். சித்தம் இருந்தால் செய்யுங்கள் என வேண்டுங்கள். உனக்கு என பாபா நன்மையைச் செய்வார்.
ஆர். விஜயா, ஊத்தங்கரை.

உன் வீட்டுக்கு வருகிறேன்


சிட்டுக்குருவியின் காலில் ஏற்ற நேரத்தில் நூலைக் கட்டி பாபா இழுப்பார் என்பதற்கு நானும் எனது குடும்பத்தாரும் ஓர் எடுத்துக்காட்டு.
எப்படியெல்லாம் எங்களோடு இருந்து எங்களை பாபா வழிநடத்தினார் என்பதையும் பெருங்களத்தூருக்கு எப்படி இழுத்தார் என்பதையும் எழுதுகிறேன். ஹேமாட்பந்த் கூறுவதைப் போல பாபா என்னுள் இருந்து எழுதுவதாக நினைக்கிறேன்.
என் பெயர் பவானி. கணவர் தினேஷ் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறோம். இரு மகன்கள். அழகான குடும்பம். எனது கணவர் சாயி பக்தர்.
மைலாப்பூர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கிருந்துதான்  ஒருமுறை பாபா விக்கிரகம் ஒன்றை வாங்கிவந்தார். இதை எங்களது பூஜை அறையில் வைத்து மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கு பூஜை செய்வதைப் போலவே செய்துவந்தேன்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஓர் அக்கா பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து புத்தக விநியோகம் செய்தார். அதன் பிறகுதான் பாபாவை எப்படி வழி படுவது என்பதை அறிந்துகொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக தம்பதியருக்குள் பிரச்சினை ஏற்பட்டது. சில சமயம் பொறுமையை இழக்கும் நிலை கூட ஏற்பட்டது. கர்மவினையின் காரணமாகவும் ஏற்பட்ட பிரச்சினையான காலக்கட்டத்தில் பாபா என்னோடு வந்து கலந்ததை நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் பாபாவின் வழித்தடத்திலேயே இன்றுவரை நடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தும் குடும்பத்தில் பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடியும், வியாபாரத்தில் மந்தமும் ஏற்பட்டது. இதனால் சற்று துவண்டிருந்தோம்.
நானும் என் கணவரும் ஒரு முறை சென்னை சாலிகிராமத்தில் பார்வதி பவன் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்தோம். அங்கிருந்த புக் ஸ்டாலில் உனது பிரார்த்தனை கேட்கப்பட்டது என்ற தலைப்பு தரப் பட்ட புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கினேன். அத்துடன் அங்கு கோயில் கொண்டுள்ள குபேர சாயியையும் தரிசித்துவிட்டு வந்தேன்.
புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் பாபா என்னுடன் இன்னும் அதிக அதிகமாக நெருங்குவதையும், பேசுவதையும் உணர்ந்தேன்.
பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நான் தனியாக பெருங்களத்தூருக்கு வந்தேன். அன்று சனிக்கிழமை என்பதால் கோயிலில் யாரும் இல்லை. பாபாவை நன்றாக தரிசனம் செய்துவிட்டு, உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை வாங்கிவந்தேன்.
அதன் பிறகு நான் பெருங்களத்தூர் சென்றதையும், சாயி வரதராஜனின் கூட்டுப் பிரார்த்தனை மகிமைகளையும் என் கணவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
ஓர் ஆவல் ஏற்பட்டு அவர் என்னுடன் அடுத்த வாரமே பெருங்களத்தூர் வந்தார். அவருக்கு ஒரு திருப்தியும் ஏற்படவில்லை. பாபா எங்களை நீங்கள் இங்கு இழுத்ததற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள்தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டு வந்தேன்.
நான் புத்தகங்களைப் படித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது என் கணவர் மீண்டும் பெருங்களத்தூர் சென்று அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனக் கூப்பிட்டார். சந்தோக்ஷத்துடன் அவருடன் வந்து சாயி வரதராஜனை தரிசித்து கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம்.
மாதங்கள் செல்லச் செல்ல என் கணவர் வாரம் தோறும் தவறாமல் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள என்னையும் அழைத்து வருகிறார். ஒரு வாரம் கூட தவறியதில்லை.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாயி தரிசனம் இதழில் வெளியான ஸ்ரீ சாயியின் குரலில் மகளே! நான் இங்கு இருந்து தான் உன் வீட்டிற்கு வந்தேன் என்பதையும் உன் பிரச்சினைகளை நானே கவனித்து வருகிறேன் என்பதையும் எனக்கு உறுதிபடுத்தினார். அப்போதுதான் எனக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை நான் இங்கிருந்து வாங்கி சென்ற தும் ஞாபத்திற்கு வந்து மெய் சிலிர்த்துப் போனேன்.
இன்னொரு சம்பவம், நாங்கள் சீரடிக்கு செல்வதற்காக அக்டோபர் மாதம் சீரடி செல்ல தீர்மானித்து அது கடைசியில் அவசர வேலை காரணமாக சீரடி செல்ல முடியாமல் போனது. அதையும் பாபா டிசம்பர் மாத சாயி தரிசனம் இதழில், நீ சீரடி செல்லத் தீர்மானித்து அது கடைசியில் போகமுடியாமல் போயிருக்கலாம். இந்த ஆண்டு கண்டிப்பாக உங்களை வந்து தரிசிப்பேன் எனத் தீர்மானம் செய்துகொள் எனக் கூறியிருக்கிறார்.
இன்றும் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ பாபா, சாயி வரதராஜன் அவர்கள் மூலம் ஆன்மிகத்தையும் வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சிட்டுக்குருவியை இழுத்தது போல இன்னும் பல குடும்பங்களை பாபா, அப்பா சாயி வரதராஜன் மூலம் தம் வசம் இழுப்பார்.

பவானி தினேஷ், அம்பத்தூர்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...