Saturday, April 30, 2016

பஞ்ச பூத உடம்பு

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம். எந்தெந்த உறுப்பும், உருவாகும் பொருள்களும் எந்த எந்த பூதத்திற்கு உரியவை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நிலம்: உறுப்புகளில் பெரியதும், நிலையானதும், உருவுள்ளதும், பளுவுள்ளதும், கடின உறுப்புகளான நகங்கள், எலும்புகள், பற்கள், மாமிசம், தலைமயிர், தாடி உரோமங்கள், மலம் ஆகியவை நிலத் தாது சம்பந்தப்பட்டவை.
நீர்:  நகரும் இயல்புள்ள திரவம், ரசம் ஆகியவையும், பிசுக்குத் தன்மையுள்ள மந்தமான திரவமும், மென்மையான திரவமும், ஒட்டும் தன்மையுள்ள பிச்சிலம் என்ற இயல்புகொண்ட ரசமும், இரத்தம், மாமிசப் பசை, கபம், பித்தம், சிறுநீர், வியர்வை போன்றவை நீர் சம்பந்தப்பட்ட உறுப்புகள்.
நெருப்பு :  உடலிலுள்ள பித்தம், சூடு, பளபளப்பு இவற்றைச் சேர்ந்தவைகளும், நீலம், மஞ்சள் (பில்லிரூபின்கள்) போன்ற நிறங்களும், கண் புலன்கள் ஆகிய இவை அனைத்தும் அக்னி என்னும் பூதத்தைச் சேர்ந்தவை.
வாயு : மூ்ச்சுக் காற்று, திறத்தல், மூடுதல், விரித்தல் சுருக்குதல், செல்லுதல், தூண்டுதல், தரித்தல், தொடுதல் மற்றும் தொடு புலன்கள் ஆகியவை காற்று என்னும் பூதத்தைச் சேர்ந்தவை.
ஆகாயம்:  நாசித் துவாரங்கள், ரோமத் துவாரங்கள், செவித் துவாரங்கள் மற்றும் புலன்கள், ஓசைகள் இவை அனைத்தும் ஆகாயம் சார்ந்த உறுப்புகள்
ஆத்மா:  மனம், உணர்வு, அறிவு எனச் செயல்பட்டு உடலைத் தூண்டுகிற இதுவே ஆத்மா என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

சரகசம்ஹிதை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...