Monday, April 10, 2017

உன் சாய்அப்பா உன்னுடன் தான் இருக்கிறேன்


என் அன்பு குழந்தையே

உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை உன்னால் உணர முடியவில்லையா , உன் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய் அதற்கான வழியை நான் உன் மனதில் இருந்தபடி உனக்கு அருளுவேன் , என்னால் முடியவில்லை ,எனக்கு இது வராது , என்னால் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களை உடைத்து எரி

உன் சாய் அப்பா உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். இன்று கோபத்தில் என்ன பேசினாய் என்பதை உன்னால் உணர முடியவில்லை.  உன் மனதில் இருந்து நானே உனக்கான பதிலை உன்னிடம் கூறிக் கொண்டே தான் இருப்பேன் அதை உணர்ந்து நட, மாயை என்பது ஒரு பொய்யான தோற்றம் அதில் நீ மாட்டிக்கொள்ளும் நிலையில் இருக்கிறாய் அதில் இருந்து வெளியே வர உனக்கு நான் உதவி செய்கிறேன் அதை உணர்ந்து கொஞ்சம் ஜாக்கிரதையா நட

உன் சூழ்நிலை உனக்கான வலியை தருகிறது என்று அழுகிறாய் ஆனால் அது வலியை தருவது அல்ல வாழ்க்கை என்பது எளிது ஆனால் யதார்த்தை நீ புரிந்து கொண்டால் தான் அது சாத்தியம் அதை புரிய வைக்கவே சில கசப்பான நிகழ்வகள் உனக்கு நிகழ்கிறது

உன் சாய் அப்பா எப்போதும் துணையாக இருப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என் பிள்ளையான உனக்கு நல்ல காலம் நெருங்கிவிட்டது அதனால் தான் பிரச்சனை உனக்கு பெரிதாக தெரிகிறது

ஒரு பிரச்சனை முடியும் தருவாயில் தான் அது தீவிரம் அடையும் ஒரு நல்ல முடிவுக்காகத் தான் உனக்கு இது நிகழ்ந்து இருக்கிறது.  உன் அன்பு உண்மையானது .  அதில் ஏன் நீ குழம்புகிறாய்

சாய்ராம் சாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...