Sunday, April 9, 2017

நில்! கவனி! செல்!


“சீரடியில் காலை வைத்த சிந்தனையாளர்கள் கவலைப்படுவதில்லை” என்று பாபா அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற கோயில்களுக்கும் சீரடியில் அமைந்துள்ள சமாதி மந்திர் என்ற கோயிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் வாழ்ந்து உடலைத் துறந்தவர்களின் சமாதிகளே அமைந்துள்ளன. அதாவது புதைக்கும் இடம் என்று இதனைக் கொள்ளலாம்.
கவலைகள், கஷ்ட நஷ்டங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என எதை அனுபவித்து வந்தாலும் அவற்றை இத்தலத்திலேயே புதைத்துவிட வேண்டும்.. என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
துவாரகாமாயியில் கால் வைத்ததும் உங்கள்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வந்துவிடும் என பாபா உறுதியாகக் கூறியிருக்கிறார். நீங்கள் சீரடியில் அனைத்தையும் புதைத்து விட்டு, ஆனந்த மயமான துவாரகாமாயியில் கால் வைத்து பாபாவை சேவித்துச்செல்லுங்கள், அதன் பின் நிச்சயம் நன்மை மட்டுமே நடப்பதை அனுபவமாக அறிவீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...