Monday, March 31, 2014

தன்னம்பிக்கை வேண்டும்

எல்லா இதழ்களிலும் சாயி பக்தி, தன்னம்பிக்கை என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே, இது உங்களுக்குப் போரடிக்கிற விக்ஷயமாகப் படவில்லையா?
(ஆர். காண்டீபன், சென்னை - 33)
உலகப்பற்றில் உழன்று கிடப்பவனிடம் சிறிது சிறிதாக வைராக்கியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவனுக்கு உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தணிகிறது. என்று பகவான் ராமகிருஷ்ணர் கூறுவார்.
நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தும்போது, பக்தி குறைவானவர்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்பட்டு வலிமை ஏற்படுகிறது.


சாயி புத்ரன் பதில்கள்

Sunday, March 30, 2014

நல்லவர்களுக்கு சோதனை ஏன்?

நல்லவர்களுக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனை, கஷ்டங்கள் வருவது ஏன்?
( கே.பி. பவித்ரா, விருத்தாச்சலம்)
நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பேதம் பார்த்து கஷ்டம் வருவதில்லை. கஷ்டப்படுகிறவர்களுக்கு அனுபவத்திற்காகவும், பிறருக்குப் பாடமாக அமைவதற்காகவும் கஷ்டங்கள் வருகின்றன.
நான் ஒருமுறை, என் வீட்டுச் சுவரை உளி வைத்து உடைத்துக்கொண்டிருந்தேன். உளி மழுங்கிவிட்டது. கொல்லனிடம் கொடுத்து, பழுக்கக் காய்ச்சி கூராக்கி எடுத்து வந்து மீண்டும் உடைத்தேன். உளியின் தலையில் சுத்தியல் பட்டு, அது தலைப் பக்கத்திலும் பிசிறுகள் சிதறின.
அப்போது, அந்த உளி என்னிடம், நீ சுவரை உடைப்பதற்காக என்னை ஏன் இப்படி அடித்து, நெருப்பிலிட்டுக் காய்ச்சி வடித்து, மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்? நான் தப்பிப் போகாதபடி என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு என் தலையிலேயே அடிக்கிறாயே நீ தலையில் அடிக்கிற வேகத்திற்கு, என் கால்கள் கடினமான காங்க்ரீட் ஜல்லியில் இடி படுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் தாங்கமுடியாத அளவுக்கு அடிபடுகிறேன் என்று சொல்வது போல இருந்தது.
என்ன செய்வது? எனக்குத்தேவையில்லாத ஒன்றை நீக்குவதற்காகவே, பெரிய இரும்பாக இருந்த நான் உன்னைத் துண்டாக வெட்டியெடுத்து உளியாக  வடித்தேன். இப்போது உன்னைச்சிரமப் படு;த்தினால்தான் தேவையற்ற ஒன்றை என்னால் நீக்க முடியும் என்பதால் உன்னை அடிக்கிறேன் என்று சொன்னேன்.
மாமல்லபுரத்திற்குச் சென்ற போது, கல்லின் மீது உளியைப் பொருத்தி, சுத்தியலால் ஒருவன் அடித்து அடித்து கல்லை உடைப்பதைப் பார்த்தேன். கல் உடைந்து சிலையாக வேண்டுமானால், உளி அடிபட்டுத்தான் ஆகவேண்டும்.
பிறர் நன்மை பெற வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
நீண்ட இரும்புக் கம்பியாக இருந்த ஒன்றை துண்டாக வெட்டி உளியாக்கி பயன்படுத்துவதைப் போல, பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களாய் இருந்த உன்னை, மானுடனாய் கடவுள் பிறக்க வைத்தது, அவன் தன் தேவைகளை உன்னை வைத்துப்பூர்த்தி செய்து கொள்ளவே!
நாம் பயன்படுத்துகிற அழகு சாதனம் முதல், அணிந்து கொள்ளும் நகைகள், கட்டுகிற கடிகாரம் உட்பட அனைத்துமே அடிபட்டதால் உருவானவை. அனுபவிக்க மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, எதற்காக என்று கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை.
கேட்டாலும் இறைவன் நம்மை விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டேன் நான். எதற்காகவோ இந்தக் கஷ்டத்தை கடவுள் அனுமதித்து இருக்கிறான் என நினைத்து சகித்துக் கொள்ளுங்கள்.. அதிலும் சந்தோக்ஷம் இருக்கத்தான் செய்கிறது.


சாயி புத்ரன் பதில்கள்

Saturday, March 29, 2014

போலித் துறவறம்!

நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நிறைய பகட்டு, ஆடம்பரம் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது?
( சாயி சம்பத், வேலூர் 2)
போலித் துறவறத்தைக் குறிக்கிறது.
ஆந்திராவில் பரத்வாஜ் சுவாமிகள் இருந்தார். மெத்தப்படித்தவர், சாயியின் தீவிர பக்தர். அந்தப் பகுதியில் நிறைய சாயி கோயில்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தவர், பலரை சாயி பக்தியில் வழிநடத்தியவர். வசதியுள்ளவர். ஆனால், அவர் மிக எளிமையாக வாழ்ந்து சமாதியானார். சட்டையைக் கூட அயர்ன் செய்து போட மாட்டாராம். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த ஆந்திராவிலேயே, இன்னொரு சாயி சாமியார் இருக்கிறார். ருத்ராட்க்ஷ கொட்டையில் தங்கத்தைச் சேர்த்து மாட்டியிருக்கிறார். துறவிக்கு தங்கமும் தகரமும் ஒன்றாக இருக்க வேண்டும். ருத்ராட்சை துறவின் அடையாளம். அதில் தங்கம் கலப்பது லவுகீகப் பெருமை.
பெண்கள் ஒரு புடவை எடுத்தால் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் எடுப்பார்கள். அது போல சில துறவிகள் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அதற்கு மேட்சிங்காக மண்டை நிறைய பட்டையும் அடித்துக்கொள்கிறார்கள்.
புத்தகத்தைப் படித்து துறவியானால் இந்த நிலை நீடிக்கும். அனுபவத்தின் மூலம் துறக்கவேண்டும். அப்போதுதான் எதன் மீதும் ஆசையிருக்காது.
துறவிகள் எப்படியிருந்தால் நமக்கென்ன, நாம் சாயியை மட்டுமே பார்த்து, அவரது போதனைப்படி வாழ்ந்தால் போதுமானது.


சாயி புத்ரன் பதில்கள்

Friday, March 28, 2014

அற்புதங்கள் செய்வது எதற்காக?


பகவான் அற்புதங்கள் செய்வது எதற்காக?
(கௌசல்யா ராமானுஜம், திருவல்லிக்கேணி, சென்னை - 4)
அற்புதங்கள் என்பவை ஒரு மாடிக்குச் செல்வதற்குச் செல்வதற்கு இருக்கும் படிக்கட்டுகள் போன்றவை. ஒவ்வொரு படியாக ஏறினால் எப்படி மாடியை அடைந்துவிடுகிறோமோ, அப்படி ஒவ்வொரு அற்புதமும் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றன.



Thursday, March 27, 2014

பாபா

   என்னிடம் சரண் 
   புகுந்தவன் தேவைகள்
    யாவற்றையும் நான்
     கவனித்துக் கொள்கிறேன்.
     எந்த ஒரு சிறிய 
      நிழற்படத்திலும்
      நிஜமாக 
     இருக்கிறேன்.

சுகம் பெற சுலப வழி!



     மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசை பாடினாலும், கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ, மனம் புண்படும் படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக.      அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.

என் மீது பாரத்தை வைத்துவிடு!

என் பெயர் ராம திலகம். கோவையில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் கண்ணன். எங்களுக்கு நிவேதா, சாய் ஹரீஷ் என இரண்டு குழந்தைகள்.
     என் குடும்பத்தில் சாயி ஆசீர்வாதம் நிறைய உண்டு என எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இன்னும் அதிகமுள்ளதை உணர்கிறேன்.
     அப்பா அம்மா இல்லை, குடும்பத்தினர் உறவு சொல்வது போல் இல்லை. எனக்கு எல்லாமான பாட்டியும் தவறிவிட்டார். இப்பொழுது எனக்கு எல்லாமாக பாபா மட்டுமே இருக்கிறார்.
     நாங்கள் வீடு கட்டினோம். இஞ்சினியர் குறிப்பிட்ட நாளில் முடித்துத் தருவதாகக் கூறியதை நம்பி, அழைப்பிதழை அச்சிட்டு கொடுத்துவிட்டோம். ஆனால் வேலை முடியவில்லை. என் கணவர், கிரகப்பிரவேசம் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
     அதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னை பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு பதில் சொல் கிறேன் என்று கூறி, பாபா கோயிலுக்குச் சென்று அங்கு பாபாவிடம் என் மனதில் உள்ளதைக் கூறி அழுது வேண்டிக் கொண்டு, பத்திரிகையை வைத்து, எனக்கென யாருமில்லை. நீதான் வந்து எனக்கு எல்லாவிதமான உறவுமாக இருந்து, கிரகப்பிரவேசத்தை நடத்தவேண்டும் எனக் கூறி விட்டு, இதையும் சொன்னேன்:
     “ஒரு சாயி பக்தை தன் திருமணத்திற்கு பாபாவை வரவேண்டும். நீ வந்தால்தான் எனக்குக் கல்யாணம் என்று சொல்லி பத்திரிகையைக் கொடுத்துச் சென்றாள். கல்யாணத்தில் பாபா முதல் வரிசையில் நின்று அவளை ஆசீர்வதிப்பதைப் புகைப்படத்தில் பார்த்தாள். இது எவ்வளவு உண்மையோ, அதைப் போல் எனக்கு நீங்கள் வந்து முதலில் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க வேண்டும்! என வேண்டி விட்டு திரும்பினேன்.
     பாதி வழியில் பாபாவின் படம் வாங்க வேண்டும் எனத் தோன்றியது. திரும்ப கோயில் சென்று என்னிடமிருந்த இருநூறு ரூபாய்க்கு போட்டோ வாங்கினேன். அதில் ‘என் மீது உனது பாரத்தை வைத்துவிடு என்றிருந்தது. பாபா வீடு வந்த ஒரே முழு நாளில் என் வீட்டு வேலை முடிந்து விட்டது.
     பாபாவை என் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். அவரும் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறார். கன்னத்தில் கை வைத்திருக்கும் பாபாவை விட, கூட ஒரு விநாயகர் படத்தை வைக்குமாறு என் பெரியம்மா சொன்னார். அதை மறுத்துவிட்டோம்.
     எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கு ஆண் வாரிசு கொடுத்தால் சீரடிக்கு வந்து ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவேன் என வேண்டினேன். எனது வேண்டுதலைக் கேட்டு ஆண் வாரிசு தந்தார்.
     காணிக்கை தர மறந்துவிட்டேன். அதை என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
     ஒரு பூஜையின் போது பாபா என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. சமீபத்தில் நானும் பாபாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலும், பாபாவுக்கு நான் சாப்பாடு போடுவது போன்றும் எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. இது உண்மையா? கற்பனையா? என்று எனக்கு விளங்கவில்லை.

ராமதிலகம், துடியலூர், கோவை



(உண்மைதான் மகளே)

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...