Thursday, March 27, 2014

என் மீது பாரத்தை வைத்துவிடு!

என் பெயர் ராம திலகம். கோவையில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் கண்ணன். எங்களுக்கு நிவேதா, சாய் ஹரீஷ் என இரண்டு குழந்தைகள்.
     என் குடும்பத்தில் சாயி ஆசீர்வாதம் நிறைய உண்டு என எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இன்னும் அதிகமுள்ளதை உணர்கிறேன்.
     அப்பா அம்மா இல்லை, குடும்பத்தினர் உறவு சொல்வது போல் இல்லை. எனக்கு எல்லாமான பாட்டியும் தவறிவிட்டார். இப்பொழுது எனக்கு எல்லாமாக பாபா மட்டுமே இருக்கிறார்.
     நாங்கள் வீடு கட்டினோம். இஞ்சினியர் குறிப்பிட்ட நாளில் முடித்துத் தருவதாகக் கூறியதை நம்பி, அழைப்பிதழை அச்சிட்டு கொடுத்துவிட்டோம். ஆனால் வேலை முடியவில்லை. என் கணவர், கிரகப்பிரவேசம் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
     அதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னை பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு பதில் சொல் கிறேன் என்று கூறி, பாபா கோயிலுக்குச் சென்று அங்கு பாபாவிடம் என் மனதில் உள்ளதைக் கூறி அழுது வேண்டிக் கொண்டு, பத்திரிகையை வைத்து, எனக்கென யாருமில்லை. நீதான் வந்து எனக்கு எல்லாவிதமான உறவுமாக இருந்து, கிரகப்பிரவேசத்தை நடத்தவேண்டும் எனக் கூறி விட்டு, இதையும் சொன்னேன்:
     “ஒரு சாயி பக்தை தன் திருமணத்திற்கு பாபாவை வரவேண்டும். நீ வந்தால்தான் எனக்குக் கல்யாணம் என்று சொல்லி பத்திரிகையைக் கொடுத்துச் சென்றாள். கல்யாணத்தில் பாபா முதல் வரிசையில் நின்று அவளை ஆசீர்வதிப்பதைப் புகைப்படத்தில் பார்த்தாள். இது எவ்வளவு உண்மையோ, அதைப் போல் எனக்கு நீங்கள் வந்து முதலில் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க வேண்டும்! என வேண்டி விட்டு திரும்பினேன்.
     பாதி வழியில் பாபாவின் படம் வாங்க வேண்டும் எனத் தோன்றியது. திரும்ப கோயில் சென்று என்னிடமிருந்த இருநூறு ரூபாய்க்கு போட்டோ வாங்கினேன். அதில் ‘என் மீது உனது பாரத்தை வைத்துவிடு என்றிருந்தது. பாபா வீடு வந்த ஒரே முழு நாளில் என் வீட்டு வேலை முடிந்து விட்டது.
     பாபாவை என் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். அவரும் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறார். கன்னத்தில் கை வைத்திருக்கும் பாபாவை விட, கூட ஒரு விநாயகர் படத்தை வைக்குமாறு என் பெரியம்மா சொன்னார். அதை மறுத்துவிட்டோம்.
     எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கு ஆண் வாரிசு கொடுத்தால் சீரடிக்கு வந்து ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவேன் என வேண்டினேன். எனது வேண்டுதலைக் கேட்டு ஆண் வாரிசு தந்தார்.
     காணிக்கை தர மறந்துவிட்டேன். அதை என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
     ஒரு பூஜையின் போது பாபா என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. சமீபத்தில் நானும் பாபாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலும், பாபாவுக்கு நான் சாப்பாடு போடுவது போன்றும் எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. இது உண்மையா? கற்பனையா? என்று எனக்கு விளங்கவில்லை.

ராமதிலகம், துடியலூர், கோவை



(உண்மைதான் மகளே)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...