Saturday, March 29, 2014

போலித் துறவறம்!

நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நிறைய பகட்டு, ஆடம்பரம் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது?
( சாயி சம்பத், வேலூர் 2)
போலித் துறவறத்தைக் குறிக்கிறது.
ஆந்திராவில் பரத்வாஜ் சுவாமிகள் இருந்தார். மெத்தப்படித்தவர், சாயியின் தீவிர பக்தர். அந்தப் பகுதியில் நிறைய சாயி கோயில்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தவர், பலரை சாயி பக்தியில் வழிநடத்தியவர். வசதியுள்ளவர். ஆனால், அவர் மிக எளிமையாக வாழ்ந்து சமாதியானார். சட்டையைக் கூட அயர்ன் செய்து போட மாட்டாராம். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த ஆந்திராவிலேயே, இன்னொரு சாயி சாமியார் இருக்கிறார். ருத்ராட்க்ஷ கொட்டையில் தங்கத்தைச் சேர்த்து மாட்டியிருக்கிறார். துறவிக்கு தங்கமும் தகரமும் ஒன்றாக இருக்க வேண்டும். ருத்ராட்சை துறவின் அடையாளம். அதில் தங்கம் கலப்பது லவுகீகப் பெருமை.
பெண்கள் ஒரு புடவை எடுத்தால் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் எடுப்பார்கள். அது போல சில துறவிகள் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அதற்கு மேட்சிங்காக மண்டை நிறைய பட்டையும் அடித்துக்கொள்கிறார்கள்.
புத்தகத்தைப் படித்து துறவியானால் இந்த நிலை நீடிக்கும். அனுபவத்தின் மூலம் துறக்கவேண்டும். அப்போதுதான் எதன் மீதும் ஆசையிருக்காது.
துறவிகள் எப்படியிருந்தால் நமக்கென்ன, நாம் சாயியை மட்டுமே பார்த்து, அவரது போதனைப்படி வாழ்ந்தால் போதுமானது.


சாயி புத்ரன் பதில்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...