Friday, July 4, 2014

உனக்கு எல்லாம் இனிப்பாகவே இருக்கும்!



7e562-ba3



புதுப்பெருங்களத்தூரில் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனை, பஜன், சத்சங்கம் ஆகியவற்றில் ஒரு முறையாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக எனக்குண்டு.



முதன்முறை பெருங்களத்தூர் பாபா மையம் பற்றி அறிந்து, அங்கு சென்றுவந்தோம். அப்போது ஸ்ரீ சாயி வரதராஜன் பற்றி ஏதும் தெரியாது. பிறகு, சாயி தரிசனம் மூலம் அறிந்து அவரை தரிசிக்க விரும்பினேன்.



இதற்காக பெருங்களத்தூர் செல்ல டிக்கெட் பதிவு செய்தும் ஏனோ செல்ல இயலவில்லை. ஏப்ரல் ஆறாம் நாள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள அங்கு வந்த போது, சாயி வரதராஜன் ஊரில் இல்லை எனத் தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்பிவந்தோம். ஆனால், ராமநவமிக்கு அவர் நிச்சயம் வருவார் என்பதை அறிந்து திரும்பினோம்.



ஒருநாள் சென்னையில் தங்கி ராம நவமியன்று காலையிலேயே பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குச் சென்றிருந்தோம். சாயி ஜெயந்தி வாய் நிறைய வரவேற்று, மாடியில் நடந்த ஹோமத்தில் கலந்துகொள்ளச் சொன்னார்.



ஹோமத்தில் குருக்கள் பிள்ளைகள் படிப்பு, குபேர சம்பத்து, ஆரோக்கியத்திற்கு என தனித்தனியாக சமித்துகள் அளித்து ஹோமத்தில் சேர்க்கச் சொன்னார்.



அப்போது சாயி வரதராஜன் வந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு மனம் துள்ளி குதித்தது. அவர் மாடிக்கு வந்த போது எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். கீழே அழைத்து வந்து எங்கள் நெற்றியில் உதி தடவி, எங்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது, மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்துவிட்டது.



அவர் என்னையே அன்பு ததும்ப பார்த்தார். மனதின் கனிவு கண்களில் பொங்கிவழிந்தது. நான் அழுததால் அவர் மனம் நெகிழ்வது கண்களில் தெரிந்தது. நான் யாரோ அவர் யாரோ. அவரை முன்பின் பார்த்ததில்லை, பழகியதில்லை. ஆயினும் நம் துக்கம் அவரை நெகிழவைக்கிறதே, இதனால் தான் அவரைப் பற்றி இவ்வளவு உயர்வாக மக்கள் நினைக்கிறார்கள் என்பது புரிந்தது.



எதற்கம்மா அழுகிறீர்கள்? ஒரு வருடத்திற்குள் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றார். ஆகா, என்னே பாக்கியம்? டிக்கெட் புக் செய்த நாள்முதல் பாபாவிடம், சாயி வரதராஜன் மூலம் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என பிரார்த்தித்து வந்தேன். இதோ பதில் கிடைத்துவிட்டது.



அதே நேரத்தில் மாடியிலிருந்து பூரணாகுதித்தட்டை எடுத்துவந்து நமஸ்கரிக்கச் சொன்னார்கள். அதில் போடுவதற்காக என் கணவர் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். சாயி வரதராஜன் அந்த நோட்டை எடுத்து என் கணவர் கையில் கொடுத்து விட்டு, தன்னிடமிருந்து காசுகள் எடுத்து என் கையிலும், கணவர் கையிலும் தந்து, தட்டில் சேர்க்கச்சொன்னார். காசுகள் ஹோமத்தில் சேர்ப்பதற்காக.. என்று கூறினார்.



பாபா காலத்தில் பாபாவால் தொடப்பட்டு தரப்பட்ட காசுகளை பலர் பெற்றதாக படித்துள்ளோம். இன்று சாயி வரதராஜன் தொட்டு எடுத்துக் கொடுத்த ரூபாய் நோட்டை அவர் ஆசியாகக் கருதி என் கணவரிடமிருந்து அப்போதே வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன்.



என் அம்மா வீட்டிற்கு எப்போது போனாலும் அங்கிருந்து கிளம்பும்போது, என் பெற்றோரிடம் இருந்து பணம் கேட்டுப் பெறுவேன். அவர்களும் அளிப்பார்கள். அது எந்தத் தொகையானாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பத்து ரூபாய் நோட்டைப் பெற்றபோது எனக்கு அந்த நினைவு வந்தது.



சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பாபாவுக்குப் பால் அபிஷேகம் நடந்தது.. சாயி ஜெயந்தி முன்னின்று நடத்தினார். எல்லோரையும் அப்பா அம்மா என்று அழைத்து பாபாவுக்கு அவர் பாலபிஷேகம் செய்ய வைத்தது கண்களுக்குக் குளிர்ச்சி. பக்தர்கள் அனைவரும் பாலபிஷேகம் செய்தனர். அபிஷேகம் முடிந்தவுடன், சாயி ஜெயந்தி பாபாவுக்கு நேர்த்தியாக அலங்காரம்செய்தார்.



ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் சிறுசிறு ரோஜா புஷ்பங்கள் நிறைய ஒன்று சேர்த்து கட்டிய பெரிய கனத்த தண்டு மாலை பாபாவுக்கு சார்த்தப்பட்டது.



”உங்கள் பாரங்களையெல்லாம் நான் சுமக்கிறேன் பாருங்கள்” என்று பாபா சொல்வதுபோல் எனக்குத்தோன்றியது. அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகி ராஜ பரப்பிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதனை, ஸ்ரீ சீதா ராமனாக கொண்டாடி, சாயி சகஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்ரம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்று பல்வேறு தோத்திரங்களால் துதி செய்தார்கள்.



பக்தர்கள் அனைவரும் தனித்தனியாக தங்கள் கைகளால் ஆரத்தி செய்ய அவகாசம் கிடைக்கப் பெற்றோம்.  ஸ்ரீ பகவானின் அபிஷேகப் பால், புஷ்பம் போன்றவை அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.



இவை முடிந்ததும் அனைவரையும் அழைத்து அன்னப் பிரசாதம் அளிக்கப்பட்டது. சாம்பார் சாதம்,தயிர் சாதம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என அனைத்து வித உணவுகளையும் பக்தர்கள் உண்பதற்காகப்பரிமாறினார்கள். வெயிலுக்கு இதமாக நீர்மோர் அமிர்தமாக தொண்டையில் இறங்கியது.



நாங்கள் அன்று சென்றதில் இருந்து பாபாவின் பிரசாதமாக நிறைய இனிப்புகள் கிடைத்தது மனதுக்கு ஒரு சந்தோக்ஷத்தைக் கொடுத்தது. உனக்கு இனி எல்லாம் இனிப்பாகவே இருக்கும் என்று பாபா சங்கேதமாகச் சொல்வது போல் பட்டது.



மையத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளும் எந்த அமர்க்களமோ, ஆரவாரமோ இல்லாது அமைதியாக இயல்பாக நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.



என் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது என்ற நம்பிக்கையுடன் என் சாயி அப்பாவை தெரு முனை வரை திரும்பித் திரும்பி தரிசித்தபடி ஊர் திரும்பினேன். இது என்னால் மறக்கமுடியாத ஸ்ரீ ராம நவமி.



விஜயலட்சுமி,



ஹைதராபாத்

சாயி பிரார்த்தனை

200px-Sai_Baba

குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா
உன்னருளை எனக்குத் தருவாய் சாயிநாதா
என் வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா
இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா
வியாழன் தோறும் விரதம் இருந்தேன் சாயிநாதா
உலகப்பற்றை விட்டொழிக்க அருள்வாய் சாயிநாதா
குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா
கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா
உந்தன் சரித்திரம் படித்திட அருள்வாய் சாயிநாதா
உந்தன் பாதகமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா
எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா.

Thursday, July 3, 2014

தமிழகத்தில் சாயி அற்புதங்களுக்கான ஆலயம்!

sai29



நெல்லைமாவட்டம், வரகனூரைச் சேர்ந்த வேலுச்சாமிக்கு இப்போது வயது 67.  ‘‘இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தினார்னு சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அப்படிப்பட்ட அற்புதங்களை அனுபவிச்சவன் நான்’’ என்கிற வேலுச்சாமி, நெல்லை - கோவில்பட்டி சாலையில் வில்லிச்சேரி-2 எனும் கிராமத்தில் சாயி கோயிலைக் கட்டியெழுப்பியவர். ‘‘வேலை விஷயமா மும்பையில் 2009 வரை தங்கி இருந்தேன். அப்போ ஷீரடி கோயிலுக்குப் போறது பழக்கமாச்சு. அப்போதான் தென்னாட்டில் ஒரு கோயில் கட்ட பாபா எனக்கு உத்தரவிட்டார். அதே வருஷத்தில்தான் இந்தக் கோயிலைக் கட்டினேன். ஏராளமான பெண்களுக்கு இந்த பாபா குழந்தை வரம் கொடுத்திருக்கிறார். 39 வயதான ஒரு பெண்மணிக்கும் திருமணத்தை நடத்திக் கொடுத்திருக்கிறார். தினம் தினம் இப்படி இங்கு அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது’’ என்கிறார் அவர். ஆலயத்தொடர்புக்கு: 94427 23975

திருக்கோவிலூர் அருகே சாயிபாபா ஆலயம்!

sairam



என் பெயர் விக்னேஸ்வரன். சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு சாயி பாபா மீது துளியளவு கூட நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பின் என் வாழ்வில் பாபா வந்தது மிகவும் சுவாரஸ்யமானது.



தற்போது எனக்கு வயது 29. என் மனைவி உமா.  மணமாகி நான்கு ஆண்டுகளாகி குழந்தையில்லாமல் இருந்தது. இதனால் நாங்கள் பட்ட துயரங்கள் அதிகம்.



என் மனைவியின் தோழி ஒருவர் பாபாவின் அற்புதங்களையும் விரதங்களையும் கூற, என் மனைவி பாபாவுக்கு வியாழன் தோறும் விரதம் இருந்தாள். அந்த நிலையிலும் எனக்கு பாபா மீது நம்பிக்கை தோன்றவில்லை.



நான்கு ஆண்டுகளாக அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் குழந்தைப் பேறுக்காக டாக்டர்களை பார்த்தோம். மருந்து மாத்திரைகள் தந்தார்களே தவிர, வேறு பலன் கிடைக்கவில்லை. போகாத கோயில்களும் கிடையாது எனலாம்.



எனது மனைவி உடலை வருத்தி விரதம் இருப்பது முட்டாள் தனமானது என எண்ணினேன். எனது மனைவியின் விரதத்தில் ஒரு மிகப்பெரிய அபூர்வ நிகழ்வு ஒன்று நடந்தது.



என்ன ஆச்சர்யம்- இரண்டாவது வியாழக்கிழமை என் மனைவி கருத்தரித்தாள். என்னால் இந்த ஆச்சரியத்தைத்தாங்க முடியவில்லை. பாபாவுக்கு இப்படியும் ஒரு சக்தியிருக்கிறதா என வியந்தேன். குழந்தை பிறந்தால் பாபாவின் பெயரையே வைப்பதாக முடிவு செய்தேன்.



அழகான பெண் குழந்தை பிறந்தது. பெயர் சாயி _. என் குடும்பத்தாரும் பாபாவின் அற்புத சக்தியை நினைத்து அதிசயப்பட்டு, அவரது பக்தர்கள் ஆனார்கள். அன்றிலிருந்து பாபாவுக்கு அடிமையானேன். பாபா மீதான பக்தி என் இரத்தத்தில் பாய்ந்திருப்பது போன்று உணர்ந்தேன்.



இதனால் பாபாவின் அற்புதங்களை சேகரிக்க ஆரம்பித்தேன், அவரைப் பற்றி சொல்லவும் ஆரம்பித்தேன். என்னுடன் ஆட்டோ ஓட்டும் ராஜா என்ற நண்பருக்கு மூன்று ஆண்டுகளாகக் குழந்தையில்லை என்பதை என்னுடன் கூறி வருத்தப்பட்டான்.



உடனடியாக, ”பாபா இருக்க பயம் ஏன்? கவலையை விடு. அவரை வேண்டிக்கொள்.. நிச்சயம் உனக்குக் குழந்தை பிறக்கும். உனக்காக விரதமிருக்கிறேன். இன்றிலிருந்து நான்காவது வியாழக்கிழமை நீயே என்னிடம் வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்வாய்”  எனக் கூறினேன்.



ஒவ்வொரு வியாழன் தோறும் எனது நண்பனுக்காக விரதமிருந்தேன். பாபா எனது விரதத்தை அங்கீகரியுங்கள் என வேண்டினேன். அவர் வரம் தந்துவிட்டார். மூன்றாவது வியாழக்கிழமையே, என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள் என்று வந்து சொன்னார்.



பாபா என் வாக்கைக் காப்பாற்றினார் என்பதைவிட, என் விரதத்தை ஏற்று அவனுக்கு வரம் தந்தார் என்பதே உண்மை. இதுபோன்று நிறைய அற்புதங்களை பாபா நிகழ்த்தியிருக்கிறார். இனியும் பகிர்ந்துகொள்வேன்.



ஜி விக்னேஸ்வரன்

 

 

Wednesday, July 2, 2014

தமிழகத்தில் சாயி பாபாவே கட்டிய கோயில்!

 Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b712



சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு சொந்தமானது வளசரவாக்கத்தில் உள்ள ‘விஸ்வரூப ஷீரடி சாயி மந்திர்’. திரைத்துறை வி.ஐ.பி என்றாலும் இங்கு இவரை சராசரி பக்தராகப் பார்க்க முடிகிறது.



‘‘அடிப்படையில் நான் ஐயப்ப பக்தன்தான். என் மனைவிதான் பாபா படத்தையும் சிலையையும் வீட்டில் அங்கங்க வச்சிருப்பாங்க. அதெல்லாம் ஒரு பாஸிடிவ் வைபரேஷனை உருவாக்கினதை நானே கண்கூடா உணர்ந்தேன். அப்புறம்தான் எனக்கு சொந்தமான இந்தத் தோட்டத்துல ஒரு பாபா சிலை வச்சு, சுத்தி சுவர் எழுப்பலாம்னு ஆரம்பிச்சேன். இவ்வளவு சிறப்பான கட்டிடமெல்லாம் யாரும் பிளான் பண்ணாதது. தானாவே அமைஞ்சது இந்த அற்புதம். இதை பாபாவே கட்டிக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்’’ என்பது ஏ.எம்.ரத்னத்தின் பணிவான ஸ்டேட்மென்ட்.

அப்படியே ஷீரடி கோயிலை படி எடுத்தது போன்ற அமைப்பும், ஒன்பது அடியில் பிரமாண்ட பாபா சிலையும் இந்த ஆலயத்தின் ஸ்பெஷல்கள். ஷீரடி போலவே இங்கும் நான்கு வேளை பூஜையுடன் பிரசாதமும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் இருக்கும் வரை தாராளமாய்த் திறந்திருக்கிறது. வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கின்றன.
ஆலயத்தொடர்புக்கு: 97102 82877

நீ வேண்டினால் நான் கேட்பேன்!

foursai



சில வருடங்களுக்கு முன், சென்னையிலிருந்து சீரடிக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட சமயம்.. சாயி பக்தர் ஒருவர் இருபது முப்பது பேருடன் சென்றுவர ஏற்பாடுகள் செய்துவந்தார். நானும் எனது கணவரும் இக்குழுவில் சேர்ந்தோம். அப்பொழுதெல்லாம் நான்கு மாதங்களுக்கு முன்பே இருக்கை பதிவு செய்யலாம் என்ற நிலை. பயண நாள் வந்தபோது, அளவற்ற குதூகலத்துடன் இரு வேளை உணவு தயார் செய்துகொண்டு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.



ஏற்பாட்டாளர் எங்களிடம் ரயிலுக்கு உரிய நேரத்தில் வந்து விடுமாறு கூறினார். என் கணவர் என்ன புரிந்துகொண்டாரோ தெரியவில்லை. பகல் பன்னிரண்டு மணிக்கு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டால், இரண்டு மணி அளவில் காட்பாடி வரும். நாம் ஒரு மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று கூறினார். அதற்கேற்றவாறு நிதானமாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.



பயண ஏற்பாட்டாளர் போன் செய்து, “ரெடியாகி விட்டீர்களா? உடனே புறப்பட்டு ரயில் நிலையம் வந்துவிடுங்கள்” என்றார்.



”இரண்டு மணிக்குத்தானே ரயில் காட்பாடி வரும்? இப்போது வந்து என்ன செய்யப்போகிறேhம்?” எனக் கேட்டேன்.



”சென்னையில் 10.10க்கு ரெயில். காட்பாடிக்கு 11.50க்கு வந்துவிடும்.” எனக் கூறினார். அதைக் கேட்டு ஏற்பட்ட பதற்றத்தை வெறும் வார்த்தையால் சொல்லமுடியாது.



அப்போது மணி 11.20 ஆகியிருந்தது. சமைத்துக்கொண்டிருந்தேன். அதை அப்படியே போட்டுவிட்டு, ஏற்கனவே எடு;த்து வைத்திருந்த துணி மணிப் பைகளுடன் ஓட்டமும் நடையுமாக வந்து ஆட்டோ பிடித்து புறப்பட்டோம்.



வீட்டிலிருந்து ரயில் நிலையம் எட்டு கி.மீ.தொலைவில் இருந்தது. முப்பது நிமிடத்திற்குள் போகமுடியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் பாபாவிடம், ”பாபா நீங்கள்தான் எங்களை அழைத்தீர்கள். ஏமாற்றிவிடாதீர்கள். எப்படியாவது ரயிலை தாமதமாக அழைத்து வாருங்கள்!” என வேண்டிக் கொண்டிருந்தேன்.



ஆட்டோ ஓட்டுநர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு வேகமாக ஆட்டோவை ஓட்டிவந்து சரியாக 11.50க்கு ரயில் நிலையத்தில் இறக்கி விட்டார்.



பிளாட்பாரத்திற்குள் பறந்துவந்தோம். ரயிலைக் காணவில்லை. வந்து போய்விட்டதுபோலும் என நினைத்து அழஆரம்பித்தேன். அப்போது எதிர் பாராத விதமாக எங்களுக்காகக் காத்திருந்த பயண ஏற்பட்டாளர், “வந்து விட்டீர்களா? இன்றைக்கு ரயில் அரை மணி நேரம் லேட்” என்றாரே பார்க்கலாம்..



நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. இந்த அன்பு மகளுக்காக, பாபா வண்டியை தாமதமாக ஓட்டிக்கொண்டு வருகிறார் என மகிழ்ந்தேன்.



வண்டிகள் தாமதமாக வந்தால் நொந்து புலம்பும்நான், இன்று தாமதமாக வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். இந்த நிகழ்ச்சி நடக்காமலிருந்தால், பாபாவை பார்க்கப் போனோம், பார்க்காமல் திரும்பி வந்தோம் என்றுதான் இருந்திருக்கும்.



பயண நாளில் எங்களுக்குத் தவிப்பை ஏற்படுத்தி, என்னை என்றுமில்லாத அளவுக்கு மனம் உருக வேண்ட வைத்து, என் கோரிக்கையை நிறைவேற்றி அவரது கருணையை எங்களுக்கு உணர்த்தி, பரவசமடையச் செய்தார் பாபா என்றே நான் உணர்கிறேன்.



ச.ஜெகதாம்பாள்



சத்துவாச்சாரி, வேலூர்

Tuesday, July 1, 2014

உனக்குக் குழந்தை பிறக்கும்!

bigsai



என் பெயர் விக்னேஸ்வரன். சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு சாயி பாபா மீது துளியளவு கூட நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பின் என் வாழ்வில் பாபா வந்தது மிகவும் சுவாரஸ்யமானது.



தற்போது எனக்கு வயது 29. என் மனைவி உமா.  மணமாகி நான்கு ஆண்டுகளாகி குழந்தையில்லாமல் இருந்தது. இதனால் நாங்கள் பட்ட துயரங்கள் அதிகம்.



என் மனைவியின் தோழி ஒருவர் பாபாவின் அற்புதங்களையும் விரதங்களையும் கூற, என் மனைவி பாபாவுக்கு வியாழன் தோறும் விரதம் இருந்தாள். அந்த நிலையிலும் எனக்கு பாபா மீது நம்பிக்கை தோன்றவில்லை.



நான்கு ஆண்டுகளாக அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் குழந்தைப் பேறுக்காக டாக்டர்களை பார்த்தோம். மருந்து மாத்திரைகள் தந்தார்களே தவிர, வேறு பலன் கிடைக்கவில்லை. போகாத கோயில்களும் கிடையாது எனலாம்.



எனது மனைவி உடலை வருத்தி விரதம் இருப்பது முட்டாள் தனமானது என எண்ணினேன். எனது மனைவியின் விரதத்தில் ஒரு மிகப்பெரிய அபூர்வ நிகழ்வு ஒன்று நடந்தது.



என்ன ஆச்சர்யம்- இரண்டாவது வியாழக்கிழமை என் மனைவி கருத்தரித்தாள். என்னால் இந்த ஆச்சரியத்தைத்தாங்க முடியவில்லை. பாபாவுக்கு இப்படியும் ஒரு சக்தியிருக்கிறதா என வியந்தேன். குழந்தை பிறந்தால் பாபாவின் பெயரையே வைப்பதாக முடிவு செய்தேன்.



அழகான பெண் குழந்தை பிறந்தது. பெயர் சாயி _. என் குடும்பத்தாரும் பாபாவின் அற்புத சக்தியை நினைத்து அதிசயப்பட்டு, அவரது பக்தர்கள் ஆனார்கள். அன்றிலிருந்து பாபாவுக்கு அடிமையானேன். பாபா மீதான பக்தி என் இரத்தத்தில் பாய்ந்திருப்பது போன்று உணர்ந்தேன்.



இதனால் பாபாவின் அற்புதங்களை சேகரிக்க ஆரம்பித்தேன், அவரைப் பற்றி சொல்லவும் ஆரம்பித்தேன். என்னுடன் ஆட்டோ ஓட்டும் ராஜா என்ற நண்பருக்கு மூன்று ஆண்டுகளாகக் குழந்தையில்லை என்பதை என்னுடன் கூறி வருத்தப்பட்டான்.



உடனடியாக, ”பாபா இருக்க பயம் ஏன்? கவலையை விடு. அவரை வேண்டிக்கொள்.. நிச்சயம் உனக்குக் குழந்தை பிறக்கும். உனக்காக விரதமிருக்கிறேன். இன்றிலிருந்து நான்காவது வியாழக்கிழமை நீயே என்னிடம் வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்வாய்”  எனக் கூறினேன்.



ஒவ்வொரு வியாழன் தோறும் எனது நண்பனுக்காக விரதமிருந்தேன். பாபா எனது விரதத்தை அங்கீகரியுங்கள் என வேண்டினேன். அவர் வரம் தந்துவிட்டார். மூன்றாவது வியாழக்கிழமையே, என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள் என்று வந்து சொன்னார்.



பாபா என் வாக்கைக் காப்பாற்றினார் என்பதைவிட, என் விரதத்தை ஏற்று அவனுக்கு வரம் தந்தார் என்பதே உண்மை. இதுபோன்று நிறைய அற்புதங்களை பாபா நிகழ்த்தியிருக்கிறார். இனியும் பகிர்ந்துகொள்வேன்.



ஜி விக்னேஸ்வரன்

 

 

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...