Thursday, July 3, 2014

தமிழகத்தில் சாயி அற்புதங்களுக்கான ஆலயம்!

sai29



நெல்லைமாவட்டம், வரகனூரைச் சேர்ந்த வேலுச்சாமிக்கு இப்போது வயது 67.  ‘‘இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தினார்னு சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அப்படிப்பட்ட அற்புதங்களை அனுபவிச்சவன் நான்’’ என்கிற வேலுச்சாமி, நெல்லை - கோவில்பட்டி சாலையில் வில்லிச்சேரி-2 எனும் கிராமத்தில் சாயி கோயிலைக் கட்டியெழுப்பியவர். ‘‘வேலை விஷயமா மும்பையில் 2009 வரை தங்கி இருந்தேன். அப்போ ஷீரடி கோயிலுக்குப் போறது பழக்கமாச்சு. அப்போதான் தென்னாட்டில் ஒரு கோயில் கட்ட பாபா எனக்கு உத்தரவிட்டார். அதே வருஷத்தில்தான் இந்தக் கோயிலைக் கட்டினேன். ஏராளமான பெண்களுக்கு இந்த பாபா குழந்தை வரம் கொடுத்திருக்கிறார். 39 வயதான ஒரு பெண்மணிக்கும் திருமணத்தை நடத்திக் கொடுத்திருக்கிறார். தினம் தினம் இப்படி இங்கு அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது’’ என்கிறார் அவர். ஆலயத்தொடர்புக்கு: 94427 23975

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...