Wednesday, July 2, 2014

தமிழகத்தில் சாயி பாபாவே கட்டிய கோயில்!

 Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b712



சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு சொந்தமானது வளசரவாக்கத்தில் உள்ள ‘விஸ்வரூப ஷீரடி சாயி மந்திர்’. திரைத்துறை வி.ஐ.பி என்றாலும் இங்கு இவரை சராசரி பக்தராகப் பார்க்க முடிகிறது.



‘‘அடிப்படையில் நான் ஐயப்ப பக்தன்தான். என் மனைவிதான் பாபா படத்தையும் சிலையையும் வீட்டில் அங்கங்க வச்சிருப்பாங்க. அதெல்லாம் ஒரு பாஸிடிவ் வைபரேஷனை உருவாக்கினதை நானே கண்கூடா உணர்ந்தேன். அப்புறம்தான் எனக்கு சொந்தமான இந்தத் தோட்டத்துல ஒரு பாபா சிலை வச்சு, சுத்தி சுவர் எழுப்பலாம்னு ஆரம்பிச்சேன். இவ்வளவு சிறப்பான கட்டிடமெல்லாம் யாரும் பிளான் பண்ணாதது. தானாவே அமைஞ்சது இந்த அற்புதம். இதை பாபாவே கட்டிக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்’’ என்பது ஏ.எம்.ரத்னத்தின் பணிவான ஸ்டேட்மென்ட்.

அப்படியே ஷீரடி கோயிலை படி எடுத்தது போன்ற அமைப்பும், ஒன்பது அடியில் பிரமாண்ட பாபா சிலையும் இந்த ஆலயத்தின் ஸ்பெஷல்கள். ஷீரடி போலவே இங்கும் நான்கு வேளை பூஜையுடன் பிரசாதமும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் இருக்கும் வரை தாராளமாய்த் திறந்திருக்கிறது. வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கின்றன.
ஆலயத்தொடர்புக்கு: 97102 82877

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...