Monday, March 4, 2013

விளம்பர யுக்தியா பக்தியா



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபாவை தொட்டுக் கும்பிட அனுமதிக்கிறீர்களே,  இது விளம்பரத்திற்காகவா? இல்லையெனில், சுவாமி விக்ரமூத்தைத் தொடுவது பாவம் என்பது தெரியாமல் செய்கிறீர்களா?
( கே.பி. சர்மா, சத்துவாச்சாரி வேலூர்)
 பாபாவுக்கு விளம்பரம் தேவையில்லை. நமக்கு சாயி தரிசனம் பத்திரிகை மூலம் போதிய அளவு விளம்பரம் இருக்கிறது. எனவே, புதிய விளம்பர நோக்கோடு இதைச் செய்வதில்லை.
மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றும்
அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
என்ற குறள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பக்தனின் அன்புக் குழந்தையான சாயியின் திருமேனியைத் தீண்டும் போதே பரவச உணர்வை பக்தன் அடைகிறான். அவரது வார்த்தைகளைப் படிக்கும்தோறும் கண்கள் நீரைச் சொறிகின்றன. அவற்றைக் கேட்கும்போதும் மயிர்க்கூச்செறிகிறார்கள்.
இப்படிப்பட்ட இன்பத்தைத் தடை செய்ய நான் விரும்புவதில்லை. பல இடங்களில் பெரிய ஆட்கள் வந்தால் தொடச் சொல்வதும், எளிய ஆட்களை தள்ளி நிற்க வைப்பதும் சாதாரணமாக நடக்கிறது. அந்த பாகுபாடுகள் இங்கே வேண்டாம் என்பதற்காக மட்டுமே அனைவரும் பாபாவைத் தொட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...