Tuesday, March 5, 2013

சாயி சத்சரித்திரம்

என் மகனிடம் சாயி சத்சரித்திரத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன். அவன் கேட்க மறுக்கிறான். இதை நிவர்த்தி செய்ய வழி கூறுங்கள்.
( பி. விவேகானந்தன், சேலம்)
பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் யாராக இருந்தாலும் ஞானிகளின் திவ்விய சரித்திரத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் எழும். இதைப் படிப்பது, கேட்பது,
பாராயணம் செய்வதன் மூலமாக நன்மை விளையும். மற்றபடி அப்புண்ணியம் வெளிப்பட இன்னும் காலமிருந்தாலும் இப்போதைக்குப் படிக்கமாட்டார்கள். ஆகவே, அதை
பாபாவின் பொறுப்பில் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்.

*********************************************************************************

ஆன்மீகத்தில் போலிகள் நுழைவதை எப்படித் தடுப்பது?
(பி.கே. ஹரிஹரன், கோவை)
போலியாகாமல் இருப்பதுதான்.  நாம் சரியாக இருந்தால் ஆன்மீகத்திற்கு ஒரு போலி குறைந்திருக்கிறான் என்று அர்த்தம். இப்படியே எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால்
போலிகள் இருக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...