Friday, March 1, 2013

பாபா காப்பாற்றுவார்





ஐந்தாண்டுகளாக தீவிரமான சாயி பக்தை.  எங்கள் குடும்பத்தில் பாபா அருளால் பல அற்புதங்கள் நடந்துள்ளன. என் கணவருக்கு ரயில்வேயில் வேலை கிடைக்க முயற்சித்ததோடு, பாபாவிடமும் வேண்டிக்கொண்டோம். ஒரு வியாழன் அன்று என் கணவர் வேலைக்கான உத்தரவுடன் வந்தார். என்னே பாபாவின் கருணை, ஒரு வியாழன் அன்று பெரம்பூரில் ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பணமுள்ள பர்ஸ் மற்றும் செல்போனை மறதியாக வங்கியிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.  
ஓட்டேரியில் என் அக்கா வீட்டிற்கு வந்து, என் அக்காவிற்க்கு பணம் கொடுக்க தேடிய போதுதான் பர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. அங்கிருந்து என் செல்லுக்கு போன் செய்தபோது முதலில் ரிங்க் போய் யாரும்
எடுக்கவில்லை. மறுபடியும் முயன்றபோது ஸ்விட்ச் ஆப் என்றது. ஆனாலும் நான் பாபா கைவிடமாட்டார் என்ற தீவிர நம்பிக்கையில் என் கணவரை போனில் அழைத்து வங்கிக்குப் போய் மேனேஜரைப் பார்த்துக்கேட்கச் சொன்னேன்.
என் கணவர் போய் கேட்டபோது, ஒரு அம்மா, ஒருவர் ஒரு பர்சை எடுத்ததை தான் பார்த்ததாகவும் அவரது அடையாளத்தையும் சொன்னார். அவர் வங்கிக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர் என்பதால் மேனேஜர் அவரை வரவழைத்துக் கேட்டார்.
முதலில் மறுத்த அவர், போலீசில் புகா ர் செய்வோம் என்று மேனேஜர் சொன்ன பிறகு, வீடு போய் வேறு ஒருவர் மூலம் பர்ஸ் மற்றும் போனை கொடுத்தனுப்பினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியாழன் அன்று வெந்நீர் வைக்க உதவுகிற எலக்ட்ரிக் ராடு எடுத்து தண்ணீரில் போட்டு வெந்நீர் வைத்தோம். அதை அப்படியே ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வெந்நீரை மட்டும் எடுத்துவிட்டேன். எட்டு மணி முதல் பத்து மணி வரை மின்சாரம் இல்லாததால் நாங்கள் ஸ்விட்சை அணைக்காதது தெரியவில்லை.
காஸ் சிலிண்டர் மேல் கோணி வைத்து அதன் மேல் இந்த எலக்டிரிக் ராடை வைத்திருந்தோம். கணவரை அலுவலகத்திற்கும், மகளை பள்ளிக்கும் அனுப்பி விட்டு எப்போதும் போல வீனஸ் மார்க்கெட்டில் உள்ள சாயி பக்தர் வீட்டுக்கு பஜனைக்கு சென்றேன்.
பன்னிரண்டே முக்கால் மணிக்கு ஆரத்தி நடக்கும்போது எனக்கு பக்கத்து வீட்டிலிருந்து போன் வந்தது. ஆரத்தி நேரம் என்பதால் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டேன். அவர்கள் என் கணவரை அழைத்து வீட்டிலிருந்து புகை வருவதாகவும் உடனடியாக வரும்படியும் தகவல் சொல்ல,உடனே என் கணவர் வீட்டிற்கு வந்தபோது தெருவில் அக்கம் பக்கத்தில் கூட்டமாக இருந்தது. கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்றதும் ஒரே புகை மண்டலமாக
இருந்தது.
ராடு தகதகவென்று ஒரே சிகப்பாகவும், கோணி புகைந்துகொண்டும் இருந்தது. உடனே ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, ராடை தண்ணீரில் எடுத்துப் போட்டு, கோணி, பாய் அனைத்தையும் நீரில் நன்றாக நனைத்தார் என் கணவர்.
காஸ் சிலிண்டர் ஆனில் இருந்தாலும் எந்த ஒரு விபரீதமும் நடக்காமல் பாபா என் வீட்டையும் கணவரையும் காப்பாற்றி அற்புதம் செய்தார்.
எனக்கு நல்ல அன்பான கணவரையும் நல்ல பிள்ளையையும் கொடுத்த பாபாவுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள். இது நடந்த அடுத்த வியாழன் அன்றே குடும்பத்துடன் சீரடி சென்று பாபாவுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்து நல்ல தரிசனமும் செய்துவந்தோம்.
பாபாவை முழு மனதுடன் நம்பினால் இம்மாதிரி ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி ரட்சிப்பார் என்பதை உறுதியாக உணர்கிறேன்.
-         சரஸ்வதி குமார்,
              செம்பியம்,
            பெரம்பூர்,
           சென்னை - 11

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...