Wednesday, June 4, 2014

பாபாவின் அறிவுரை

20142

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும். நானே அந்தரங்க ஆட்சியாளன். இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.

பிரபஞ்சத்தை நானே கட்டுப்படுத்துவன், ஆட்டுவிப்பவன், முக் குணங்களின் கூட்டுறவும் நானே.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவன். என் பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பமும் நெருங்காது,

மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.

இத்தகைய அழகான, விலை மதிப்பற்ற அமுத மொழிகளையும், அறிவுரைகளையும் நோக்கும் போதும், கேட்கும்போதும் நாம் சதா காலமும் சாயி சாயி என்று சொல்லி வந்தாலே எல்லா துன்பங்களும் பறந்தோடி மனம் அமைதியுறும்.

மேலும், எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். எங்கும் எதிலும் கடவுளின் அருட்காட்சியை காண முயலவேண்டும். நாம் முன்னேறுவதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகிவிடும். எந்த நிலையிலும் நாம் கடவுளிடம் உதவியைப் பெற கற்றுக்கொள்ள வேண்டும். அது பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

நமது தேவைகள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார். நமது பலவீனத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. எனவே, நமது கடவுளான, சத்குருவினை, நமக்கு எல்லாமுமான சாயிநாதனை மனதார பிரார்த்திப்போம். பிறந்த பயனை அடைவோம்.

சாயி கலியன்

பாபா ஒருபோதும் கைவிட மாட்டார்!

25125

சத்சரித்திரம் 13 வது அத்தியாயத்தில், பாபா,  ‘நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!’  என்று எழுதப்பட்டிருக்கிறது.

அப்படியானால் பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?

இந்த மூன்று விஷயங்களில் தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்கள்? இப்போது பார்க்கலாம்.

நன்றியுள்ள நினைப்பு

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும், செய்யப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உலகத்தை விடபெரியது. அதனால், வேறு எந்த வித நன்றியை மறந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம், செய் நன்றியை மறந்தவர்களுக்கு கதி மோட்சமே கிடையாது என்கிறது திருக்குறள்.

பாபா நம்மிடம் நன்றியுள்ள நினைப்பை எதிர்பார்க்கிறார் என்றால், ஏற்கனவே ஏதாவது நமக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? எதையும் செய்யாமல் எப்படி நன்றியை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கமுடியும்?

பீமாஜி பாடீல்என்றபக்தர்காசநோய்முற்றி, இரத்தவாந்திஎடுத்தார். அவரை, மருத்துவர்கள் கைவிட்டார்கள். மந்திரதந்திரங்கள்கைவிட்டன. குலதெய்வம், இஷ்டதெய்வம்உட்படஅவர் வணங்கியதெய்வங்கள்அனைத்தும்கைவிட்டன. வேறுவழியின்றிமரணத்தைஎதிர்நோக்கிக்காத்திருந்தார்.

உயிரைவிடும்போதுகூட, இன்னொருநாள் வாழக்கூடியவாய்ப்புகிடைக்காதாஎன்றுதான் நாம் அனைவருமேநினைப்போம். பீமாஜிபாடீலுக்கும் இந்தநினைப்புஇருந்தது. அதனால்தான் அவரும் எத்தனையோவழிகளில்முயன்று கொண்டிருந்தார்.

யாரோசொன்னார்கள்: ’சீரடியில்பாபாவிடம் சென்றால், உடனடியாககுணமடைந்துவிடுவாய் என்று!’  உடனடியாக, பாபாவின்பக்தரானசாமா நினைவுவந்து, அவருக்குக்கடிதம்எழுதி, அவர் மூலமாகவேசாயிதரிசனம்செய்தார்பீமாஜி.

பாபாவின்தரிசனமும், அவரிடம்பீமாஜி வைத்த வேண்டுதலும்உடனேபலித்தன. மரணத்திலிருந்துவிடுபெற்றார். நலமடைந்தார். பாபாசெய்த இந்தநன்மையைநன்றியோடுநினைத்து, அடிக்கடி சீரடிக்குவந்துசென்றார். அவர்தான்கொடி ஊர்வலம், சாயிசத்யவிரதபூஜை  போன்றவற்றை பாபாவுக்காகச்செய்தவர்.

பீமாஜிக்குசெய்ததுபோலநமக்குஏதாவது பாபாசெய்திருந்தால், நாமும்நன்றியோடுபாபாவை நினைக்கலாம். அவர்தான்நமக்கு எதையும்செய்யவில்லையே!  பிறகு எப்படிநினைப்பது? எனநீங்கள்நினைக்கலாம்.

உங்களுக்குகஷ்டகாலம்முடிந்துவிட்டது, புண்ணியம்சேர்ந்திருக்கிறது, பாவம்விலக்கப்பட்டுள்ளது. அதனால்நீங்கள்சாயிவழிபாட்டை செய்கிறீர்கள். இதைத்தெரிவிப்பதேநன்மையான விஷயம். கஷ்டகாலம்முடிந்தபிறகும்கஷ்டப்படுவானேன்? புண்ணியம்சேர்ந்தபிறகு அனைத்தும்நன்மையாகவேநடக்கப்போகிறது..நடக்கும்முன்வருத்தப்படுவானேன்..

நீங்கள்நினைக்கும்போதுதரிசனம்தருகிறார்..கேட்டதைகொடுத்து,தான்உங்களோடுஇருப்பதை உறுதிசெய்கிறார்.. சீரடிக்குக்கூப்பிடுகிறார்..பக்கத்தில்அவர்எழுந்தருளியிருக்கிறகோயிலுக்கு அழைக்கிறார்.. இதனாலெல்லாம்அவரை நன்றியோடுநினைக்கவேண்டும். இதைஅவர் எதிர்பார்க்கிறார்.

பெருங்களத்தூர்பிரார்த்தனைமையம்வந்து கோரிக்கைநிறைவேறிச்சென்றவர்களைஅதன் பின்னர் பல ஆண்டுகளாக  பார்க்கமுடியாது.. அடுத்தகஷ்டம்வரும் போதுதானாகவருவார்கள்.. தங்களைஅறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.. இப்படியிருக்கக்கூடாது..உனக்குநன்மைநடந்தஇடத்தைமறக்கலாமா? மறக்காமல்நினைக்கவேண்டும்எனபாபா எதிர்பார்க்கிறார்.

மாறாதநம்பிக்கை

நம்பிக்கைஇல்லாதவர்களுக்குகடவுள் அற்புதத்தைச்செய்வதேஇல்லை. நம்பிக்கையில்லாதவர்கள்கடவுளிடமிருந்துஅற்புதத்தைப்பெறஇயலுவதில்லைஎன்றும்கூறலாம். எவ்வளவு பெரியகஷ்டமாகஇருந்தாலும்கடவுள்மீது நம்பிக்கைவைக்கும்போது, அவர்நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத்தருகிறார்.

’பொறு, உன்னுடையகவலைகளைதூரஎறி, உன்னுடையதுன்பங்கள்ஒருமுடிவுக்குவந்துவிட்டன. ஒருவன்எவ்வளவுதான்நசுக்கப்பட்டவனாகஇருந்தாலும், இம்மசூதியில்கால்வைத்தவுடனேமகிழ்ச்சியின்பாதையில்செல்கிறான்.

இங்கேயுள்ளபக்கிரிமிகவும்அன்பானவர். இவர் இவ்வியாதியைக்குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும்எல்லோரையும்பாதுகாப்பார்..என்று, பக்தனுக்குபாபாதன்னம்பிக்கைதருவார்.

பலவேளைகளில்நமதுநம்பிக்கைஆட்டம் காணும்அளவுக்குப்பிரச்சினைகள்அதிகமாகும்.

நம்பிக்கையேபோய்விடும். வேறுஎங்காவதுபோய்பார்க்கலாமா? எனஎண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடிமனம்மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லதுவருவதுவரட்டும், பாபா தான்என்னோடுஇருக்கிறாரே! எனதைரியமாக இருக்கிறாயா? என்பதைஅவர்கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய்எனவேடிக்கைப்பார்ப்பார்.

ஒருமுறைஉன்னைகாப்பதாகச்சொல்லி விட்டு, பிறகுமறுப்பதற்குஅவர்மனிதன்அல்ல, கடவுள். அவர்சொன்னால்நடக்கும்.. சொன்னதை மாற்றமாட்டார்.

பின்னர்ஏன்எனக்குநடக்கமாட்டேன்என்கிறது? என்றால், இறுதிவரைநம்பிக்கையில்நிலைத்து நிற்பவனுக்குத்தான்வெற்றியைத்தருவார். நான் நம்புகிறேன்என்றுநீசொல்லலாம், ஆனால், கடைசிவரைநீநம்பமாட்டாய்என்பதுகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்ஆகியவற்றை நன்றாகஅறிந்தபாபாவுக்குத்தெரியாதா?

கிணற்றில்போட்டகல்மாதிரி.. அவர்மீது பாரத்தைப்போட்டுவிட்டு, பாதத்தைப்பிடித்துக் கொண்டுஉட்கார்ந்துவிட்டால்போதும்.. நாம் கேட்பதைஅப்படியேசெய்யாமல், நமக்குஎது நன்மையோஅதைச்செய்வார்.. இதைச்செய்யும் முன்புநீஅவரைமுழுமையாகநம்பவேண்டும் எனஎதிர்பார்க்கிறார்.

இதற்குஉன்னிடம்தைரியம்இருக்கவேண்டும்.. சோதனைவரும்போதுவேதனைப்பட்டாலும், நம்பிக்கையைஇழக்காமல்சகிக்கவேண்டும்.

முழுமையானபக்தி

நிறையபேர், நான்பாபாவின்பக்தன்என்று சொல்லிக்கொள்வார்கள். பக்தனுக்குஉரிய இலக்கணம், அன்புடனும், ஆசையுடனும்அவரை நேசிக்கவேண்டும். இதுதான்பிரேமைஎனப்படுகிறது. எல்லாவற்றையும்நேசிக்கிறேன்,

உன்னையும்நேசிக்கிறேன்என்றால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்.. நீஎன்னைநேசி, நான் உனக்குள்ளஅனைத்தையும்நேசிக்கிறேன்என்பார்.

அன்புஎன்பதுஎதையும்எதிர்பாராமல்வருவது, தன்னைத்தியாகம்செய்வது, தனக்குக்கிடைப்பதைஒளிக்காமல்தருவது, எப்போதும்தன் அன்புக்குரியவர்நினைவாகவேஇருப்பது.. அவரை நினைத்தவுடனேகண்களில்நீர்வைப்பது..சுயநலமில்லாமல்இருப்பது..இதெல்லாம்தான் அன்புஎனப்படுகிறது..

பாபாமீதுஇப்படியாஅன்புசெலுத்துகிறோம்?

பாபாஎனக்குஅதைக்கொடு.. இதைக்கொடு எனக்கேட்டு, அதைப்பெறுவதற்காகஅவர்மீது நம்பிக்கைவைக்கிறோம்.. நம்பிக்கைவைத்து தனக்குகிடைக்கும்எனக்காத்திருக்கிறவன் விசுவாசி.. அவன்பக்தன்கிடையாது. நாமெல்லோரும்விசுவாசியாகஇருக்கிறோமே தவிர, பக்தராகஇருப்பதில்லை.

ஆனால், நம்மைபக்தராகமாற்றுவதற்குபாபா சொன்னஉபாயம், ”நீஎப்போதும்சாயிசாயிஎன்று சொல்லிக்கொண்டிரு. எனக்குபலவிதமான வழிபாடுகள்கூடவேண்டாம், முழுமையானபக்தி மட்டும்செய்.. நான்உன்னோடுஇருந்து, உனது துன்பம்எத்தகையதாகஇருந்தாலும்சரி..அதிலிருந்துஉன்னைதூக்கிக்கொண்டுபோய் காப்பாற்றுவேன்..”

இதுவரைவிசுவாசியாக ! அவரைநம்புகிறவராக இருக்கிறநீங்கள், எல்லாம்அவரால்நடக்கிறது என்கிறபோது, எனக்கும்அவரால்நல்லதாகவே எல்லாம்நடக்கும்என்பதைத்தெளிவாகஅறிந்து, கவலைப்படாமல், தைரியமாகசாயிசாயிஎன்று சொல்லிக்கொண்டுபக்திசெய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில்ஏற்படுகிறமாற்றத்தைநீங்கள்வெகு விரைவில் உணர்வீர்கள்.

 

ஜெய் சாய்ராம்…..சரணம் சாய்ராம்.

Tuesday, June 3, 2014

மாறாத நம்பிக்கை வை! முழுமையாக நம்பிக்கை வை!

20144



சத்சரித்திரம் 13 வது அத்தியாயத்தில், பாபா,  ‘நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!’  என்று எழுதப்பட்டிருக்கிறது.



அப்படியானால் பாபா  நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?



இந்த மூன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்கள்? இப்போது பார்க்கலாம்.



நன்றியுள்ளநினைப்பு



காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும், செய்யப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உலகத்தை விட பெரியது. அதனால், வேறு எந்த வித நன்றியை மறந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம், செய்நன்றியை மறந்தவர்களுக்கு கதி மோட்சமே கிடையாது என்கிறது திருக்குறள்.



பாபா நம்மிடம் நன்றியுள்ள நினைப்பை எதிர்பார்க்கிறார் என்றால், ஏற்கனவே ஏதாவது நமக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? எதையும் செய்யாமல் எப்படி நன்றியை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்க முடியும்?



பீமாஜி பாடீல் என்ற பக்தர் காசநோய் முற்றி, இரத்த வாந்தி எடுத்தார். அவரை, மருத்துவர்கள் கைவிட்டார்கள். மந்திர தந்திரங்கள் கைவிட்டன. குலதெய்வம், இஷ்டதெய்வம் உட்பட அவர் வணங்கிய தெய்வங்கள் அனைத்தும் கைவிட்டன. வேறு வழியின்றி மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.



உயிரை விடும் போது கூட, இன்னொரு நாள் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் நாம் அனைவருமே நினைப்போம். பீமாஜி பாடீலுக்கும் இந்த நினைப்பு இருந்தது. அதனால்தான் அவரும் எத்தனையோ வழிகளில் முயன்று கொண்டிருந்தார்.



யாரோ சொன்னார்கள்: ’சீரடியில் பாபாவிடம் சென்றால், உடனடியாக குணமடைந்து விடுவாய் என்று!’  உடனடியாக, பாபாவின் பக்தரான சாமா நினைவு வந்து, அவருக்குக் கடிதம் எழுதி, அவர் மூலமாகவே சாயிதரிசனம் செய்தார் பீமாஜி.



பாபாவின் தரிசனமும், அவரிடம் பீமாஜி வைத்த வேண்டுதலும் உடனே பலித்தன. மரணத்திலிருந்து விடுபெற்றார். நலமடைந்தார். பாபா செய்த இந்த நன்மையை நன்றியோடு நினைத்து, அடிக்கடி சீரடிக்கு வந்து சென்றார். அவர்தான் கொடி ஊர்வலம், சாயி சத்ய விரத பூஜை  போன்றவற்றை பாபாவுக்காகச் செய்தவர்.



பீமாஜிக்கு செய்தது போல நமக்கு ஏதாவது பாபா செய்திருந்தால், நாமும் நன்றியோடு பாபாவை நினைக்கலாம். அவர்தான் நமக்கு எதையும் செய்யவில்லையே!  பிறகு எப்படி நினைப்பது? என நீங்கள் நினைக்கலாம்.



உங்களுக்கு கஷ்டகாலம் முடிந்துவிட்டது, புண்ணியம் சேர்ந்திருக்கிறது, பாவம் விலக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் சாயி வழிபாட்டை செய்கிறீர்கள். இதைத் தெரிவிப்பதே நன்மையான விஷயம். கஷ்டகாலம் முடிந்த பிறகும் கஷ்டப்படுவானேன்? புண்ணியம் சேர்ந்த பிறகு அனைத்தும் நன்மையாகவே நடக்கப்போகிறது..நடக்கும் முன் வருத்தப்படுவானேன்..



நீங்கள் நினைக்கும் போது தரிசனம் தருகிறார்..கேட்டதை கொடுத்து, தான் உங்களோடு இருப்பதை உறுதி செய்கிறார்.. சீரடிக்குக் கூப்பிடுகிறார்..பக்கத்தில் அவர் எழுந்தருளியிருக்கிற கோயிலுக்கு அழைக்கிறார்.. இதனாலெல்லாம் அவரை நன்றியோடு நினைக்க வேண்டும். இதை அவர் எதிர்பார்க்கிறார்.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து கோரிக்கை நிறைவேறிச் சென்றவர்களை அதன் பின்னர் பல ஆண்டுகளாக  பார்க்க முடியாது.. அடுத்த கஷ்டம் வரும் போது தானாக வருவார்கள்.. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.. இப்படியிருக்கக்கூடாது..உனக்கு நன்மை நடந்த இடத்தை மறக்கலாமா? மறக்காமல் நினைக்க வேண்டும் என பாபா எதிர்பார்க்கிறார்.



மாறாதநம்பிக்கை



நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்கள் கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவர் நமக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறார்.



’பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.



இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார்..என்று, பக்தனுக்கு பாபா தன்னம்பிக்கை தருவார்.



பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சினைகள் அதிகமாகும்.



நம்பிக்கையே போய் விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத் தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்ப்பார்.



ஒரு முறை உன்னை காப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு மறுப்பதற்கு அவர் மனிதன் அல்ல, கடவுள். அவர் சொன்னால் நடக்கும்.. சொன்னதை மாற்றமாட்டார்.



பின்னர் ஏன் எனக்கு நடக்க மாட்டேன் என்கிறது? என்றால், இறுதி வரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பவனுக்குத்தான் வெற்றியைத் தருவார். நான் நம்புகிறேன் என்று நீ சொல்லலாம், ஆனால், கடைசி வரை நீ நம்பமாட்டாய் என்பது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நன்றாக அறிந்த பாபாவுக்குத் தெரியாதா?



கிணற்றில் போட்ட கல் மாதிரி.. அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, பாதத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டால் போதும்.. நாம் கேட்பதை அப்படியே செய்யாமல், நமக்கு எது நன்மையோ அதைச் செய்வார்.. இதைச் செய்யும் முன்பு நீ அவரை முழுமையாக நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறார்.



இதற்கு உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.. சோதனை வரும் போது வேதனைப்பட்டாலும், நம்பிக்கையை இழக்காமல் சகிக்கவேண்டும்.



முழுமையானபக்தி



நிறைய பேர், நான் பாபாவின் பக்தன் என்று சொல்லிக்கொள்வார்கள். பக்தனுக்கு உ ரிய இலக்கணம், அன்புடனும், ஆசையுடனும் அவரை நேசிக்க வேண்டும். இதுதான் பிரேமை எனப்படுகிறது. எல்லாவற்றையும் நேசிக்கிறேன்,



உன்னையும் நேசிக்கிறேன் என்றால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்.. நீ என்னை நேசி, நான் உனக்குள்ள அனைத்தையும் நேசிக்கிறேன் என்பார்.



baba



அன்பு என்பது எதையும் எதிர்பாராமல் வருவது, தன்னைத் தியாகம் செய்வது, தனக்குக் கிடைப்பதை ஒளிக்காமல் தருவது, எப்போதும் தன் அன்புக்குரியவர் நினைவாகவே இருப்பது.. அவரை நினைத்தவுடனே கண்களில் நீர் வைப்பது..சுயநலமில்லாமல் இருப்பது..இதெல்லாம் தான் அன்பு எனப்படுகிறது..



பாபா மீது இப்படியாஅன்பு செலுத்துகிறோம்?



பாபா எனக்கு அதைக் கொடு.. இதைக் கொடு எனக் கேட்டு, அதைப் பெறுவதற்காகஅவர் மீது நம்பிக்கை வைக்கிறோம்.. நம்பிக்கை வைத்து தனக்கு கிடைக்கும் எனக்காத்திருக்கிறவன் விசுவாசி.. அவன் பக்தன் கிடையாது. நாமெல்லோரும் விசுவாசியாக இருக்கிறோமே தவிர, பக்தராக இருப்பதில்லை.



ஆனால், நம்மை பக்தராக மாற்றுவதற்கு பாபா சொன்ன உபாயம், ”நீ எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக் கொண்டிரு. எனக்கு பல விதமான வழிபாடுகள் கூட வேண்டாம், முழுமையான பக்தி மட்டும் செய்.. நான் உன்னோடு இருந்து, உனது துன்பம் எத்தகையதாக இருந்தாலும் சரி..அதிலிருந்து உன்னை தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றுவேன்..”



இதுவரை விசுவாசியாக ! அவரை நம்புகிறவராக இருக்கிற நீங்கள், எல்லாம் அவரால் நடக்கிறது என்கிற போது, எனக்கும் அவரால் நல்லதாகவே எல்லாம் நடக்கும் என்பதைத் தெளிவாக அறிந்து, கவலைப்படாமல், தைரியமாக சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு பக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றத்தை நீங்கள் வெகு விரைவில் உணர்வீர்கள்.



 



ஜெய் சாய்ராம்…..சரணம் சாய்ராம்.

சாயி சாயி என்றே சொல்!

20144

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் அத்தியாயம் மூன்றை கருத்தூன்றிப் படித்தோமானால், பாபாவின் அமுத மொழிகள் மிகவும் சுவையானதாகவும், பயனுள்ளதாகவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்திருப்பதை அறியலாம்.

இதோ அமுத மொழிகளில் சில..

எவனொருவன் பாபாவின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கிறானோ அவனது ஆசைகள் பூர்த்தியாகின்றன.

பாபாவின் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடினால் எல்லா திக்குகளிலும் பாபா சூழ்ந்திருப்பார்.

நம்பிக்கையுடன் அவரது லீலைகளை இசைத்தால் எல்லையற்ற பேரின்பம் பெற்று திருப்தியடைவான்.

எவன் பாபாவிடம் பூரண சரணாகதி, விசுவாசத்துடன் வணங்குதலை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் செய்கின்றானோ அவன் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாவான்.

பாபாவின் கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். கதைகளைக் கேட்டு கிரகித்துக் கொண்டால், அடியார்களின் பெருமையும் அகம்பாவமும் அகன்றுவிடும், மனம் அமைதிப்படும்.

இதயம் நிறைந்த பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சி யுடன் ஒன்றாகிவிடும்.

சாயி சாயி என்று சாதாரணமாக சொல்லி வந்தாலே, பேசுவதிலும் கேட்பதிலும் உள்ள பாவங்கள் தீர்ந்துவிடும்.

Monday, June 2, 2014

தங்கக் கூண்டு

Castle-gold



எவ்வளவு துர்நாற்றம் அடித்தாலும், எத்தனை சிறிய நீர் நிலையாக இருந்தாலும், ஒரு பன்றிக்கு அதுவே சொர்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ? 



 ஜீவாத்மாவுக்கும் கிளிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு; இரண்டுமே சிறைப்பட்டிருக்கின்றன; ஒன்று மனித உட­ல்; மற்றொன்று கூண்டில். சுதந்திரத்தை இழந்த போதிலும் கிளிக்குக் கூண்டே சுவர்க்கம்! 



சுதந்திரத்தின் குதூகலம் அறியாத கிணற்றுத் தவளையைப் போல், கிளி தன் கூண்டிலேயே எல்லா சுகங்களையும் காண்கிறது; ஆசைகள் நிரம்பிய ஜீவாத்மாவும் அவ்வாறே. 



ஆஹா, என்னுடைய கூண்டு எவ்வளவு அழகாக இருக்கிறது!  தங்கத்தாலான குறுக்குத் தண்டி­லிருந்து இங்குமங்கும் சிறகடிப்பது எவ்வளவு ஆனந்தம்!  தலைகீழாகத் தொங்கினாலும் கால் நழுவி விழுந்து விடுவோமோ என்ற பயம் இல்லையே!



இக்கூண்டிலி­ருந்து வெளியேறினால், என்னுடைய சுகங்களனைத்தையும் இழப்பேன். அது, தன்னுடைய சுகத்தைத்தானே அழித்துக் கொள்ளும் செய்கையாகி விடும்.  மாதுளம் முத்துகளோ சுவையான மிளகாய்ப்பழமோ கிடைக்காது. 



ஆயினும், நேரம் வரும் போது, அன்பாகத் தட்டிக் கொடுத்துக் கண்களுக்கு ஞானமெனும் மையை இட்டு சுதந்திரத்தின் உல்லாசத்தை உணரவைக்கும் அற்புதம் நிகழ்கிறது. 



அன்பான தட்டு, (கையால் தொட்டு குரு அளிக்கும் தீட்சை) கிளியின் இயல்பான சுதந்திர உணர்வை எழுப்பி விடுவதால் கிளி பறந்தோடி விடுகிறது. திறந்த கண்ணோட்டத்துடன் சுதந்திரமாக வானமெங்கும் சிறகடித்து சந்தோஷமாகப் பறக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்? 



இவ்வுலகமே கிளியை வா, வா என்றழைக்கிறது. பழத்தோப்புகளில் மாதுளையையும் கொய்யாவையும் வயிறு புடைக்கும் வரை தின்னலாம். எல்லையற்ற வானில் எங்கும் பறந்து திரியலாம். புதிதாகக் கண்டெடுத்த சுதந்திரத்தை அமோகமாக அனுபவிக்கலாம். 



ஜீவாத்மாவின் நிலையும் இதுவே.  இறைவனின் கருணையால் ஒரு குரு கிடைத்தவுடன் பந்தங்களி­ருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் சுதந்திரத்தின் முக்தியையும் அனுபவிக்கிறான். 

Sunday, June 1, 2014

சாயி சத்சரித்திரத்திலிருந்து

 baba2



 'நான்இறைவன்’  என்று அவர் ஒரு பொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை’  என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை’  என்பவற்றைத்தான்  சொல்லி­க் கொண்டிருந்தார்.  'அல்லாமா­க், அல்லாமா­க்” (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தார். 



 எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடை போட முடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. 

ஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது. 



 பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும். 

நான் இறைவனுடைய அடிமை!

 25124



 'நான்இறைவன்’  என்று அவர் ஒரு பொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை’  என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை’  என்பவற்றைத்தான்  சொல்லி­க் கொண்டிருந்தார்.  'அல்லாமா­க், அல்லாமா­க்” (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தார். 



 எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடை போட முடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. 

ஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது. 



 பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும். 

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...