Tuesday, June 3, 2014

சாயி சாயி என்றே சொல்!

20144

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் அத்தியாயம் மூன்றை கருத்தூன்றிப் படித்தோமானால், பாபாவின் அமுத மொழிகள் மிகவும் சுவையானதாகவும், பயனுள்ளதாகவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்திருப்பதை அறியலாம்.

இதோ அமுத மொழிகளில் சில..

எவனொருவன் பாபாவின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கிறானோ அவனது ஆசைகள் பூர்த்தியாகின்றன.

பாபாவின் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடினால் எல்லா திக்குகளிலும் பாபா சூழ்ந்திருப்பார்.

நம்பிக்கையுடன் அவரது லீலைகளை இசைத்தால் எல்லையற்ற பேரின்பம் பெற்று திருப்தியடைவான்.

எவன் பாபாவிடம் பூரண சரணாகதி, விசுவாசத்துடன் வணங்குதலை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் செய்கின்றானோ அவன் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாவான்.

பாபாவின் கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். கதைகளைக் கேட்டு கிரகித்துக் கொண்டால், அடியார்களின் பெருமையும் அகம்பாவமும் அகன்றுவிடும், மனம் அமைதிப்படும்.

இதயம் நிறைந்த பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சி யுடன் ஒன்றாகிவிடும்.

சாயி சாயி என்று சாதாரணமாக சொல்லி வந்தாலே, பேசுவதிலும் கேட்பதிலும் உள்ள பாவங்கள் தீர்ந்துவிடும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...