Wednesday, July 10, 2013

உன்னைக் காக்கவே நான் உடைந்து போகிறேன்







உங்களுக்கு எப்போதும் நன்மை உண்டாகட்டும்! நீங்கள் நல்லவர்கள், உண்மைக்காகப்பாடுபடுகிறவர்கள். இல்லாவிட்டால் உங்களை நமது சாயி தேவன் பிடித்திருக்கமாட்டார்.
எனது பிரார்த்தனை, நல்லவர்கள் கைகளில், தேவைப்படுகிறவர்களின் கைகளில் மட்டும் இந்த வலைப்பக்கத்தைக் காட்டி அவர்களுக்கு ஆறுதல் சொல். கெட்டதைத் தேடுகிறவர்களுக்கும், கெடுபலன்கள் காத்திருக்கிறவர்கள் கண்களுக்கும் இதை மறைத்து வை என்று வேண்டிக்கொள்வேன்.
உங்களது நல்ல காலம் இந்தப் வலைப்பக்கம்  உங்கள் கண்களுக்கு கிடைத்து இருக்கிறது.
சத்சரித்திரம் கூறுகிறது் பாபா எப்போதும் பக்தர்களின் மீது கருணை உள்ளவராகவே இருக்கிறார் என்று. உண்மையாகவே பாபா மிகவும் கருணை மனம் உள்ளவர்.
அவர் பல முறை உங்களுக்குத் தரிசனம் தந்து தைரியப்படுத்தியிருக்கிறார் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தால் இந்த உண்மை தெரியும்.
சில சமயம் அவர் கனவில் வருவார், சில நேரங்களில் யாரோ ஒரு மூன்றாவது மனிதர் போல் வருவார். வேறு சில நேரங்களில் நாய், பூனை, பசு போன்ற விலங்காக வருவார். எல்லா நேரத்திலும் நமக்கு நேரவிருக்கும் தீங்குகளை தாம் ஏற்றுக்கொண்டு நன்மையை நமக்குத் தருவார்.
பூஜை செய்யும்போதோ, வைத்திருக்கும்போதோ, பாபா விக்ரகமும் உடைந்து விடும். நாம் பயந்து விடுவோம். இதன் உண்மைக் காரணம், நமக்கு வரவிருக்கும் விபத்தை தான் ஏற்றுக் கொள்வதால் இப்படி உடைந்துவிடுகிறார் என்பதுதான்.
ஆபத்தோ, விபத்தோ நேரிட இருக்கிறது என்றால், அதைத் தடுப்பதற்காக முதலில் வீட்டிலுள்ள பாபா விக்ரகமும் உடைந்துவிடும். போட்டோவாக இருந்தால் எரிந்துவிடும். இது பொதுவாக நடக்கிற நிகழ்ச்சி. இப்படி நடந்தால் பயப்படவேண்டாம். நம் ஆபத்து விலகிவிட்டது என்பதை அறியலாம்.
இதைப்போலவே, ஒவ்வொரு நிகழ்விலும் அவர் நம்மோடு இருப்பதையும், நமக்கு உதவுவதையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். இதைத் தெரிந்து கொண்டு, சாயி பக்தர்கள் எப்போதும் தைரியமாக இருக்கவேண்டும்.

சோதனை எல்லோருக்கும் வரும், அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் பாபா, தன் பக்தரை அந்த சோதனையான நேரத்திலும் மிக சுலபமாகக் காப்பாற்றிவிடுவார்.
எப்படியெனில், தேர்வு கடினமாக இருக்கிறது. கேள்வி எதுவும் தெரியவில்லை எனத் தவிக்கும் மாணவரிடம், புத்தகத்தை தந்து, கேள்விக்கான பதிலையும் எடுத்துக்கொடுத்து எழுதச் சொன்னால் எப்படியிருக்குமோ அப்படித் தான் அவரது செயல் இருக்கும்.
எல்லா கஷ்டமும் ஒரு நாள் முடிந்துவிடும் என்பதால் எந்த சூழலிலும் தவறான வழிக்குப்போகவேண்டாம். இதை நமது பாபா விரும்புவதில்லை. நேர் வழியில் செல்லுங்கள். அங்கே பாபா நிறைய வைத்துக்கொண்டு காத்திருப்பார் என்பது அனுபவ உண்மை.
உங்கள் ஆசியுடன் தடைகள் அனைத்தையும் தாண்டி இதோ உங்களை இந்தப் பக்கம் மூலம் தரிசிக்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்த பாபாவுக்கு நன்றி. பாபாவின் லீலைகள் எழுதப்படுவதற்காக உங்களுக்கு நிச்சயம் அற்புதங்கள் நடக்கும். நீங்கள் இதில் அதை எழுதுவீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...