Friday, July 5, 2013

அன்னதானமே பிரதானம்


மைலாப்பூர் பாபா கோயில்


டாக்டர் கிருபளானியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, உலகிலேயே எங்குமில்லாத சிறப்பு நம் மைலாப்பூர் பாபா கோயிலுக்கு இருக்கிறது. என்ன தெரியுமா? என்றார்.
வேறு எந்தக் கோயிலிலும் அன்னதானம் செய்வதற்கு ஒரு வரையறை உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமே அன்னதானம் செய்யப்படுகிறது. மைலாப்பூர் பாபா ஆலயத்தில் இத்தகைய வரைமுறைகள் எதுவும் கிடையாது.
எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வயிறார இருவகை உணவு அளிக்கிறார்கள். இது போன்று அக்கோயிலில் முக்கியத்துவம் தரப்படுவதால்தான் அது உயர்ந்து வளர்ந்துகொண்டே போகிறது என்றார். இதற்கான ஏற்பாடுகளை பாபாவே செய்கிறார் என்று கூறினார்.
உண்மையிலேயே மைலாப்பூர் பாபா ஆலயத்தில் வழங்கப்படுவதைப் போன்ற அன்னதானம் வேறு எங்கும் அளிக்கப்படுவதில்லை.
ஒருமுறை மைலாப்பூரிலுள்ள அகில இந்திய சாயி சமாஜத்தலைவர் தங்கராஜ்  அவர்களிடம் பேசும் போது சொன்னார், எல்லோரும் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு வீணாகத்தூக்கி எறிகிறார்கள் என்று சிலர் குறை சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது, இவ்வாறு வீசப்படுகிற உணவுகளை நாய், பன்றி, மாடுகள், , எறும்பு உட்பட பல உயிர்களும் எடுத்து சாப்பிடுகின்றன. இவற்றுக்கும் பாபா இங்கிருந்து உணவளிக்கிறார் என்பதே உண்மை என்றார்.
அந்தளவுக்கு சாயி சமாஜ நிர்வாகத்தினர், அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தந்து பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறார்கள். இவ்வாறு அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தருவதால்தான் மைலாப்பூர் பாபா ஆலயம் விண்ணோக்கி வளர்ந்து போகிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...