Monday, June 11, 2018

வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய்



என் அன்பு குழந்தையே, உன் மனமானது அன்னப் பறவையாய் இருக்கின்றது. அது தான் தண்ணீரையும் பாலையும் தனியே பிரித்துக் குடிக்கும். அதே போலவே தான் உன் வாழ்க்கையை நீ பார்க்கின்றாய் . துன்பத்தையும், இன்பத்தையும் பார்க்கின்றாய். ஆனால், உனக்கு தெரியுமோ, துன்பத்தில் உனக்கு நிச்சயமாக இன்பம், சிறிய அளவு பங்கு இருக்கும். அதே நேரத்தில் இன்பத்திலும் துன்பம் தோன்றும் இரண்டுமே பிரியாது. அவற்றை நீ புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை என்னும் கடலில் நீ சுலபமாக நீந்தி அதற்கான அர்த்தத்தை பெறலாம் அதற்கு பதிலாக நீ கடல் என்றே தெரியாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படி நெறிப்படும்? வாழ்க்கை என்பது நெறியுடன் வாழ்வது தான் அர்த்தமுள்ள உண்மையான வாழ்க்கை உனக்கு கிடைத்த இந்த அனுபவம் என்னும் பொக்கிஷ பெட்டகம் மிகப் பெரிய பரிசு. அதை உனக்கு நான் அளித்துள்ளேன்.  உன் வாழ்க்கை என்பது சமுத்திரம். அதனால் சமுத்திரத்தை உன் சாய்அப்பா உனக்காக உருவாக்கியுள்ளேன். அதில் நீ வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...