Monday, June 4, 2018

உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!

கீரப்பாக்கம் சாயி பேராலய கும்பாபிஷேகம்


என் அன்பு குழந்தையே உன்னை நினைத்து நான் கவலைப்படுவதா அல்லது வருத்தப்படுவதாஉன் மனதில் இருக்கும் சங்கடம் ஒன்றா இரண்டா? அதை பட்டியல் இடலாம்உன் மனதிற்கு வரும் துன்பங்கள்கஷ்டங்கள் ஒரு பக்கம்மேலும் நீயாய் நினைத்து மனதில் அதை இறுத்திக் கொண்டு ஏற்படுத்திய கஷ்டங்களும், மன வலியும் ஒரு பக்கத்தில் உருவாக்கியுள்ளாய்நமது கஷ்டங்களையும் துன்பத்தையும் கண்ணில் விழுந்த தூசி போல, அதை நீ கசக்கினால் தான் உனக்கு கண்ணில் வலி ஏற்படும்அதை போலவே தான் நீ உன் துன்பத்தை மட்டுமே நினைப்பதால் தான் இன்று வரை நான் உனக்கு அளிக்கும் விஷயங்களை உன்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைநீ என்னைப் பார்க்கும் போது கண்ணில் ஆனந்தமும்மனதில் வேதனையும் தெரியுதேஎன் பிள்ளையான நீ வேதனை கொள்ளலாமா உனக்கு நான் இருக்கிறேன்உன் மனம் என்பது குழந்தையின் மனதைப்போல், பளிங்கு  போல் பளிச்சென்று தெளிவாக உள்ளது ஆனால் நீயோ அதை உணராமல் தேவையில்லாத விஷயங்களை நினைத்து புலம்பி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாய் இவ்வுலகில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை சிலர் தெரிந்து தெரியாததுமாய் செய்கிறார்கள்அவர்களுக்கான சூழ்நிலை நேரம் மற்றும் அவர்களின் வினையின் பயனால் செய்த தவறுக்கு மனவலியும் வேதனையும் அடைகிறார்கள்உன் மனதில் ஏற்படும் அனைத்திற்கும் பொறுப்பு நானேஉன் தவறை நினைத்து வருந்துகிறாய்திருத்திக்  கொள்ளவும் நினைக்கிறாய்அது அப்படியே நடக்கும்உன்னை நல்வழிப்படுத்தவே ஜென்ம ஜென்மமாய் உன் பின்தொடர்ந்து வருகிறேன். அதை நிறைவேற்றியும் தருவேன்அதனால் நீ கவலைப்படாதே, எதற்காக பயப்படுகிறாய் நான் இருக்கையில்உன்னை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்வாழ்க்கையில் உன் துன்பத்தை காற்றாடி போலவே தான் காற்று எந்த திசையில் இருக்கிறதோ, அந்த திசையில் தான் அது பறக்கும் அதை வேறு பக்கம் திசை திருப்ப நினைத்தால் அது பறக்காதுஅது போல் தான் உன் வாழ்க்கையும் உன் வாழ்க்கை என்னும் காற்றில் துன்பமும்சந்தோஷமும் இரண்டும் ஒரே அளவு தான் சந்தோஷத்தை ஆனந்தமாய் எடுத்து ரசிக்கிறாய்கஷ்டத்தை கண்டு ஓடுகிறாய். அதனால் தான் அது உன்னை துயரத்தில் துரத்துகிறது இரண்டுமே ஓரே அளவில் நீ நினைக்கவும் கடந்து போவதற்கும் பழகிவிட்டால் உன் வாழ்க்கை சோலைவனமாய் இருக்கும் நீ எதற்கும் பயப்படாதே யாரும் துணை இல்லை என்று நினைக்காதே, நீ நிச்சயம் வெற்றி காண்பாய் மிக விரைவில் உயர்ந்து நிற்பாய் வாழ்க்கையில், உனக்கு தாயாக தந்தையாக நான் இருக்கிறேன்உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...