Thursday, June 7, 2018

உன்னுடன் நான் இருக்கிறேன்.




மனம் தடுமாறும், முன்னே செல்ல நான்கு படிகள் ஏறினால், பின்னே இழுக்க உன் எண்ணங்கள் உன்னை குழப்பும்.  மனதை ஒருமுகப்படுத்து. உன் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக சீர் ஆகும். உன் எண்ணங்கள் புதுமை அடையும். உன் வாழ்வில் மெல்ல மெல்ல சூரியனின் வெளிச்சம்  உதயமாகும்.

உன் எண்ணங்கள் நேர்மறையாய், ஆனால் உனக்கான நிம்மதி, சந்தோஷம் பிறக்கும். உலகத்தில் என்ன மாறினாலும், நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன். உன்னில்,  எப்போதும் நான் இருப்பேன். உன் அன்பின் ஆழத்தையும், உன் பக்தியின் தூய்மையையும், உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவன் ஆகிய நான் அறிவே.

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இதயத்தின் கருவறையில் சுமந்து  அரவணைப்பேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...