Tuesday, June 27, 2017

உதி விதியை மாற்றும்


துகாராம் சீரடியில்  விவசாயம் செய்து வந்தார். 1912ம் ஆண்டு சீரடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு அங்கே வேலை கிடைக்கும் எனப் புறப்பட்டார்.
கோபர்கான் சாலையில் செல்லும்போது, பாபா அவரது கழுத்தில் தன் கையைப்போட்டு போகாதே என்றார். ஆனால் துகாராம்பாபாவின் வார்த்தையினை கண்டு கொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். 
வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் நிற்கவே இல்லை. தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது அவரே சொந்தக்காரர்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.
பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார். காய்ச்சல் நிற்கவில்லை. 45 நாட்கள் தொடர்ந்தது. உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்பச் சொன்னார். உதியை இட்டுக் கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...