என் அன்பு குழந்தையே உன் மனக்குமுறல், உன் அழுகை இவை அனைத்தும், என் காதில் எப்படி விழாமல் இருக்கும். அந்த நேரத்தில் உன் மனதில் தோன்றிய வலி, எனக்கு என்
பிள்ளையான உன்னை நினைத்து பயம் ஏற்படுகிறது. என் பிள்ளையின் வாழ்க்கையை
இப்படி வலி உள்ளதாய், மாயை ஆட்டி வைத்து, எதற்க்காக சிரிக்கின்றோம், எதற்காக அழுகின்றோம் என்பதை கூட உணராமல், போகிற நேரத்தில், வாழும் கட்டாயத்தில் என்கின்ற உணர்வு, என் பிள்ளைக்கு இப்போதே
தோன்றுகிறதே என்று என் மனம் அழுகிறது. வாழ்க்கையில் உள்ள
உயிரோட்டத்தை என் பிள்ளை கடக்கும் தருவாயில் மனதில் கஷ்டங்ளை சுமந்து ஒவ்வொரு நாளையும் இப்படி
கடக்கின்றதை பார்த்து, என் கண்ணில் வேதனையால் கண்ணீர் கொட்டுகிறது. உனக்கான பக்கபலமாய்
நான் இருக்கிறேன், சில நேரங்கள் நான் உன் சாய் அப்பா மௌனம் காக்கின்றேன். அதற்குக்காரணம் என் மௌனம் உனக்கு சில
விஷயங்களை புரிய வைக்கும். அது உன் தவறுகளைச் சரி செய்யவும் உதவும். மனித வாழ்க்கையில் ஒரு சிறிய மௌனம், நிறைய விஷயங்களை உணர்த்தி வாழ்க்கைக்கு பக்குவத்தை ஏற்படுத்தும் என்றுதானே உனக்குத்தெரியும். ஆனால் இன்று வலியால் நீ அழுகையில் நீ
உன் மனதின் வேதனையையும் கஷ்டத்தையும் வெளியில்
குமுறலாய் கொட்டித் தீர்த்தாய்.
அதைப் பார்த்து உன் சாய் அப்பா ஆகிய நான் அதிர்ந்து என்ன செய்வது என்று அறியாது திகைத்து
உள்ளேன். என் பிள்ளையின் சந்தோஷம்
தான் என் சிரிப்பு. என் பிள்ளையின் கஷ்டம் தான் எனக்கு ஏற்பட்ட வலி. அதை உனக்குப்பதிலாக நான் தாங்குவேன்.
என் குழந்தையே ஒரு போதும் உன் சாய் அப்பா உன்னை தனித்து விட மாட்டேன். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை. என் குழந்தையின் வலி பனி போல்
வாழ்க்கையில் இருந்து தூரப்படுத்தும் வெளிச்சத்தின் சூரியனாய் நான் உன் உயிரான
சாய் இருப்பேன். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment