Friday, August 23, 2013

பாபா பயன்படுத்திய கிணறு

சீரடியில் பாபா பயன்படுத்திய கிணறு

சீரடி லெண்டித் தோட்டத்தில் பாபா பயன்படுத்திய கிணறு இன்றும் உள்ளது. சீரடியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்தக்கிணற்றை ஆழப்படுத்த சமீபத்தில் சீரடி சன்ஸ்தான் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கிணறு திறக்கப்பட்டு அதை தூர் வாரிய போது, அதில் ஏராளமான நாணயங்கள், நகைகள், மற்றும் பிறப் பொருட்கள் ஆகியவை கண்டு எடுக்கப்பட்டன. கிணற்றில் கிடந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போன்ற நாணயங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒண்ரரை லட்சம் என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பாபா பயன்படுத்தியக் கிணற்றின் மீதும் பக்தர்கள் செலுத்தும் பக்திக்கு சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
                                                        வி.நந்தினி,
                                                   சைதாப்பேட்டை,
                                                         சென்னை



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...