Saturday, August 24, 2013

பாபாவும் அனுமனும்



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

பாபா தன் பக்தர்களிடம் தன்னைப் பற்றி சொல்லும்போது, நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்குக் கடன் பட்டவன். உங்கள் தரிசனத்திலேயே திருப்தியடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்கள் மலத்திலுள்ள ஒரு புழு. அங்கனமாகவே என்னை நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக்க் கருதுகிறேன்!என்று சொன்னார்.
பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர் போல தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ, அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.
அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.
பார்த்தார் எனினும் பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை. 
காம உணர்வுகளைப் பற்றி கருதுங்கால் அவர் அனுமனைப் போன்ற பூரண பிரம்மசாரியுமாவார்.
எதன் பாலும் பற்றற்றவராக இருந்தார்.
அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.
சுருக்கமாக அவர் அவாவற்றவர்.
கட்டற்றவர்.
முழு நிறைவானவர்.


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 10


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...