Friday, August 30, 2013

சீரடிக்கு உன்னால் போக முடியுமா?


ஒருவர் நினைக்கலாம், நான் சீரடிக்குப் போய் என் விருப்பம் போல் தங்கப்போகிறேன் என்று. ஆனால் அது அவருடைய கைகளில் இல்லை. ஏனெனில் அவர் முழுக்க வேறு ஒருவருடைய (பாபாவுடைய) சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.
நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்த அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர். மற்றவர்களுடைய அகந்தை அவர் முன் செல்லுபடியாகாது.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.
சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன? அவர் முன் செல்லுபடியாகாது. நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும் வரை பாபா நம்மைப்பற்றி நினைக்கமாட்டார். அவருடைய மகிமையும் நமது காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டும் என்ற அருள் வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேச முடியும்?
ஸமர்த்த சாயியை தரிசனம் செய்யப் போக வேண்டும் என்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயி தேக வியோகம் அடையும் வரை அந்த நல் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மற்றும் சிலர் சீரடிக்குப் போவதை காலங் காலமாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர். போகலாம் போகலாம் என்று நாளை நீட்டிக்கொண்டே போகும் குணமே அவர்களைப் போக முடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மகா சமாதி அடைந்து விட்டார்.
நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டி காணும் நல் வாய்ப்பை இழந்தனர். இவ்விதமாக பச்சாதாபமே மிஞ்சியது. கடைசியில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும். சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன?

           அதற்கு பாபா அல்லவோ அனுமதி கொடுக்க வேண்டும். சுய 

முயற்சிகளால் மட்டும் எவரும் சீரடிக்குப் போகமுடியவில்லை. எவ்வளவு 

ஆழமான ஆவல் இருந்தாலும் விருப்பப்பட்ட நாள் வரை அங்கே 

தங்கமுடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, போய் என்று 

அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேர்ந்தது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...