Wednesday, February 15, 2017

தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.


பாபா எப்பொழுதும் தனது பக்தர்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.

பாபா பக்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற விஷயம். தன் பக்தனுக்கு அருளை மட்டுமின்றி பொருளையும் நம்மை கேட்க வைத்து கொடுக்கிறார், அழவைத்து தீர்வு தருகிறார். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். தனக்காக வேண்டிக்கொள்ள வரவழைத்து பிறருக்காக வேண்ட வைக்கிறார்.

தந்தையாக, தாயாக, சகோதரியாக, சகோதரனாக,பிள்ளையாக, நண்பனாக எல்லா உறவு முறைகளிலும் அவர் உதவத் தயாராக இருக்கிறார். ஆனால் உணர்வுகளை சேதப்படுத்தும் எந்த வடிவத்தையும் அவர் ஏற்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாபா நான்கு வழிகளை (தவம், தானம், கேள்வி, யோகம்) நமக்கு கற்பித்து, ஐந்து புலன்களை தாமாக அடங்க வைத்து ஆறுதலைத் தருகிறார். ஆத்மார்த்தமாக அவரை வணங்கும்போது அவற்றை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
--ஸ்ரீ சாயி தரிசனம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...