Tuesday, February 14, 2017

மந்திரத்தியானம்

தியானத்தின் போது சிலர் மணிகளை உருட்டி மந்திரத்தியானம் செய்கிறார்களே!  எப்படி உருட்டுவது? அது எப்படி பலன் தரும்?
                                  
நாம மந்திரத்தைச் சொல்லி முடித்த பிறகு ஒரு மணியாக உருட்ட வேண்டும். காயத்திரி மந்திரம் சொல்லும்போது முழுமையாக அந்த மந்திரத்தைச்சொன்ன பிறகே ஒரு மணியை உருட்டலாம்.
இரண்டாவது முறை மந்திரத்தை முழுமையாகச்சொன்னபிறகே அடுத்த மணியை உருட்டலாம்.
ஓம் சாயி என்ற வார்த்தையை மந்திரமாகச்சொல்லி ஒரு மணியை உருட்டலாம்.

ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ  சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:  சத்குரு சாயி நமோ நம

என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.

இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள்

ஓம் சாய் ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...