Saturday, September 20, 2014

சாயி புத்ரன் பதில்கள்

vanamali

வனமாலி என்பதற்கு என்ன பொருள்?

(ஜி. முரளி, சென்னை)

பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைக்கு வன மாலை என்று பொருள். இதை அணிந்தவர் (மகா விஷ்ணு) வனமாலி.

சாயி புத்ரன் பதில்கள்

அஷ்டபந்தன பூசை என்பது என்ன?

(ஏ. செந்தில், பள்ளிப்பட்டு)

புதுமனை புகுவிழாவின்போது வீட்டின் எட்டு திசைகளிலும் அந்தந்த திசைக்குரிய திக்குப் பாலர்களின் பெயர்களைக் கூறி இரண்டிரண்டு பூக்களைப் போட்டு பூஜை செய்வது அஷ்டபந்தன பூஜை எனப்படும்.

சாயி புத்ரன் பதில்கள்

இறந்தவர்களை தெற்கு நோக்கி வைப்பது ஏன்?

(என். பாலு, காஞ்சிபுரம்)

தெற்கு திசை எமனுக்கு உரியது.  இறந்தவர் தலையை தெற்கு திசையில் வைத்து அந்த உடலை எமனுக்கு அர்ப்பணிப்பதாகச் செய்வதுதான் இறந்தவரின் தலையை தென் திசையில் வைத்துக் கிடத்துவதன் பொருள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...