Monday, September 29, 2014

எப்போதும் காப்பேன்!

sai18



சாயி பக்தையான நான் சென்னையில் வசித்த போது, மும்பையில் இருந்த எனது தந்தையார் கீழே விழுந்து தொடை எலும்பு முறிந்துவிட்டதாக தகவல் வந்தது. அவரை கவனித்துக்கொள்ள ஆள் தேவை என்பதால் நான் அங்கு போக வேண்டிய சூழல்.
என்னிடம் ஒரு ரூபாய்கூட இல்லாத நிலையில், செய்வது அறியாது திகைத்தேன். ஐதராபாத்திலுள்ள என் தங்கை, மும்பை மெயிலுக்கு ஈ டிக்கெட் போட்டுக் கொடுத்தாள். அது வெயிட்டிங் லிஸ்டில் இருந்தது. எனது ஒன்றுவிட்ட சகோதரர் இதை கன்பர்ம் செய்து தருவதாகக் கூறியதால், ரயில் நிலையம் சென்றேன். டி.டியிடம் டிக்கெட்டை காண்பித்தபோது, ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை.
செய்வது அறியாது இரவு 12.30 மணி வரை அங்கு நின்றிருந்தேன். எனது தங்கைக்கு போன் செய்தேன். ஏதேனும் பஸ் பிடித்து ஐதராபாத் வந்துவிட்டால் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸில் மும்பைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினாள்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் ஆட்டோவில் சென்றேன். புறப்பட்ட போது எனக்கு முன்னால் இன்னொரு வண்டியில் பாபா முன்னால் செல்வது தெரிந்தது. தொடர்ந்து நாமஜெபம் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு பஸ் கிடைத்து ஐதராபாத் சென்று அங்கிருந்து மும்பை சென்றேன்.
அதேபோல, எனது தங்கை மகளின் திருமணம் முடிந்து ரயிலில் ஏறும்போது தாங்க முடியாத மூச்சுத்திணறல் வந்தது. ஆனால் அது ஸ்ரீ பாபாவின் கருணையால் சிறிறு நேரத்தில் சரியாகிவிட்டது. இருந்தபோதும், நாலைந்து நாட்களாக சரியாக சாப்பிட முடியாத நிலை தொடர்ந்தது.
இதே நிலையில் நான் சொந்த ஊரான நாக்பூர் வந்து சேர்ந்தேன். நாக்பூர் வந்த மறுநாள் இரவு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு என் மகனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன்.
இரண்டு மூன்று நாட்கள் ஐசியுவில் இருந்தபோது, எனது இரத்த நாளத்தில் இரண்டு அடைப்பு இருப்பது கண்டு பிடித்து ஸ்டண்ட் போட்டனர். மயக்க மருந்து கொடுக்கும்போது மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
நான் சாயி நாமத்தை சொல்லியபடி இருந்தேன். மருத்துவர்கள் சரியான சிகிச்சை செய்து காப்பாற்றினார்கள்.
நான் மத்திய வர்க்கத்துப் பெண் மணி. என்னிடம் சிகிச்சை பெறுவ தற்குக்கூட பணமில்லாத நிலை. இந்த நிலையில் எனது சகோதர சகோதரிகளும், உறவுக்காரர்களும் பணத்தாலும் சரீரத்தாலும் உதவி செய்து என்னைக் காப்பாற்றி அனுப்பினார்கள்.
இதேபோல, சமீபத்தில் என் மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென இரத்த சர்க்கரை அளவு குறைந்து விட்டதால், வேகமாகச் சென்று கொண்டு இருந்த வண்டியிலிருந்து விழுந்தேன். எனக்கு என்னவோ ஆகிவிட்டது என என்னுடைய மகன் பதறிப்போய் வண்டியை நிறுத்திவிட்டு கதறியபடி ஓடிவந்தான்.
எனக்கு சர்க்கரைக் குறைவால் ஏற்பட்ட மயக்கத்தைத் தவிர வேறு எதுவுமே ஆகவில்லை. பாபா எப்படித்தான் என்னைத் தாங்கிப் பிடித்துக்காப்பாற்றினாரோ தெரியாது..
எல்லையில்லாத அவரது கருணையை நினைக்கும்போது கண்களில் இருந்து நீர் கசிகிறது, உடல் புல்லரிக்கிறது. அவரது பக்தராக இருப்பதே கோடி புண்ணியமான செயலாகும்.
கமலா,நாக்பூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...